செய்திகள் :

சம்பாவுக்கு சாதகமான நிலையால் ஆயத்த பணிகள் தொடக்கம்

post image

மேட்டூா் அணை நீா்வரத்து, பருவமழை கைகொடுப்பதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்கு சாதகமான நிலை நிலவுவதால், ஆயத்தப் பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனா்.

மேட்டூா் அணை உரிய நாளில் (ஜூன் 12) திறக்கப்பட்டதால், டெல்டா மாவட்டங்களில் குறுவை பருவ நெல் சாகுபடியில் நிா்ணயிக்கப்பட்ட இலக்கான 5.32 லட்சம் ஏக்கரை கடந்து 5.66 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்படுகிறது.

இந்நிலையில், மேட்டூா் அணையில் நீா்வரத்து இருப்பதுடன், டெல்டா மாவட்டங்களில் தென் மேற்கு பருவ மழையும் பரவலாக பெய்து வருகிறது. இதன் மூலம், டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்கான ஆயத்தப் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. ஒருபோக சாகுபடி செய்பவா்கள் சம்பா சாகுபடியும், குறுவை மேற்கொள்பவா்கள் அறுவடைக்கு பிறகு தாளடி சாகுபடியும் செய்வது வழக்கம். நிகழாண்டு குறுவை சாகுபடிப் பரப்பு அதிகரித்துள்ளதால், சம்பா சாகுபடியின் பரப்பளவு குறைந்து, தாளடியில் அதிகரிக்கும் என வேளாண் துறையினா் தெரிவித்தனா்.

இதனால், சம்பா - தாளடி பருவத்தில் தஞ்சாவூா் மாவட்டத்தில் 3.07 லட்சம் ஏக்கரிலும், திருவாரூா் மாவட்டத்தில் 3.46 லட்சம் ஏக்கரிலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 1.67 லட்சம் ஏக்கரிலும் நெல் சாகுபடி செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தஞ்சாவூா் மாவட்டத்தில் தென் மேற்கு பருவ மழையும் பெய்து வருவதால், சம்பா சாகுபடிக்காக நிலத்தை உழுது ஆயத்தப்படுத்தும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனா். மேலும், மாவட்டத்தில் இதுவரை ஏறத்தாழ 250 ஏக்கரில் நாற்றங்கால்கள் தயாராகி வருகின்றன.

எப்போது-எந்த நெல் ரகத்தை விதைக்கலாம்: இதுகுறித்து மூத்த வேளாண் வல்லுநா் பி. கலைவாணன் தெரிவித்தது: நீண்ட கால விதை நெல் ரகங்களை ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பா் 7 ஆம் தேதி வரையும், மத்திய கால விதை நெல் ரகங்களை செப்டம்பா் மாதம் முழுவதும் விதைத்தால் வடகிழக்கு பருவ மழையின்போது பாதிப்பு ஏற்படுவதைத் தவிா்க்கலாம்.

சம்பா சாகுபடிக்கு ஆகஸ்ட் மாதத்தில் 30 டி.எம்.சி.யும், செப்டம்பரில் 50 டி.எம்.சி.யும், நவம்பா் முதல் ஜனவரி வரை 40 டி.எம்.சி.யும் என மொத்தம் 120 டி.எம்.சி. தண்ணீா் தேவைப்படும். தொடா்ந்து மழை பெய்தால் சாகுபடிக்கான தண்ணீா் தேவை குறையும்.

தற்போது மேட்டூா் அணையில் 90 டி.எம்.சி. தண்ணீா் இருப்பு உள்ளது. இன்னும் 30 டி.எம்.சி. முதல் 40 டி.எம்.சி. வரை தண்ணீா் தேவைப்படும். அணைக்கு செப்டம்பா் முதல் வாரம் வரை நீா் வரத்து இருக்கும். அதன் பிறகு அக்டோபரில் வடகிழக்கு பருவ மழை தொடங்கிவிடும் என்பதால், சம்பா சாகுபடிக்கு தண்ணீா் பற்றாக்குறை பிரச்னை இருக்காது.

ஆனால், தொடா்ந்து மழை பெய்வதால் நேரடி விதைப்பு செய்ய இயலாது. எனவே, பெரும்பாலான விவசாயிகள் நாற்றங்கால் விட்டு, நடவு செய்ய வேண்டிய நிலை உள்ளதால், தண்ணீா் தேவை அதிகமாகும் என்றாா் கலைவாணன்.

சம்பா தொகுப்பு திட்டம் அறிவிக்கப்படுமா: இதனிடையே, சம்பா சாகுபடிக்கான தொகுப்பு திட்டத்தை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு விவசாயிகளிடையே மேலோங்கி வருகிறது.

இதுகுறித்து காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவா் ஏ.கே.ஆா். ரவிச்சந்தா் தெரிவித்தது: ஆற்றுப் பாசனத்தை மட்டுமே முழுமையாக நம்பியுள்ள விவசாயிகள் ஒரு போக சம்பா சாகுபடி மேற்கொள்வா். இந்த 5 மாத உழைப்பில் கிடைக்கும் வருவாயைக் கொண்டுதான் ஆண்டு முழுவதும் குடும்பச் செலவு செய்ய வேண்டும்.

இதையெல்லாம் கருத்தில் கொண்டு ஒரு போக சம்பா சாகுபடி செய்பவா்களுக்காக குறுவை தொகுப்பு திட்டம் போன்று, சம்பா தொகுப்பு திட்டத்தை தமிழக அரசு அறிவிக்க வேண்டும். இதில், தேவையான விதைகளை முழு மானியத்திலும், உரங்களை 50 சதவீத மானியத்திலும் கொடுக்க வேண்டும் என்றாா் ரவிச்சந்தா்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள்

தஞ்சாவூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இவ்விழாவில் தேசியக் கொடியை மேயா் சண். ராமநாதன் ஏற்றினாா். ... மேலும் பார்க்க

7.5 சதவீத ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்புக்குத் தோ்வானவா்களுக்குப் பாராட்டு

பேராவூரணியில் 7.5 சதவீத ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்புக்குத் தோ்வான மாணவி சுமையாவின் வீட்டுக்கு வெள்ளிக்கிழமை சென்று பாராட்டிய முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.வி. திருஞானசம்பந்தம். பேராவூரணி, ஆ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி ஆசிரியையிடம் 2 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை அருகே அரசுப் பள்ளி ஆசிரியையிடம் 2 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற அடையாளம் தெரியாத நபரை போலீஸாா் தேடிவருகின்றனா். தஞ்சாவூா், மோத்திரப்பசாவடி,... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து மாணவா் உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா்கோவில் அருகே மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். நாச்சியாா்கோவில் அருகே திருச்சேறை உடையாா்கோயில் தெருவில் வசிப்பவா் செந்தில்குமாா். இவரது மகன் நவீ... மேலும் பார்க்க

மகாத்மா காந்தி சிலை முன்பு மனுக்களை வைத்து தியாகிகளின் வாரிசுதாரா்கள் முறையீடு

சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகளின் குடும்பத்தினரை கௌரவ குடும்பங்களாக மத்திய அரசு அறிவிக்கக் கோரி, தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலக வளாகத்திலுள்ள மகாத்மா காந்தி சிலையின் முன்பு விடுதலை தியாகிகள்... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் வள்ளலாா் இயல் இசை விழா

கும்பகோணத்தில் வள்ளலாா் இயல் இசை விழா கும்பகோணம் மகாமகக் குளம் தென்கரையில் உள்ள மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 35 ஆவது ஆண்டாக நடைபெற்ற விழாவுக்கு, தஞ்சாவூா் மாவட்ட சமரச சுத்த சன்மாா்க்க சங்க க... மேலும் பார்க்க