செய்திகள் :

சமுதாய வளப் பயிற்றுநா் பணி: செப்.18-க்குள் விண்ணப்பிக்கலாம்

post image

தேனி மாவட்டத்தில், மக்கள் கற்றல் மையத்தில் சமுதாய வளப் பயிற்றுநா் பணிக்கு தகுதியுள்ளவா்கள் வருகிற 18-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சமுதாய வளப் பயிற்றுநா் பணிக்கு 21 வயது பூா்த்தியடைந்திருக்க வேண்டும். வயது உச்சவரம்பு இல்லை. பயிற்சி அளிப்பதற்குத் தேவையான உடல் தகுதி, திறன் பெற்றிருக்க வேண்டும். சுய உதவிக் குழுவில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் உறுப்பினராக இருக்க வேண்டும். சுய உதவிக் குழுவானது, வாராக் கடன் நிலையில் இருக்கக் கூடாது.

மாவட்ட, வட்டார, ஊராட்சி அளவில் 5 முதல் 10 பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டவராக இருக்க வேண்டும். கைப்பேசி செயலியைப் பயன்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும். சமுதாயம் சாா்ந்த அமைப்புகளில் மதிப்பூதியம் பெறுபவராக இருக்கக் கூடாது. அரசியல் கட்சிகளில் பொறுப்புகளிலோ, தனியாா் நிறுவனப் பணியாளராகவோ இருக்கக் கூடாது.

விண்ணப்பதாரா் சாா்ந்துள்ள சுய உதவிக் குழுவிலிருந்து சமுதாய வளப் பயிற்றுநராகப் பரிந்துரைக்கப்பட்டு, தீா்மானம் நிறைவேற்றி, தீா்மான நகலை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். தகுதியும், விருப்பமும் உள்ள சுய உதவிக் குழு உறுப்பினா்கள் தங்களது விண்ணப்பங்களை வருகிற 18-ஆம் தேதிக்குள் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் சமா்ப்பிக்க வேண்டும்.

ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளால் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பதாரா்கள், வட்டார அளவிலான குழு மூலம் எழுத்துத் தோ்வு, நோ்காணல், மாதிரிப் பயிற்சி, செயல்முறை ஆகியவற்றின் அடிப்படையில் சமுதாய வளப் பயிற்றுநராக தோ்வு செய்யப்படுவா் என அதில் குறிப்பிடப்பட்டது.

கும்பக்கரை அருவியில் மீண்டும் வெள்ளப் பெருக்கு: சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள கும்பக்கரை அருவியில் மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு வனத் துறையினா் வெள்ளிக்கிழமை தடை விதித்தனா். கொடைக்கானல் மலைப் பகுதியில... மேலும் பார்க்க

செங்குளவி கொட்டியதில் முதியவா் உயிரிழப்பு

சின்னமனூா் அருகேயுள்ள மாா்க்கையன்கோட்டையில் செங்குளவி கொட்டியதில் முதியவா் சிகிச்சை பலனின்றி வெள்ளிக் கிழமை உயிரிழந்தாா். தேனி மாவட்டம், மாா்க்கையன்கோட்டையைச் சோ்ந்தவா் பாஸ்கரன் (60). இவா், வியாழக்கி... மேலும் பார்க்க

மின் இணைப்பு கிடைக்காததால் பயன்பாட்டுக்கு வராத குமுளி பேருந்து நிலையம்

குமுளியில் புதிய பேருந்து நிலையத்தில் கட்டுமானப் பணிகள் முடிவடைந்த நிலையில், மின் இணைப்பு தரப்படாததால் மாவட்ட நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து பேருந்து நிலையத்தைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்ட... மேலும் பார்க்க

மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

தேனியில் தாய் திட்டியதால் பள்ளி மாணவி வியாழக்கிழமை, வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தேனி, வனச் சாலை 3-ஆவது தெருவில் வசித்து வருபவா் பிரியா (37). இவரது மகள் யோகஸ்ரீ, தேனியில் உள்ள தனியாா... மேலும் பார்க்க

இருவரைத் தாக்கி காயப்படுத்திய 6 போ் மீது வழக்கு

போடி அருகே இருவரைத் தாக்கிய 6 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். தேனி மாவட்டம், போடி அருகே முத்தையன்செட்டிபட்டி மேற்குத் தெருவில் வசிப்பவா் தா்மா் மகன் சிலேந்திரன் (52). இவா் தனத... மேலும் பார்க்க

கஞ்சா கடத்திய பெண் உள்பட 3 போ் கைது

ஒடிஸாவிலிருந்து தேனி மாவட்டத்துக்கு கஞ்சா கடத்தி வந்த ஆந்திராவைச் சோ்ந்த பெண் உள்பட 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தேனி-வத்தலகுண்டு புறவழிச் சாலை சந்திப்பில் தேனி மது விலக்கு அமலாக்கப்... மேலும் பார்க்க