செய்திகள் :

``சமூக வலைதளங்கள் துன்பம் அளிக்கும் கருவியாகிவிட்டது!'' -புத்தக வெளியீட்டில் நடிகை வசுந்தரா

post image

‘பேராண்மை’, ‘போராளி’, ‘தலைக்கூத்தல்’, ‘கண்ணை நம்பாதே’ போன்ற திரைப்படங்களில் நடித்து திரையுலகில் தனக்கென ஒரு இடம் பிடித்தவர் நடிகை வசுந்தரா. தனது திறமையான நடிப்பால் மக்கள் மனதில் இடம் பிடித்தவர்.

சமீபத்தில், சூர்யா நடித்த ‘கங்குவா’ திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நடிப்பை தாண்டி தற்போது வசுந்தரா எழுத்தாளராகவும் அவதாரமெடுத்திருக்கிறார்.

Actress Vasundhara's Book
Actress Vasundhara's Book

நடிகை வசுந்தரா தனது நாவலான ‘தி அக்கியூஸ்ட்’ (The Accused) என்ற கிரைம் நாவலை வெளியிட்டுள்ளார். அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த மர்மமான கொலை ஒன்றை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ள இந்த நாவல் மக்களை உற்சாகத்திலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தக்கூடிய திருப்பங்களை கொண்டதாக அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த நாவலில் பெண்கள் எதிர்கொள்ளும் சமூக பிரச்னைகள், குறிப்பாக சமூக வலைதளங்களில் சந்திக்கும் தொல்லைகள், தவறான குற்றச்சாட்டுகள் போன்ற விஷயங்கள் ஆழமாக பேசப்பட்டுள்ளன.

புத்தக வெளியீட்டு விழாவில் நடிகை வசுந்தரா, ``பெண்கள் எல்லா துறைகளிலும் தைரியமாக செயல்பட வேண்டும். துணிச்சலுடனும் சுயமரியாதையுடனும் பல்வேறு துறைகளில் சாதிக்க வேண்டும் .

Actress Vasundhara's `The Accused' Book Launch
Actress Vasundhara's `The Accused' Book Launch

பெண்கள் எங்குச் சென்றாலும் தங்கள் உரிமையை நிலைநாட்ட வேண்டும். சமூக வலைதளங்கள் இன்று வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல. அவை சிலருக்கு துன்பம் அளிக்கும் கருவியாகவும் மாறிவிட்டது.

பெண்கள் எந்த சூழ்நிலையையும் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். தங்கள் சுயமரியாதையை பாதுகாத்து சிறப்பாக செயல்பட வேண்டும்." எனக் கூறினார்.

Pa.Ranjith : இணையும் ஆர்யா - தினேஷ் கூட்டணி; ஹீரோயின் இவர் தான்! - 'வேட்டுவம்' அப்டேட்

அடுத்த அதிரடிக்கு ரெடியாகிவிட்டார் பா.ரஞ்சித். விக்ரமை வைத்து 'தங்கலான்' படத்தில் மண்ணின் பூர்வகுடிகள் தங்களின் வேரை அறிந்துகொள்ளும் பயணத்தை மாயாஜாலங்கள் கலந்து கொடுத்த ரஞ்சித், இப்போது 'வேட்டுவம்' பட... மேலும் பார்க்க

மாயாவி டு ரெட்ரோ : `நமக்குள்ள ஏன் இந்த இடைவெளினு சூர்யா சார் கேட்ட கேள்வி' - சிங்கம்புலி ஷேரிங்க்ஸ்

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருந்த `மகாராஜா' திரைப்படம் நடிகர் சிங்கம்புலிக்கும் பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. காமெடி வேடங்களில் நகைச்சுவைப் புயலாகச் சுற்றியவர் இந்தப் படத்தில் வில்லனாக களமிற... மேலும் பார்க்க

FEFSI: `வேதனையான நாள்; நான் இன்றைக்குப் படம் இல்லாமல் இருக்கலாம்; ஆனால்..' - ஆர்.கே.செல்வமணி ஆதங்கம்

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி, ``தயாரிப்பாளர்களுக்குள் ஒரு ஒற்றுமை இல்லை. ஃபெஃப்சி அமைப்பை அழித்து புதிய அமைப்பை உருவாக்க நினைக்கிறார்கள். அதற்கு ஒத்துழைப்புக் ... மேலும் பார்க்க

Vikram: ``வீர தீர சூரன் அடுத்தடுத்த பாகங்கள் சீக்கிரமே வரும்'' - விக்ரம் கொடுத்த அப்டேட்

அருண்குமார் இயக்கத்தில் விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, பிருத்வி, சூரஜ் வெஞ்சாரமூடு, துஷாரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'வீர தீர சூரன் பாகம் -2'. பல்வேறு தடைகளுக்குப் பிறகு கடந்த வியாழக... மேலும் பார்க்க

Sardar 2: "சர்தார் 2 படம் மிகப்பெரிய போரைப் பற்றி பேசுது" - கார்த்தி சொல்லும் ரகசியம்!

நடிகர் கார்த்தி, இயக்குநர் பி.எஸ்.மித்ரன் கூட்டணியில் 2022-ல் வெளியான `சர்தார்' படத்தின் இரண்டு பாகம் தயாராகி வருகிறது. சர்தார் பாகம் 2-ல் புதிதாக மாளவிகா மோகன், வில்லனாக எஸ்.ஜே. சூர்யா ஆகியோர் இணைந்த... மேலும் பார்க்க