செய்திகள் :

சாம்பியன்ஸ் டிராபிக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!

post image

சாம்பியன்ஸ் டிராபிக்கான பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (ஜனவரி 31) அறிவித்துள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கி மார்ச 9 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. போட்டிகள் அனைத்தும் பாகிஸ்தானில் நடைபெறுகின்றன. இந்தியாவுக்கான போட்டிகள் மட்டும் துபையில் நடைபெறுகிறது. சாம்பியன்ஸ் டிராபிக்கான அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், பாகிஸ்தான் அணி மட்டும் அறிவிக்கப்படாமல் இருந்தது.

இந்த நிலையில், சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடருக்கான பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (ஜனவரி 31) அறிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான பாகிஸ்தான் அணி விவரம்

முகமது ரிஸ்வான் (கேப்டன்), பாபர் அசாம், ஃபகர் ஸமான், கம்ரான் குலாம், சௌத் ஷகீல், தையாப் தாஹிர், ஃபாஹீம் அஷ்ரஃப், குஷ்தில் ஷா, சல்மான் அலி அகா (துணைக் கேப்டன்), உஸ்மான் கான், அப்ரார் அகமது, ஹாரிஸ் ரௌஃப், முகமது ஹஸ்னைன், நஷீம் ஷா மற்றும் ஷாகின் ஷா அஃப்ரிடி.

தென்னாப்பிரிக்கா அபாரம்; இங்கிலாந்துக்கு ஹாட்ரிக் தோல்வி!

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கராச்சியில் நடைபெற்ற இன்றையப் போட்டியில்... மேலும் பார்க்க

ஒருநாள் போட்டிகளில் தென்னாப்பிரிக்க வேகப் பந்துவீச்சாளர் சாதனை!

ஒருநாள் போட்டிகளில் தென்னாப்பிரிக்க அணிக்காக அந்த அணியின் வேகப் பந்துவீச்சாளர் லுங்கி இங்கிடி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் கராச்சியில் நடைபெற்று வரும் இன்றையப்... மேலும் பார்க்க

அரையிறுதியில் தென்னாப்பிரிக்கா; வெளியேறியது ஆப்கானிஸ்தான்!

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு தென்னாப்பிரிக்கா முன்னேறியது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை மூன்று அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றிருந்தன. க... மேலும் பார்க்க

கேப்டனாக ஜோஸ் பட்லருக்கு கடைசி போட்டி; 179 ரன்களுக்கு ஆட்டமிழந்த இங்கிலாந்து!

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 179 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கராச்சியில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் இங்கிலாந்து ம... மேலும் பார்க்க

ரிஷப் பந்த் விளையாடாதது மிகவும் கடினமாக இருக்கிறது: இந்திய அணியின் பயிற்சியாளர்

இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ரிஷப் பந்த் விளையாட முடியாதது மிகவும் கடிமனமாக இருப்பதாக அணியின் உதவிப் பயிற்சியாளர் ரியான் டென் டொஸ்சாட் தெரிவித்துள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி இ... மேலும் பார்க்க

நியூசி.க்கு எதிரான போட்டியில் முகமது ஷமிக்கு பதில் அர்ஷ்தீப் சிங் விளையாடுகிறாரா?

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் முகமது ஷமிக்கு ஓய்வு அளிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை மூன்ற... மேலும் பார்க்க