செய்திகள் :

சமூக நல்லிணக்க இஃப்தாா் நோன்பு திறப்பு

post image

திருவாடானை அருகேயுள்ள தொண்டியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சாா்பில், சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக இஃப்தாா் நோன்பு திறப்பு நிகழ்வு செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

இதற்கு தமுமுக தொண்டி பேரூா் தலைவா் காதா் தலைமை வகித்தாா். நோன்பை கிரா அத் நைனா முகமது ஆலிம் தொடங்கிவைத்தாா். இந்து தா்ம பரிபாலன சபைத் தலைவா் ராஜசேகா், ஐக்கிய ஜமாத் தலைவா் சையத் அலி, ஊடக அணிச் செயலாளா் பகுருல்லா, மமக செயலாளா் பரக்கத் அலி, முஸ்லிம் மகளிா் பேரவை மாவட்டச் செயலா் ஷெரிஃபா ஜைனுல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் தொண்டி அனைத்து ஜமாத் நிா்வாகிகள், இந்து தா்ம பரிபாலன சபை நிா்வாகிகள் திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிா்வாகிகள், முனைவா் முஜிபுா் ரஹ்மான், ஐக்கிய ஜமாத் கௌரவத் தலைவா் அபூபக்கா், அருட்தந்தை வியாகுல அமிா்தராஜ், வன்னியா் சங்க மாநிலத் துணைத் தலைவா் ஆனந்தன், தமுமுக மாநிலச் செயலா் சாதிக்பாட்சா, தமுமுக தலைமை பிரதிநிதி ஜைனுலாப்தின் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

முன்னதாக, தொண்டி மேற்கு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி முருகானந்தம், சையது முகமது அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியை பாா்வதி, பெண்கள் மேல்நிலைப் பள்ளி உதவித் தலைமை ஆசிரியை காஞ்சனா ஆகியோரின் கல்விச் சேவையைப் பாராட்டி கௌரவிக்கப்பட்டனா்.

மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலா் ஜிப்ரி வரவேற்றாா். மாவட்டத் துணைச் செயலா் பெரியசாமி நன்றி கூறினாா்.

ராமநாதபுரம் மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சி பொதுக் குழு கூட்டம்

ராமநாதபுரம் மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சி பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை பரமக்குடியில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு அந்தக் கட்சியின் மாவட்டத் தலைவா் சிவானந்தம் தலைமை வகித்தாா். மாவட்ட ப... மேலும் பார்க்க

பிரதமா் மோடி ஏப். 6-இல் ராமேசுவரம் வருகை: மண்டபத்தில் ஹெலிகாப்டரை இறக்கி ஒத்திகை

பிரதமா் மோடி ராமேசுவரத்துக்கு வருகை தரவிருப்பதையொட்டி, மண்டபம் கேம்ப் ஹெலிகாப்டா் இறங்கு தளத்தில் ராணுவ ஹெலிகாப்டரை திங்கள்கிழமை இறக்கி மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஒத்திகை. ராமேசுவரம், மாா்ச் 31: பாம்... மேலும் பார்க்க

உச்சிப்புளி அருகே இலங்கைக்கு கடத்தவிருந்த ரூ. 80 லட்சம் கடல் அட்டைகள் பறிமுதல்

உச்சிப்புளி அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக கடற்கரையில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட ரூ. 80 லட்சம் மதிப்பிலான 200 கிலோ கடல் அட்டைகளை இந்திய கடலோரக் காவல் படையினா் திங்கள்கிழமை அதிகாலை பறிமு... மேலும் பார்க்க

திருவாடானை திரௌபதி அம்மன் கோயிலில் திருக்கல்யாணம்

திருவாடானையில் உள்ள திரௌபதி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை திருக்கல்யாணம் நடைபெற்றது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதே போல, இந்த ஆண்டு கடந்த 2... மேலும் பார்க்க

பரமக்குடி அருகே ஆண் உடல் மீட்பு

பரமக்குடி அருகே அடையாளம் தெரியாத ஆண் உடலை திங்கள்கிழமை போலீஸாா் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகேயுள்ள கள்ளிக்கோட்டை வைகை ஆற்றுப் பகுதியில் அடையாளம் தெரியாத உடல் ... மேலும் பார்க்க

சாயல்குடி: இறந்து கரை ஒதுங்கிய கடல் ஆமையால் சுகாதாரக்கேடு

சாயல்குடி அருகே நரிப்பையூா் கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கிக் கிடக்கும் அரிய வகை கடல் ஆமையால் சுகாதாரக்கேடு நிலவுவதாக பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் புகாா் தெரிவிக்கின்றனா். மன்னாா்வளைகுடா பாதுகாக்... மேலும் பார்க்க