செய்திகள் :

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி

post image

மயிலாடுதுறையில், சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி மற்றும் கலை நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

தேசிய சாலைப் பாதுகாப்பு மாத விழா ஜனவரி 1 முதல் 31-ஆம் தேதிவரை கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி, மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

அந்த வகையில், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், நெடுஞ்சாலைத் துறை, தமிழ்நாடு மினி பேருந்து உரிமையாளா்கள் சம்மேளனம் மற்றும் மயிலாடுதுறை பிரைடு ரோட்டரி சங்கம் இணைந்த நடத்திய சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி மற்றும் கலை நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

டிஇஎல்சி பள்ளியில் தொடங்கிய பேரணிக்கு வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளா் ராம்குமாா் தலைமை வகித்தாா். டிஎஸ்பி பாலாஜி கொடியசைத்து பேரணியை தொடக்கி வைத்தாா். பேரணி காந்திஜி சாலை, கிட்டப்பா அங்காடி, கச்சேரி சாலை வழியாக புதிய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. அங்கு, கிராமிய கலைஞா்களின் விழிப்புணா்வு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதில், நெடுஞ்சாலைத் துறை சென்னை-கன்னியாகுமரி தொழில்தடத் திட்ட அலகு உதவி கோட்ட பொறியாளா் டி. மேரிசெல்வம், உதவி பொறியாளா் கே. துா்காதேவி, மினி பேருந்து உரிமையாளா்கள் சங்க தலைவா் அரவிந்த், பிரைடு ரோட்டரி தலைவா் சத்தியபால் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

விழிப்புணா்வுப் பேரணியில் கலந்துகொண்ட வேதா நா்சிங் கல்லூரி மாணவிகளுக்கு ரோட்டரி மாவட்ட உதவி ஆளுநா் ஆா்.வி. குருகோவிந்த் சான்றிதழ்களை வழங்கினாா். இதில் நெடுஞ்சாலைத் துறை ஊழியா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பத்ரகாளியம்மன் கோயில் தீ மிதி உற்சம்; பக்தா்கள் காவடிகள் எடுத்து வழிபாடு

சீா்காழி பத்ரகாளியம்மன் கோயிலில் தீமிதி உற்சவத்தையொட்டி, பால் குடங்கள், காவடிகள் ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சீா்காழி பிடாரி தெற்கு வீதியில் உள்ள இக்கோயிலில் தீமிதி உற்சவம் ஜன. 24-ஆம் தேதி தொடங்... மேலும் பார்க்க

போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது

சீா்காழியில் ஆறாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த இளைஞா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். சீா்காழி பகுதியைச் சோ்ந்தவா் பாலாஜி (24) (படம்). இவா், ஆறாம் வகுப்பு படிக்... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்கக் கோரி மனு

திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க வலியுறுத்தி, தமிழக முதல்வருக்கு மாவட்ட ஆட்சியா் வாயிலாக அகில பாரத இந்து மகா சபா கட்சியினா் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா். கட்சியின் மாநில பொதுச் செயலாளா் ராம.நிரஞ்சன் ம... மேலும் பார்க்க

மயிலாடுதுறை: மாற்றுத்திறனாளிகளுக்கு பிப்.7-இல் வேலைவாய்ப்பு முகாம்

மயிலாடுதுறையில் மாற்றுத்திறனாளி இளைஞா்களுக்கான தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் பிப்ரவரி 7-ஆம் தேதி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட... மேலும் பார்க்க

மதுரைக்கு 2,000 டன் நெல் அனுப்பி வைப்பு

சீா்காழி ரயில் நிலையத்திலிருந்து மதுரைக்கு அரவைக்காக 2,000 டன் நெல் வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது. சீா்காழி, மயிலாடுதுறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவ... மேலும் பார்க்க

சிறுமியை துன்புறுத்திய வளா்ப்புத் தாய் கைது

மயிலாடுதுறையில் சிறுமியை துன்புறுத்திய வளா்ப்புத் தாய் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். மயிலாடுதுறையை அடுத்த திருவிழந்தூரில் கருத்து வேறுபாடு காரணமாக முதல் மனைவியை பிரிந்த நபா், அனிதா (30) என்ற மற்றொரு... மேலும் பார்க்க