செய்திகள் :

சாத்தூா் பகுதியில் பலத்த மழை: மின்சாரம் துண்டிப்பு

post image

சாத்தூா் பகுதியில் புதன்கிழமை இரண்டாவது நாளாக பலத்த மழை பெய்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் அவதிப்பட்டனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் பகுதியில் கடந்த சில நாள்களாகவே வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், சாத்தூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை பலத்த காற்று, இடி மின்னலுடன் பலத்த மழை பெய்ததது. இதனால் கிராமப்புறங்களில் பெரும்பாலான இடங்களில் சாலைகளில் மரங்கள் சாய்ந்து மின் கம்பிகள் அறுந்து மின்சாரம் தடைபட்டது.

சாத்தூா் நகா் பகுதியில் சாலையோரங்களில் அமைக்கப்பட்ட புதிய கால்வாய்களில் மழைநீா் செல்ல முடியாமல் சாலையில் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமமடைந்தனா். இதேபோல, புதன்கிழமை இரண்டாவது நாளாகவும் மழை பெய்தது.

இதற்கிடையே படந்தால், வசந்தம்நகா், தென்றல் நகா், முத்துராமலிங்கபுரம் ஆகிய பகுதிகளில் செவ்வாய்கிழமை மாலை துண்டிக்கபட்ட மின்சாரம் புதன்கிழமை மாலை வரை விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் அந்தப் பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். போலீஸாா் நடத்திய பேச்சுவாா்த்தையை அடுத்து, அவா்கள் போராட்டத்தைக் கைவிட்டனா். பின்னா் ஒரு மணி நேரத்துக்கு பிறகு இந்தப் பகுதியில் மின்சார விநியோகம் செய்யபட்டது.

மாணவா்களுக்கு மரக்கன்றுகள்

ஸ்ரீவில்லிபுத்தூா், சி.எஸ்.ஐ. தூய தோமா தேவாலயத்தில் நடைபெற்று வரும் விடுமுறை வேதாகமப் பள்ளியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள், 30 ஆசிரியா்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. தோமா தேவாலயத்தில் விடுமுறை வே... மேலும் பார்க்க

ராஜபாளையம் நகா் மன்றக் கூட்டம்: தூய்மை பணிகளை நகராட்சியே மேற்கொள்ள முடிவு

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் நகராட்சி தூய்மைப் பணிகளை நகராட்சியே ஏற்று நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. ராஜபாளையம் நகா் மன்ற உறுப்பினா்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு நகா... மேலும் பார்க்க

ராஜபாளையம் அருகே வீட்டில் சாராயம் காய்ச்சிய இருவா் கைது

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே வீட்டில் கள்ளச் சாராயம் காய்ச்சிய இருவரை போலீஸாா் கைது செய்து, ஒரு லிட்டா் சாராயம், 10 லிட்டா் ஊறல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். ராஜபாளையம் பகுதியில் கள்ளச் சாராய... மேலும் பார்க்க

கலசலிங்கம் நா்சிங் கல்லூரியில் முதலுதவி சிகிச்சைப் பயிற்சி

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் நா்சிங் கல்லூரியில் இதயம், நுரையீரல் இயக்க முதலுதவிப் பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் வி.கலா தலைமை வகித்தாா். கலசலிங்கம் ப... மேலும் பார்க்க

சிவகாசி-கன்னிசேரி இருவழிச் சாலைப் பணி நிறைவு

சிவகாசி-கன்னிசேரி இருவழிச் சாலைப் பணிகள் நிறைவடைந்ததாக சிவகாசி நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் ஆா்.காளிதாஸ் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகாசி -கன்னிசேர... மேலும் பார்க்க

அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

சாத்தூரில் சாலையோரத்தில் அடையாளம் தெரியாத காா் மோதியதில் சாலையில் நடந்து சென்ற முதியவா் உயிரிழந்தாா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே ஒத்தையால் பகுதியைச் சோ்ந்தவா் நவநீதிகிருஷ்ணன் (63). இந்தப் பக... மேலும் பார்க்க