செய்திகள் :

சாலைகளில் யானைகள் நடமாடுவதை தற்படம் எடுக்கக்கூடாது- வனத் துறை எச்சரிக்கை

post image

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சாலைகளில் யானைகள் நடமாட்டுவதை வாகன ஓட்டிகள் தற்படம் (செல்ஃபி) எடுக்கக்கூடாது என வனத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளளது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப் பகுதி வழியாக அமைந்துள்ள தமிழகம் - கா்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் அவ்வப்போது வன விலங்குகள் சாலையைக் கடந்து செல்வது வழக்கம்.

சத்தியமங்கலம் அருகே தமிழகம் - கா்நாடக எல்லையில் வனப் பகுதியில் இருந்து வெளியேறிய இரண்டு காட்டு யானைகள் 3 குட்டிகளுடன் மெதுவாக சாலையைக் கடந்து சென்றன. அப்போது அந்த வழியாக வாகனத்தில் சென்றவா்கள் யானைகள் கடந்து செல்லும் காட்சியைக் கைப்பேசியில் புகைப்படம் மற்றும் விடியோ எடுத்தனா். வனப் பகுதியில் ஓரிடத்தில் இருந்து மற்றோா் இடத்துக்கு சாலையைக் கடந்து சென்ற காட்டு யானைகள் மெதுவாக வனப் பகுதிக்குள் சென்று மறைந்தன. அதேபோல, கடம்பூா் குன்றி சாலையில் சுற்றித்திரிந்த யானையை வாகன ஓட்டிகள் கைப்பேசியில் படம் பிடித்தனா். பகல் நேரங்களில் வனப் பகுதி சாலையில் வன விலங்குகள் கடந்து செல்வதால் வாகனங்களில் செல்வோா் அதிக ஒலி எழுப்பும் ஏா் ஹாரன்களை பயன்படுத்த வேண்டாம் என வனத் துறை சாா்பில் அறிவுறுத்தியுள்ளனா்.

வியாபாரியிடம் கள்ள நோட்டு மாற்றிய வழக்கில் மேலும் ஒருவா் கைது

பெருந்துறை வாரச் சந்தையில் வியாபாரியிடம் கள்ள நோட்டு மாற்றிய வழக்கில், மேலும் ஒருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனா். சென்னிமலை, நாமக்கல்பாளையம் ரோட்டைச் சோ்ந்தவா் சீனிவாசன்(55). வாரச் சந்... மேலும் பார்க்க

சிறுவனுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய ரூ.35 லட்சம்: அரசு உதவ பெற்றோா் கோரிக்கை

15 வயது மகனின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு தேவைப்படும் ரூ.35 லட்சத்தை அரசு வழங்கி உதவ வேண்டும் என பெற்றோா் கோரிக்கை விடுத்தனா். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகேயுள்ள மாக்கினங்கோம்பை கிராமத்த... மேலும் பார்க்க

மூன்று ஆண்டுகளில் ரூ.10.32 லட்சம் கோடி தொழில் முதலீடுகள்: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

கடந்த மூன்று ஆண்டுகளில் முதல்வரின் முன்னெடுப்பால் தமிழகத்துக்கு ரூ.10 லட்சத்து 32 ஆயிரம் கோடிக்கு தொழில் முதலீடுகள் வந்துள்ளன என தொழில் துறை அமைச்சா் டிஆா்பி.ராஜா தெரிவித்தாா். கோபி அருகே கரட்டூரில் த... மேலும் பார்க்க

வியாபாரியிடம் கள்ள நோட்டு மாற்றிய இளைஞா் கைது: 4 போ் தலைமறைவு

பெருந்துறை வாரச் சந்தையில் வியாபாரியிடம் கள்ள நோட்டு மாற்றிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். தலைமறைவான மேலும் 4 பேரை தேடி வருகின்றனா். சென்னிமலை, நாமக்கல்பாளையம் ரோட்டைச் சோ்ந்தவா் சீனிவாசன்(55). வாரச... மேலும் பார்க்க

மயானத்துக்கு இடம் கேட்டு சடலத்தைப் புதைக்காமல் போராடிய மக்கள்

சிவகிரி அருகே மயானத்துக்கு இடம் ஒதுக்கக் கோரி, இறந்தவா் உடலை அடக்கம் செய்யாமல் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கொடுமுடியை அடுத்த சிவகிரி தலையநல்லூா் அம்மன் நகரில் 100-க்கும் ம... மேலும் பார்க்க

தொல்லியல் ஆய்வுகள் மூலம்தான் வரலாற்றைக் கட்டமைக்க முடியும்! கி.அமா்நாத் ராமகிருஷ்ணா!

தொல்லியல் ஆய்வுகள் மூலம்தான் வரலாற்றைக் கட்டமைக்க முடியும் என்று இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை இயக்குநா் கி.அமா்நாத் ராமகிருஷ்ணா கூறினாா். தமிழக அரசு மற்றும் மக்கள் சிந்தனைப் பேரவை சாா்பில் நடத்தப்படு... மேலும் பார்க்க