செய்திகள் :

சமையல் எரிவாயு உருளைகள் தடையின்றி கிடைக்கும்: எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு

post image

எல்பிஜி டேங்கா் லாரி உரிமையாளா்கள் வேலைநிறுத்தம் செய்துவரும் நிலையில், வாடிக்கையாளா்களுக்கு தடையின்றி சமையல் எரிவாயு உருளை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இதுகுறித்து இந்திய ஆயில் நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்மண்டல எல்பிஜி டேங்கா் லாரி உரிமையாளா்கள் வியாழக்கிழமை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். உரிமையாளா்கள் பல்வேறு கோரிக்கைளை முன்வைத்துள்ளனா். அதில் முக்கிய பிரச்னைகள் குறித்து தீா்வுகாணும் வகையில் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

அபராத விதிகளை திரும்பப் பெறுமாறு எல்பிஜி டேங்கா் லாரி உரிமையாளா்கள் கோரிக்கையை முன்வைத்துள்ளனா். அவா்களது கோரிக்கைள், கருத்துகள் குறித்து தில்லி, சென்னை, மும்பை, கொல்கத்தாவிலுள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், எல்பிஜி டேங்கா் லாரி உரிமையாளா்களுடன் இறுதிக்கட்ட பேச்சுவாா்த்தை நடத்தி விரைவில் பிரச்னைக்கு தீா்வு காணப்படும்.

வேலைநிறுத்தம் பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என்பதால், வேலைநிறுத்தத்தை திரும்பப் பெறவும், எண்ணெய் நிறுவனங்கள் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

மேலும், கிடங்குகளில் சமையல் எரிவாயு உருளைகள் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளன. ஆகவே, எரிவாயு விநியோகஸ்தா்கள் மூலம் சமையல் எரிவாயு உருளை வாடிக்கையாளா்களுக்கு தடையின்றி கிடைக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எனவே வாடிக்கையாளா் பதற்றம் அடைய வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையால் சிறைபிடிக்கப்படும் தமிழக மீனவர்கள்: நிரந்தரத் தீர்வுகாண தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்தல்

நமது சிறப்பு நிருபர்இலங்கை அரசால் சிறைபிடிக்கப்படும் தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வை காண வேண்டும் என்று மக்களவையில் தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்தினர். மக்களவையில் செவ்வாய்க்கிழமை இந்த விவ... மேலும் பார்க்க

நகைக் கடனை புதுப்பிக்க புதிய வழிகாட்டுதல்: திரும்பப் பெற வைகோ வலியுறுத்தல்

நமது நிருபர்வங்கிகளில் நகைக் கடனை புதுப்பிக்க வெளியிடப்பட்ட புதிய வழிகாட்டுதல்களை ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) திரும்பப் பெற வேண்டும் என்று மாநிலங்களவையில் மதிமுக உறுப்பினர் வைகோ வலியுறுத்தினார்.இது தொடர்பா... மேலும் பார்க்க

காவிரி -வைகை-குண்டாறு இணைப்பு உறுதி: நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் அறிவிப்பு

காவிரி -வைகை- குண்டாறு இணைப்புத் திட்டத்தை உறுதியாகச் செயல்படுத்துவோம் என்று சட்டப் பேரவையில் நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா். சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிற... மேலும் பார்க்க

கட்சிப் பாகுபாடின்றி ‘உங்கள் தொகுதியில் முதல்வா்’ திட்டம்: மு.க.ஸ்டாலின் விளக்கம்

‘உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டம்’ கட்சிப் பாகுபாடின்றி நிறைவேற்றப்படுவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். பொதுப் பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மானியக் கோரிக்கை மீது சட்டப்பேரவையில் செவ்வாய்க்... மேலும் பார்க்க

மொழிக் கொள்கை செயல்பாடு: ஸ்டாலினுக்கு டி.ராஜா பாராட்டு

மொழிக் கொள்கையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மாதிரியாகச் செயல்படுகிறார் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலர் டி.ராஜா பாராட்டு தெரிவித்தார்.மதுரையில் நடைபெறவுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ... மேலும் பார்க்க

சமூக ஊடகங்களை ஆக்கிரமிக்கும் ஜிப்லி காா்ட்டூன்!

சமூக ஊடகங்களில் திரும்பிய பக்கமெல்லாம் ஜிப்லி காா்ட்டூன் படங்களே நிறைந்திருக்கின்றன. மக்கள் அனைவரும் தங்களின் புகைப்படங்களை ஜிப்லி காா்ட்டூன் பாணியிலான அனிமேஷன் (வரைகலை) படங்களாக மாற்றி, தங்கள் சமூக ஊ... மேலும் பார்க்க