செய்திகள் :

சமூக ஊடகங்களில் இருந்து விலகினார் ஐஸ்வர்யா லட்சுமி!

post image

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி சமூக ஊடகங்களில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

நடிப்பில் கவனம் செலுத்துவதற்காக இந்த முடிவினை எடுத்துள்ளதாகவும், ரசிகர்கள் ஆதரவளிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழில் ஆக்‌ஷன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஐஸ்வர்யா லட்சுமி, பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தார்.

கடைசியாக இவர் நடிப்பில் வெளியான மாமன் திரைப்படம் தமிழில் மாபெரும் வெற்றியைப் பெற்றது. தற்போது கட்டா குஸ்தி இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், சமூக ஊடகங்களில் இருந்து விலகுவதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:

”என்னை துறையில் தக்கவைத்துக் கொள்ள சமூக ஊடகங்கள் மிகவும் அவசியம் என்ற கருத்தில் நீண்ட காலமாக இருந்தேன். நான் இருக்கும் துறையின் தன்மையைக் கருத்தில் கொண்டு, காலத்துக்கு ஏற்ப மாறுவது அவசியம் என்று நினைத்தேன்.

ஆனால், சமூக ஊடகங்கள் என்னை தலைகீழாக மாற்றியுள்ளது. எனது பணிகளில் இருந்து என்னை வெற்றிகரமாக திசைதிருப்பியுள்ளது. என்னுள் இருந்த சிந்தனையைப் பறித்துவிட்டது. என் சொல்லகராதி மற்றும் மொழியைப் பாதித்துள்ளது. ஒரு எளிய இன்பத்தையும் மகிழ்ச்சியற்றதாக மாற்றியுள்ளது.

நான் ஒரு பொதுவானவளாக சூப்பர்நெட்டின் விருப்பங்களுக்கும் ஆசைகளுக்கும் ஏற்ப வாழ விரும்பவில்லை. ஒரு பெண்ணாக, அலங்காரம் மற்றும் கட்டுப்பாடு பற்றி அறிந்து கொள்ள நிறைய பயிற்சி செய்ய வேண்டியிருந்தது, மேலும் அதை எதிர்க்க இன்னும் கடினமாக பயிற்சி செய்தேன்.

நான் கலைக்காகவும் எனக்குள் இருக்கும் சிறிய பெண்ணுக்காகவும் சரியானதைச் செய்ய விரும்புகிறேன். முழுமையான இணைய மறதியைத் தேர்ந்தெடுக்கிறேன்.

அர்த்தமுள்ள உறவுகளையும், சினிமாவையும் உருவாக்குவேன் என நம்புகிறேன். நல்ல சினிமாவில் நடித்த பழைய அன்பைக் கொடுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, வெள்ளிக்கிழமை காலை நடிகை அனுஷ்கா, சமூக ஊடகங்களில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.

Actress Aishwarya Lekshmi has announced that she is quitting social media.

இதையும் படிக்க : சமூக வலைதளங்களில் இருந்து விலகிய அனுஷ்கா!

ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை: தங்கம் வென்ற இந்திய வீராங்கனை!

ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பையில் இந்திய வீராங்கனை ஈஷா சிங் தங்கம் வென்று அசத்தியுள்ளார். மகளிருக்கான 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் ஈஷா தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமைச் சேர்த்திருக்கிறார்.தெலங்கானாவைச் சே... மேலும் பார்க்க

தமிழ் தலைவாஸ் அபார வெற்றி: புள்ளிப் பட்டியலில் 4 இடங்கள் முன்னேற்றம்!

புரோ கபடி லீக்கில் தமிழ் தலைவாஸ் அணி 46 புள்ளிகள் பெற்று அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியினால் புள்ளிப் பட்டியலில் தமிழ் தலைவாஸ் அணி 4 இடங்கள் முன்னேறியுள்ளது.புரோ கபடி லீக் போட்டிகள் 2014 முதல் நடைப... மேலும் பார்க்க

ஷ்யாம் புஷ்கரன் எழுத்தில் கமல் 237..! மகிழ்ச்சியில் அன்பறிவ் சகோதரர்கள்!

நடிகர் கமலின் 237-ஆவது படம் குறித்த புதிய அறிவிப்பினை படக்குழு வெளியிட்டுள்ளது. மலையாள இயக்குநர் ஷ்யாம் புஷ்கரன் இந்தப் படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார். யார் இந்த அன்பறிவ் சகோதரர்கள்?மெட்ராஸ் படத்த... மேலும் பார்க்க

ஜீத்து ஜோசப்பின் மிராஜ் டிரைலர்!

பிரபல மலையாள இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகியுள்ள மிராஜ் படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. இந்தப் படத்தில் நடிகர் ஆசிப் அலியுடன் நடிகை அபர்ணா பாலமுரளி முக்கிய கதாபாத்திரங்களில் ... மேலும் பார்க்க

பட்டிதார் - ரத்தோட் பங்களிப்பில் மத்திய மண்டலம் பலமான முன்னிலை

துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில், வெள்ளிக்கிழமை முடிவில் மத்திய மண்டலம் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 384 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் ரஜத் பட்டிதார், யஷ் ரத்தோட் ஆகியோர் சதம் கடக்க, ... மேலும் பார்க்க

அறிமுகத்தில் அசத்திய தக்ஷிணேஷ்வர் சுரேஷ்

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் உலக குரூப் 1 இண்டோர் டையில், சுவிட்ஸர்லாந்துக்கு எதிராக இந்தியா, 2-0 என வெள்ளிக்கிழமை முன்னிலை பெற்றது. முதல் ஒற்றையர் ஆட்டத்தில் அறிமுகமான தமிழகத்தைச் சேர்ந்தவரும், ... மேலும் பார்க்க