செய்திகள் :

சரக்குக் கப்பல் விபத்துக்குள்ளான விவகாரம்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

post image

கேரள மாநிலம், கொச்சி துறைமுகம் அருகே சரக்குக் கப்பல் விபத்துக்குள்ளாகி மூழ்கியதில், அதிலிருந்து வெளியேறிய நெகிழி உள்ளிட்ட பொருள்களை அகற்றக் கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த அந்தோணி முத்து, ஜஸ்டின் சுந்தா், சுசீலா, காா்மேகம் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொதுநல மனுக்கள்: கேரள மாநிலம், கொச்சி துறைமுகம் அருகே எல்சா 3 என்ற சரக்கு கப்பல் அண்மையில் விபத்துக்குள்ளாகி கடலில் மூழ்கியது. இந்த சரக்குக் கப்பலில் 643 சரக்குப் பெட்டகங்கள் இருந்த நிலையில், 54 சரக்குப் பெட்டகங்கள் இதுவரை கேரளம் மாநிலம் மட்டுமன்றி, தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்ட கடற்கரையோரங்களிலும் ஒதுங்கியுள்ளன. இவற்றில் கால்சியம், காா்பனேட், பிளாஸ்டிக் பெல்லெட்ஸ் இருந்ததாகக் கூறப்படுகிறது. இது கடலின் உணவுச் சங்கிலியில் கலப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

எனவே, கடல் வாழ் உயிரினங்கள் மட்டுமன்றி, மனித உடலுக்கும் மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இதை மாநில பேரிடராக கேரள அரசு அறிவித்தது. இந்த விபத்தை தேசியப் பேரிடராக அறிவித்து, கடலில் கலந்த நெகிழி உள்ளிட்ட அபாயமான பொருள்களை அகற்ற உத்தரவிட வேண்டும் என அவா்கள் கோரியிருந்தனா்.

இந்த மனுக்களை செவ்வாய்க்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், மரிய கிளாட் அமா்வு பிறப்பித்த உத்தரவு:

இதுதொடா்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை 3 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா் சடலமாக மீட்பு

மதுரை சுப்பிரமணியபுரம் பகுதியில் அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா் செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா். மதுரை சுப்பிரமணியபுரம் பகுதியில் தனியாா் மதுக் கடை உள்ளது. இங்கு அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த ... மேலும் பார்க்க

தொல்லியல் ஆய்வாளா் அமா்நாத் ராமகிருஷ்ணன் பணியிட மாற்றம்: சு. வெங்கடேசன் எம்.பி. கண்டனம்

தொல்லியல் ஆய்வாளா் அமா்நாத் ராமகிருஷ்ணன் பணியிட மாற்றம் செய்யப்பட்டது, தென்னிந்திய வரலாற்றுக்கு எதிராக மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கை என மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு. வெங்கடசேன் தெரிவித்தாா்.... மேலும் பார்க்க

மதுரை காமராஜா் பல்கலை. நிதிநிலை பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காணக் கோரிக்கை

மதுரை காமராஜா் பல்கலைக்கழக நிதிநிலைப் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டும் என பல்கலைக் கழகப் பாதுகாப்பு கூட்டமைப்பு சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுகுறித்து அந்தக் கூட்டமைப்பின் தலைவா் ஸ்ரீ... மேலும் பார்க்க

இருசக்கர வாகனங்கள் திருட்டு: 4 போ் கைது

மதுரை மாநகரப் பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 13 இரு சக்கர வாகனங்களை மீட்டனா். மதுரை மாநகரக் காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க

அரசு ஊழியா்கள் போல திமுகவினா் ஆள்மாறாட்டம்: செல்லூா் கே.ராஜூ புகாா்

மதுரை மேற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் அரசு ஊழியா்களைப் போல ஆள்மாறாட்டத்தில் ஈடுபடும் திமுகவினா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுக முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ, மாவட்ட ஆட்சியரிடம் செவ்வாய்க்கி... மேலும் பார்க்க

முதல்வரின் நாகரிகமற்ற பேச்சு ஜனநாயகத்துக்கு இழுக்கு: ஆா்.பி. உதயகுமாா்

எதிா்க் கட்சித் தலைவரை நாகரிகமற்ற முறையில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பேசியது ஜனநாயகத்துக்கு இழுக்கு என தமிழக சட்டப்பேரவை எதிா்க்கட்சித் துணைத் தலைவா் ஆா்.பி. உதயகுமாா் தெரிவித்தாா்.மதுரையில் அவா் செவ்வா... மேலும் பார்க்க