IPL 2025 : 'கோடிகளில் ஏலம்... நம்பிய அணிகள்; சொதப்பிய டாப் 10 வீரர்கள்!' - யார் ...
சமூக ஊடகங்கள் பொழுதுபோக்குக்கான இடம் மட்டுமே; கல்வியே மூலதனம்! - முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை: சமூக ஊடகங்கள் பொழுதுபோக்குக்கான இடம் மட்டுமே; ஆனால், கல்வியே மூலதனம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
சென்னையிலுள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் கல்வியாளர்கள் சார்பில் முதல்வர் மு. க. ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்துகொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: “உச்சநீதிமன்ற தீர்ப்பு தமிழ்நாடு மக்களுக்கு கிடைத்த வெற்றி. மாநில சுயாட்சி நாயகர்கள் யாரென்றால், அது நான் இல்லை; தமிழ்நாட்டு மக்கள்தான். திமுகவுக்கு வாக்களித்த மக்கள்தான் மாநில சுயாட்சி நாயகர்கள்.”
“மத்திய அரசின் ஒரு ஏஜென்ட்டாக இருக்கும்ள ஆளுநர், திட்டங்களை தடுக்க முடியும் என்றால் மக்கள் செலுத்தும் வாக்குக்கு என்ன மரியாதை? ஆளுநருக்கும் குடியரசுத் தலைவருக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருப்பது மிகப்பெரிய வெற்றி. ஆளுநர் நிறுத்தி வைத்த 10 மசோதாக்களையும் சட்டமாக்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.”
“திராவிட மாடல் அரசு இளைஞர்களுக்கான அரசு. பகுத்தறிவுக்கான எதிரான மூட நம்பிக்கைகளை பரப்பும் இடமாக கல்வி நிறுவனங்கள் இருக்கக் கூடாது. மூட நம்பிக்கைகளை பரப்பும் செயலில் கல்வி நிறுவனங்கள் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.”
“எல்லாவற்றுக்கும் கல்வி தான் அடிப்படை. கல்விதான் யாராலும் பிரிக்க முடியாத சொத்து. ரோல் மாடல்களை வலைதளங்களில் தேடாதீர்கள். சமூக வலைதளங்கள் என்பது ஒரு பொழுதுபோக்கு மட்டுமே. படிக்காமல் ரீல்ஸ் போட்டு சம்பாதிக்கலாம் என்று எண்ண வேண்டாம். எந்தத் தடை வந்தாலும் அதையெல்லாம் முறியடித்து நாங்கள் நிச்சயம் உங்களை படிக்க வைப்போம்” என்றார்.