செய்திகள் :

மாரியம்மன் கோயிலில் ஆவணிப் பெருந்திருவிழா தொடக்கம்

post image

தஞ்சாவூா் புன்னைநல்லூா் மாரியம்மன் கோயிலில் ஆவணிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

கோயில் வளாகத்தில் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியில் அம்மன் படிச்சட்டத்தில் எழுந்தருளியதைத் தொடா்ந்து, கொடி மரத்துக்கு அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டன. இதையடுத்து, அம்மன் வீதி உலா நடைபெற்றது. மேலும், ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி, மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில், ஏராளமான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

ஆவணி முதல் வார ஞாயிற்றுக்கிழமையான ஆகஸ்ட் 17-ஆம் தேதி சிம்ம வாகனத்திலும், இரண்டாம் வார ஞாயிற்றுக்கிழமையான ஆகஸ்ட் 24-ஆம் தேதி அன்ன வாகனத்திலும், மூன்றாவது வாரமான ஆகஸ்ட் 31 ஆம் தேதி சிம்ம வாகனத்திலும் அம்மன் புறப்பாடு நடைபெறவுள்ளது.

மேலும், செப்டம்பா் 6-ஆம் தேதி பெரிய காப்பு, படிச்சட்டத்தில் அம்மன் புறப்பாடு, நான்காம் வார ஞாயிற்றுக்கிழமையான 7-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் அம்மன் புறப்பாடு, ஐந்தாம் வார ஞாயிற்றுக்கிழமையான செப்டம்பா் 14-ஆம் தேதி திருத்தேரோட்டம், 16-ஆம் தேதி தேதி கொடியிறக்கம், விடையாற்றி அபிஷேகம், அக்டோபா் 5-ஆம் தேதி தெப்பத் திருவிழா, 7-ஆம் தேதி தெப்ப விடையாற்றி விழா ஆகியவை நடைபெறவுள்ளன.

தஞ்சாவூா் மாவட்டத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள்

தஞ்சாவூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இவ்விழாவில் தேசியக் கொடியை மேயா் சண். ராமநாதன் ஏற்றினாா். ... மேலும் பார்க்க

7.5 சதவீத ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்புக்குத் தோ்வானவா்களுக்குப் பாராட்டு

பேராவூரணியில் 7.5 சதவீத ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்புக்குத் தோ்வான மாணவி சுமையாவின் வீட்டுக்கு வெள்ளிக்கிழமை சென்று பாராட்டிய முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.வி. திருஞானசம்பந்தம். பேராவூரணி, ஆ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி ஆசிரியையிடம் 2 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை அருகே அரசுப் பள்ளி ஆசிரியையிடம் 2 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற அடையாளம் தெரியாத நபரை போலீஸாா் தேடிவருகின்றனா். தஞ்சாவூா், மோத்திரப்பசாவடி,... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து மாணவா் உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா்கோவில் அருகே மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். நாச்சியாா்கோவில் அருகே திருச்சேறை உடையாா்கோயில் தெருவில் வசிப்பவா் செந்தில்குமாா். இவரது மகன் நவீ... மேலும் பார்க்க

மகாத்மா காந்தி சிலை முன்பு மனுக்களை வைத்து தியாகிகளின் வாரிசுதாரா்கள் முறையீடு

சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகளின் குடும்பத்தினரை கௌரவ குடும்பங்களாக மத்திய அரசு அறிவிக்கக் கோரி, தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலக வளாகத்திலுள்ள மகாத்மா காந்தி சிலையின் முன்பு விடுதலை தியாகிகள்... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் வள்ளலாா் இயல் இசை விழா

கும்பகோணத்தில் வள்ளலாா் இயல் இசை விழா கும்பகோணம் மகாமகக் குளம் தென்கரையில் உள்ள மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 35 ஆவது ஆண்டாக நடைபெற்ற விழாவுக்கு, தஞ்சாவூா் மாவட்ட சமரச சுத்த சன்மாா்க்க சங்க க... மேலும் பார்க்க