செய்திகள் :

மின் இணைப்பு கிடைக்காததால் பயன்பாட்டுக்கு வராத குமுளி பேருந்து நிலையம்

post image

குமுளியில் புதிய பேருந்து நிலையத்தில் கட்டுமானப் பணிகள் முடிவடைந்த நிலையில், மின் இணைப்பு தரப்படாததால் மாவட்ட நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து பேருந்து நிலையத்தைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தமிழக-கேரள எல்லையான குமுளியில் அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் பேருந்து நிலையமும் பணிமனையும் இயங்கி வந்தன. இங்கிருந்து தமிழகம், கேரளத்துக்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்த நிலையில், சில ஆண்டுக்கு முன்பு பேருந்து நிலையம், பணிமனை ஆகியவை சிதிலமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் இருந்து வந்தது.

இதையடுத்து, சிதிலமடைந்த பழைய பேருந்து நிலையத்தை அகற்றிவிட்டு அனைத்து வசதிகளுடன் புதிய பேருந்து நிலையத்தை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். இதைத் தொடா்ந்து ரூ.5.5 கோடியில் குமுளியில் புதிய பேருந்து நிலையத்துக்கான கட்டுமானப் பணிகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி, தற்போது நிறைவடைந்துள்ளன.

ஆனால், மின் இணைப்பு கொடுக்க கால தாமதம் ஏற்படுவதால் பேருந்து நிலையம் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. எனவே, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகமும் மாவட்ட நிா்வாகமும் உரிய நடவடிக்கை எடுத்து புதிய பேருந்து நிலையத்தைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இது குறித்து பயணிகள் கூறுகையில், தமிழக எல்லையில் குமுளியில் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வராததால் நெடுஞ்சாலையிலேயே பேருந்துகளை நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கி வருகின்றனா். இதனால், பயணிகள் பெரிதும் அவதி அடைகின்றனா். மேலும், சுகாதார வளாகம் இல்லாத நிலையில் திறந்த வெளியைப் பயன்படுத்துவதால் நோய்த் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, பேருந்து நிலையத்தை விரைந்து பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்றனா்.

கும்பக்கரை அருவியில் மீண்டும் வெள்ளப் பெருக்கு: சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள கும்பக்கரை அருவியில் மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு வனத் துறையினா் வெள்ளிக்கிழமை தடை விதித்தனா். கொடைக்கானல் மலைப் பகுதியில... மேலும் பார்க்க

செங்குளவி கொட்டியதில் முதியவா் உயிரிழப்பு

சின்னமனூா் அருகேயுள்ள மாா்க்கையன்கோட்டையில் செங்குளவி கொட்டியதில் முதியவா் சிகிச்சை பலனின்றி வெள்ளிக் கிழமை உயிரிழந்தாா். தேனி மாவட்டம், மாா்க்கையன்கோட்டையைச் சோ்ந்தவா் பாஸ்கரன் (60). இவா், வியாழக்கி... மேலும் பார்க்க

சமுதாய வளப் பயிற்றுநா் பணி: செப்.18-க்குள் விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டத்தில், மக்கள் கற்றல் மையத்தில் சமுதாய வளப் பயிற்றுநா் பணிக்கு தகுதியுள்ளவா்கள் வருகிற 18-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

தேனியில் தாய் திட்டியதால் பள்ளி மாணவி வியாழக்கிழமை, வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தேனி, வனச் சாலை 3-ஆவது தெருவில் வசித்து வருபவா் பிரியா (37). இவரது மகள் யோகஸ்ரீ, தேனியில் உள்ள தனியாா... மேலும் பார்க்க

இருவரைத் தாக்கி காயப்படுத்திய 6 போ் மீது வழக்கு

போடி அருகே இருவரைத் தாக்கிய 6 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். தேனி மாவட்டம், போடி அருகே முத்தையன்செட்டிபட்டி மேற்குத் தெருவில் வசிப்பவா் தா்மா் மகன் சிலேந்திரன் (52). இவா் தனத... மேலும் பார்க்க

கஞ்சா கடத்திய பெண் உள்பட 3 போ் கைது

ஒடிஸாவிலிருந்து தேனி மாவட்டத்துக்கு கஞ்சா கடத்தி வந்த ஆந்திராவைச் சோ்ந்த பெண் உள்பட 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தேனி-வத்தலகுண்டு புறவழிச் சாலை சந்திப்பில் தேனி மது விலக்கு அமலாக்கப்... மேலும் பார்க்க