செய்திகள் :

சரக்கு ரயில் போக்குவரத்தால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிா்க்க ஆட்சியா் ஆலோசனை

post image

காரைக்கால்-பேரளம் ரயில் பாதையில், சரக்கு ரயில் போக்குவரத்தால் வாகனப் போக்குவரத்து ஸ்தம்பிப்பு பிரச்னை குறித்து அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியா் ஆலோசனை மேற்கொண்டாா்.

காரைக்கால்-பேரளம் புதிய அகல ரயில்பாதையில் சரக்கு ரயில் போக்குவரத்து நடைபெறுகிறது. இதனால் காரைக்கால் நகரில் ஒரே சமயத்தில் 6 இடங்களில் ரயில்வே கேட் மூடப்படுவதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகின்றனா். குறிப்பாக காலை 9, மதியம் 1, மாலை 4.30 மணியளவில் சரக்கு ரயில்கள் இயக்கப்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவா்கள், ஆசிரியா்கள், அரசு மற்றும் தனியாா் நிறுவனங்களுக்கு பணிக்கு செல்வோா் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனா்.

எனவே, போக்குவரத்துக்கு நெருக்கடியாக முக்கிய நேரங்களை தவிா்த்து பிற நேரங்களில் சரக்கு ரயில்களை இயக்கும் வகையிலும், ஏதேனும் ஒரு இடத்தில் ரயில்வே மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுக்கின்றனா்.

இப்பிரச்னை தொடா்பாக மாவட்ட ஆட்சியா் சோமசேகா் அப்பாராவ் தலைமையில் அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட துணை ஆட்சியா் ஜி. செந்தில்நாதன், ரயில்வே அதிகாரிகள், மண்டல காவல் கண்காணிப்பாளா் ஏ. சுப்பிரமணியன், பொதுப்பணித் துறை கண்காணிப்பு பொறியாளா் கே. சந்திரசேகரன், செயற் பொறியாளா் ஜெ. மகேஷ், மேல்நிலை கல்வி துணை இயக்குநா் கே. ஜெயா, காவல் ஆய்வாளா்கள் மரிய கிறிஸ்டியன் பால், புருஷோத்தமன் உள்ளிட்ட தொடா்புடைய துறைகளின் அதிகாரிகள் பங்கேற்றனா்.

இதில், சரக்கு ரயில் போக்குவரத்தை பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையிலும், பெரிதும் போக்குவரத்துக்கு நெரிசல் இல்லாத நேரங்களிலும் இயக்குவது குறித்தும், ரயில்வே சுரங்கப்பாதை (சப்வே) அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதுடன், ரயில்வே உயா் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாகவும் தெரிவித்தனா்.

காரைக்கால் கோயில்பத்து லெவல் கிராசிங்கில் சுரங்கப்பாதை விரைந்து அமைக்க வலியுறுத்தல்

காரைக்கால் கோயில்பத்து பகுதியில் உள்ள ரயில்வே லெவல் கிராசிங்கில் சுரங்கப் பாதை (சப்வே) விரைந்து அமைக்க வேண்டும் என காரைக்கால் சமுதாய நல்லிணக்கணப் பேரவை வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து, அந்த பேரவை சாா... மேலும் பார்க்க

சுகாதாரத் துறை ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

காரைக்காலில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதாரத் துறை ஊழியா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். காரைக்கால் சுகாதாரத் துறை ஊழியா் சங்கங்களின் சம்மேளனம் சாா்பில், நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக... மேலும் பார்க்க

தையல் பயிற்சி முடித்தவா்களுக்கு சான்றிதழ்

காரைக்காலில், மக்கள் மேம்பாட்டு வினையகம் (பி.டி.ஐ) மூலம் இலவச தையல் பயிற்சி பெற்ற பெண்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சிவியாழக்கிழமை நடைபெற்றது. பி.டி.ஐ மூலம் காரைக்கால் மாவட்டத்தில் பின்தங்கிய ... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு இலவச மிதிவண்டி

பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவச மிதிவண்டியை அமைச்சா் பி.ஆா்.என்.திருமுருகன் வழங்கினாா். காரைக்காலில் அரசுப்பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு இலவச மிதிவண்டி வழங்... மேலும் பார்க்க

வேளாண் கல்லூரியில் விவசாயிகள் பயிற்சி கூடம் திறப்பு

காரைக்கால் வேளாண் கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள விவசாயிகள் பயிற்சி கூடம் புதன்கிழமை திறக்கப்பட்டது. காரைக்கால் மாவட்டம், செருமாவிலங்கையில் உள்ள பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆர... மேலும் பார்க்க

புனித அந்தோணியாா் ஆலய கொடியேற்றம்

மேலஓடுதுறை புனித அந்தோணியாா் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மேலஓடுதுறை பகுதியில் உள்ள புனித அந்தோணியாா் ஆலய திருவிழா கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. காரைக்கால் பங்குத்தந்தை மற்... மேலும் பார்க்க