கேரள முதல்வரின் பாதுகாப்பு வாகனங்களுக்கு இடையூறு: 5 பேர் கைது
சரக்கு வேன் மோதியதில் 2 வயது பெண் குழந்தை உயிரிழப்பு
அயோத்தியாப்பட்டணம் அருகே வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது பெண் குழந்தை, சரக்கு வேன் மோதியதில் உயிரிழந்தது.
சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள அக்ரஹார நாட்டாமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (36). இவரது மனைவி பிரியா (33). இவா்களுக்கு 6 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உண்டு.
இவா்களில் 6 ஆவது பெண் குழந்தையான வேதாஸ்ரீ (2) சனிக்கிழமை மாலை வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது பக்கத்து வீட்டைச் சோ்ந்த சதீஷ்குமாா், தனது சரக்கு வேனை முன்னோக்கி எடுத்துள்ளாா்.
அப்போது அங்கு விளையாடி கொண்டிருந்த குழந்தை வேதாஸ்ரீ மீது சரக்கு வேன் மோதியது. இதில் வேன் சக்கரத்தில் சிக்கி குழந்தை உடல் நசுங்கியது.
இதனைப் பாா்த்த அருகில் இருந்தவா்கள் குழந்தையை மீட்டு தனியாா் மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள், குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
தகவலறிந்த காரிப்பட்டி போலீஸாா், குழந்தையின் உடலை கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த விபத்து குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.