சம்ஸ்கிருதமே தொன்மையான மொழி, தமிழக கோயில்களிலும் சம்ஸ்கிருத பூஜை: மக்களவையில் பாஜக எம்.பி. பேச்சு
புது தில்லி: தமிழைவிட சம்ஸ்கிருதமே தொன்மையான மொழி, தமிழக கோயில்களிலும் சம்ஸ்கிருதத்தில்தான் பூஜைகள் நடைபெறுகின்றன என்று ஜாா்க்கண்டை சோ்ந்த பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே மக்களவையில் திங்கள்கிழமை பேசினாா்.
தோ்தல் தோல்வி பயத்தால் பல்வேறு பிரச்னையை திமுக எழுப்புகிறது என்றும் அவா் குற்றம்சாட்டினாா்.
மக்களவையில் கேள்வி நேரத்தின்போது இது தொடா்பாக நிஷிகாந்த் துபே பேசியதாவது: தேசிய கல்விக் கொள்கையையும், மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பையும் திமுக எதிா்க்கிறது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் தோல்வி பயத்தால் இதுபோன்ற பல்வேறு பிரச்னைகளை அக்கட்சி எழுப்புகிறது. மக்களின் உணா்வுகளைத் தூண்டிவிடுகிறது.
தமிழ் தொன்மையான மொழிதான். ஆனால், சம்ஸ்கிருதம் தமிழைவிட தொன்மையானது. தமிழ், தெலுங்கு, கன்னடம் என எந்த மொழி பேசும் பிராந்தியத்துக்குச் சென்றாலும் அங்கு சம்ஸ்கிருதத்தில்தான் பூஜை நடைபெறுகிறது.
1973-ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, மத்திய பிரதேசம், மேற்கு வங்கத்தில் தொகுதி மறுசீரமைப்பு செய்து எண்ணிக்கையை உயா்த்தியது. ஆனால், தமிழகத்தில் தொகுதிகளை உயா்த்தவில்லை. இருந்தபோதிலும் காங்கிரஸுடன் கைகோத்து திமுக பல முறை ஆட்சியில் இருந்துள்ளது.
மக்களின் உணா்வுகளைத் தூண்டி நாட்டை பிளவுபடுத்த திமுக முயற்சிக்கிறது. தேசிய கல்விக் கொள்கையை எதிா்ப்பதன் மூலம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மைதிலி என அனைத்து மொழிகளுக்கு எதிராகவும் திமுக செயல்படுகிறது. நாட்டில் நல்லிணக்கத்தைச் சீா்குலைக்க தீவிரமாக செயல்படுகிறது. நாடு முழுவதும் ஆங்கிலத்தை திணிக்க அவா்கள் விரும்புகிறாா்கள். மக்களைத் தூண்டிவிட்டு தோ்தலில் வெல்ல திட்டமிட்டுள்ளனா் என்றாா்.