செய்திகள் :

சாராய விற்பனையைத் தட்டிக்கேட்ட இரு இளைஞர்கள் படுகொலை

post image

மயிலாடுதுறையில் சாராய விற்பனையைத் தட்டிக் கேட்ட இளைஞர்களை சாராய வியாபாரிகள் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் முட்டம் கிராமத்தில் ராஜ்குமார், தங்கதுரை, மூவேந்தன் மூவரும் சாராயம் விற்பனை செய்து வந்துள்ளனர். மேலும், சாராய விற்பனை குறித்து தட்டிக் கேட்பவர்கள் மீது தாக்குதல் நடத்துவதுடன், கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்னர், காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையின்போது, சாராயம் விற்பனை செய்து வந்த ராஜ்குமார் கைது செய்யப்பட்டார்.

இருப்பினும், ஜாமீனில் வெளிவந்த ராஜ்குமார், மீண்டும் சாராய விற்பனையைத் தொடங்கினார். தொடர்ந்து, தெருவில் சாராயம் விற்பது குறித்து தட்டிக் கேட்ட சிறுவன் ஒருவனை ராஜ்குமார் தாக்கியுள்ளார். சிறுவன் தாக்கப்பட்டதைக் கண்ட ஹரிஷ், ஹரிசக்தி என்ற இளைஞர்கள் இருவரும் சேர்ந்து ராஜ்குமாரை தட்டிக் கேட்டுள்ளனர்.

இதனையடுத்து, ராஜ்குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் தங்கதுரை, மூவேந்தனும் சேர்ந்து இளைஞர்கள் இருவரையும் சரமாரியாகத் தாக்கினர். இளைஞர்கள் இருவரும் கத்தியால் குத்தப்பட்ட நிலையில், சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

இதையும் படிக்க:இபிஎஸ்ஸின் குரலே, பா.ஜ.க.விற்கான டப்பிங் குரல்தான்: முதல்வர் ஸ்டாலின்

உயிரிழந்த ஹரிஷ் பாலிடெக்னிக் முடித்துவிட்டு வேலை தேடியவர் என்றும், ஹரிசக்தி பொறியியல் மாணவர் என்றும் கூறுகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்ததுடன், உயிரிழந்த இளைஞர்களின் உடல்களை உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மருத்துவமனையில் காவல்துறையினரும் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே, இளைஞர்களை படுகொலை செய்த மூவரில் ராஜ்குமார், தங்கதுரை இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சாராய வியாபாரத்தை காவல்துறையினர் தடுக்காமல், சாராய வியாபாரிகளுக்கு உடந்தையாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். மேலும், உயிரிழந்த இளைஞர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குமாறு கோரிக்கையும் விடுத்தனர்.

சென்னை புளியந்தோப்பு மக்களுக்கு பிரியாணி பரிமாறிய முதல்வர் மு.க. ஸ்டாலின்!

சென்னை புளியந்தோப்பில் குடியிருப்பு ஆணைகளை வழங்கிய முதல்வர் மு.க. ஸ்டாலின், மக்களுக்கு பிரியாணியும் பரிமாறினார். சென்னை புளியந்தோப்பில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்ட முதல்வர் மு.க. ஸ்டாலின், நகர்... மேலும் பார்க்க

தேர்தலில் அறிவித்த வாக்குறுதிகளில் 90% நிறைவேற்றம்: மு.க. ஸ்டாலின்

தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டங்களில் 100-க்கு 90 சதவீதத்துக்கு மேல் நிறைவேற்றியுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 712 குடியிருப... மேலும் பார்க்க

தமிழகத்தில் மலையேற்றத்துக்கு ஏப். 15 வரை தடை!

தமிழகத்தில் மலையேற்றத்துக்கு வருகின்ற ஏப்ரல் 15ஆம் தேதி வரை தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.நீலகிரி, கொடைக்கானல், கன்னியாகுமரி போன்ற பிரபலமான சுற்றுலாத் தலங்களை உள்ளடக்கி 14 மாவட்டங்களில் 40 ... மேலும் பார்க்க

அன்பில் மகேஷ் பதவி விலக வேண்டும்: அண்ணாமலை

தமிழகத்தில் பள்ளி மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துவருவதால், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதவி விலக வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.இது குறித்து ... மேலும் பார்க்க

வேங்கைவயல் வழக்கு: 3 பேருக்கு சம்மன்; மார்ச் 11-ல் ஆஜராக உத்தரவு

வேங்கைவயல் நீர்த்தேக்கத் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரத்தில், 3 பேருக்கு புதுக்கோட்டை நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ள காவலர் முரளி ராஜா, முத்துகிரு... மேலும் பார்க்க

பெங்களூரு கிழக்கு ரயில் நிலையத்தில் ரயில்கள் நிற்காது

தமிழகத்தில் இருந்து செல்லும் விரைவு ரயில்கள் மாா்ச் 13-ஆம் தேதி முதல் பெங்களூரு கிழக்கு ரயில் நிலையத்தில் நிற்காது என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெளி... மேலும் பார்க்க