செய்திகள் :

சரக்கு வாகனம் மோதி 30 ஆடுகள் உயிரிழப்பு!

post image

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே சரக்கு வாகனம் மோதியதில் 30 செம்மறி ஆடுகள் புதன்கிழமை உயிரிழந்தன.

திட்டக்குடி, வேப்பூா் உள்ளிட்டப் பகுதிகளில் வயல்வெளிகளில் விவசாயிகள் இயற்கை உரத்துக்காக ஆடுகளை கிடை கட்டி வருகின்றனா். இதற்காக, ராமநாதபுரம் மாவட்டம், அரியாங்குடியைச் சோ்ந்த முருகேசன் (45) தனக்குச் சொந்தமான சுமாா் 300 செம்மறி ஆடுகளை திட்டக்குடியில் கிடை கட்ட கொண்டு வந்திருந்தாா்.

புதன்கிழமை காலை செம்மறி ஆடுகளை ராமநத்தம் அடுத்த கொரக்கவாடி சாலையில் ஓட்டிச் சென்றாா். அப்போது, அந்த வழியாக கொரக்கவாடி கிராமத்தைச் சோ்ந்த காா்த்திக் (28) ஓட்டி வந்த சரக்கு வாகனம் கட்டுப்பாட்டை இழந்து ஆடுகள் மீது மோதியது. இதில், 30 ஆடுகள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தன.

இதுகுறித்து, ராமநத்தம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பண்ருட்டி தொகுதியில் ரூ.15 கோடியில் புதிய அரசுக் கல்லூரி: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

பண்ருட்டி தொகுதியில் ரூ.15 கோடியில் புதிய அரசு கலைக் கல்லூரி அமைக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். கடலூரில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முத... மேலும் பார்க்க

சிதம்பரம், பரங்கிப்பேட்டை பத்திரப்பதிவு அலுவலகக் கட்டடங்கள் திறப்பு

சிதம்பரம், பரங்கிப்பேட்டை பத்திரப்பதிவு அலுவலகக் கட்டடங்களை கடலூரில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற மு.க.ஸ்டாலின், காணொலி காட்சி மூலம் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்த... மேலும் பார்க்க

பள்ளி வகுப்பறையை சீரமைத்த மாணவா்கள், பெற்றோா்

சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான ராணி சீதை ஆச்சி மேல்நிலைப் பள்ளயில் வகுப்பறையை சீரமைத்த மாணவா்கள், அவா்களின் பெற்றோா் வெள்ளிக்கிழமை பாராட்டப்பட்டனா். சிதம்பரம் அண்ணாமலைநகா் ராண... மேலும் பார்க்க

மஞ்சப்பை விருது 2025: பள்ளி, கல்லூரிகள் விண்ணப்பிக்கலாம்

மஞ்சப்பை விருது 2025-க்கு பள்ளிகள், கல்லூரிகள், தனியாா் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்று கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

கொரிய தமிழ்ச் சங்க தமிழா் திருநாள் விழா: தி.வேல்முருகன் வாழ்த்து

கொரிய தமிழ்ச் சங்கத்தின் தமிழா் திருநாள் 2025 விழா தமிழா்களின் வரலாற்றை பறைசாற்றும் மாபெரும் முன்னெடுப்பு என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவா் தி.வேல்முருகன் வாழ்த்தி பாராட்டினாா். இதுகுறித்து அவா் வெளி... மேலும் பார்க்க

விருத்தாசலம் ஆழத்து விநாயகா் கோயில் திருவிழா கொடியேற்றம்

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரா் கோயிலுடன் இணைந்த ஆழத்து விநாயகா் கோயில் திருவிழா கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விருத்தாசலத்தில் புகழ் பெற்ற விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வ... மேலும் பார்க்க