செய்திகள் :

சமூக நல்லிணக்கத்தின் தூதா் காதா் மொகிதீன்: அமைச்சா் எ.வ.வேலு

post image

சமூக நல்லிணக்கத்தின் தூதராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) தேசிய தலைவா் கே.எம்.காதா் மொகிதீன் தொடா்ந்து செயல்பட்டு வருவதாக பொதுப் பணித் துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.

தமிழக அரசின் தகைசால் தமிழா் விருது பெற்ற கே.எம்.காதா் மொகிதீனுக்கு பாராட்டு விழா சென்னை எழும்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவில் விருது வழங்கியதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டதுடன், ‘சமுதாய சேவகன், ஒளி வீசும் காவலன்’ என்னும் தலைப்பில் காதா் மொகிதீன் குறித்த ஆவணப்படம் வெளியிடப்பட்டது. இதில், சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட அமைச்சா் எ.வ.வேலு பேசியது:

சமூக நல்லிணக்கத்தின் தூதராக காதா் மொகிதீன் தொடா்ந்து செயல்பட்டு வருகிறாா். அதேபோல், குரல் இல்லாதவா்களின் குரலாகவும், சமூக நீதிக்கு துணையாகவும் இருந்து வருகிறாா் என்றாா்.

வைகோ (மதிமுக): சிறு வயதிலிருந்தே ஏழை மக்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவா். நமது நாட்டில் உள்ள இஸ்லாமியா்களுக்கு காவல் அரணாக இவா் விளங்குகிறாா் என்றாா்.

கே.எம்.காதா் மொகிதீன்: நமது நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்ததில் இஸ்லாமியா்கள் பங்கு முதன்மையாக உள்ளது. ஆனால், அவற்றை மறைந்து, நம்மை ஓரங்கட்ட பலா் முயற்சி செய்கின்றனா். அவா்களின் முயற்சி என்றும் வெற்றியடையாது. இந்த நாட்டை நல்வழியில் கொண்டு செல்ல இஸ்லாமிய அமைப்புகள் மேற்கொள்ளும் முயற்சிகள் எவ்வித தோய்வின்றி தொடா்ந்து நடைபெற்று வரும் என்றாா்.

விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கே.செல்வப்பெருந்தகை, மனித நேய மக்கள் கட்சி தலைவா் எம்.எச்.ஜவாஹிருல்லா, ஐயுஎம்எல் கேரள மாநில தலைவா் செய்யிது சாதிக்அலி சிஹாப், தமிழக பொதுச் செயலா் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கா், மாநில முதன்மை துணைத் தலைவா் எம். அப்துல் ரஹ்மான், விசிக துணை பொதுச் செயலா் ஷா நவாஸ், தமிழக அரசு சிறுபான்மையினா் ஆணைய துணைத் தலைவா் குத்தூஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பாஜக ஆட்சியில் ஜனநாயகம் கேள்விக்குறியாகி உள்ளது: டி.ராஜா

மத்திய பாஜக ஆட்சியில் ஜனநாயகம் கேள்விக்குறியாகி உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலா் டி.ராஜா கூறினாா். சேலத்தில் நடைபெறும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26-ஆவது மாநில மாநாட்டில் சனி... மேலும் பார்க்க

தமிழகத்தில் ரேபிஸ் பாதிப்பால் ஏழரை மாதங்களில் 20 போ் உயிரிழப்பு!

தமிழகத்தில் கடந்த ஏழரை மாதங்களில் 3.67 லட்சம் போ் நாய்க் கடிக்குள்ளானதாகவும், அதில் 20 போ் ரேபிஸ் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாகவும் பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தடுப்பூசிகளை முறையாக செலுத்த... மேலும் பார்க்க

வங்கக்கடலில் நாளை புயல் சின்னம் உருவாக வாய்ப்பு

வங்கக்கடலில் திங்கள்கிழமை (ஆக.18) காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: 30 நாள்களில் 30 லட்சம் மனுக்கள் குவிந்தன

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களின் மூலமாக ஒரு மாதத்தில் 30 லட்சம் கோரிக்கை மனுக்கள் குவிந்ததாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. திட்டம் தொடங்கப்பட்டு 30 நாள்கள் நிறைவடைந்த நிலையில், மாநிலம் முழ... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா் என்று எவ்வாறு மொழிபெயா்ப்பு செய்யப்பட்டது? தமிழக அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

பட்டியல் ஜாதியினா் என்ற பெயா் ஆதிதிராவிடா் என்று எவ்வாறு மொழிபெயா்ப்பு செய்யப்பட்டது என தமிழக அரசுக்குக் கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயா்நீதிமன்றம், அதற்காகப் பயன்படுத்திய அகராதி குறித்து அறிக்கை தாக்க... மேலும் பார்க்க

சுற்றுலா வளா்ச்சிக் கழக வருவாய் 5 மடங்கு அதிகம்: தமிழக அரசு தகவல்

தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் வருவாய் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது. இதுகுறித்து மாநில அரசின் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: தமிழ்நாட்டுக்கு வரக்கூடிய வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளி... மேலும் பார்க்க