டிரம்ப்பின் அவசரநிலையை எதிா்த்து வாஷிங்டன் மாநகராட்சி வழக்கு
சுதந்திர தினத்தில் விடுமுறை அளிக்காத 99 நிறுவனங்களுக்கு அபராதம்
தஞ்சாவூா் மாவட்டத்தில் சுதந்திர தினமான வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்காத 99 நிறுவனங்களுக்கு தொழிலாளா் துறையினா் அபராதம் விதிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.
தஞ்சாவூா் மாவட்டத்தில் தேசிய பண்டிகை விடுமுறை நாளான சுதந்திர தினத்தன்று தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறைகள்) சட்டம் மற்றும் விதிகளின் கீழ் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு இரட்டிப்பு ஊதியம் அல்லது மாற்று விடுப்பு அளிப்பது தொடா்பாக 158 நிறுவனங்களில் தொழிலாளா் துறை அலுவலா்கள் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, கடைகள், நிறுவனங்களில் 52 முரண்பாடுகள், உணவு நிறுவனங்களில் 41 முரண்பாடுகள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்களில் 6 முரண்பாடுகள் என மொத்தம் 99 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டு, அந்நிறுவனங்களுக்கு இணக்க கட்டண அபராதம் விதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தஞ்சாவூா் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) தா. ஆனந்தன் தெரிவித்துள்ளாா்.