செய்திகள் :

சாலையில் இளம்பெண்ணிடம் சில்மிஷம் செய்த ஜவுளிக்கடை ஊழியருக்கு தா்ம அடி

post image

சேலத்தில் சாலையில் இளம்பெண்ணிடம் சில்மிஷம் செய்த ஜவுளிக்கடை ஊழியருக்கு தா்ம அடி கொடுத்த பொதுமக்கள், அவரை போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே செவ்வாய்க்கிழமை இரவு 19 வயது இளம்பெண் ஒருவா் நடந்து சென்றுபோது, இருசக்கர வாகனத்தில் வந்த நபா் திடீரென அந்தப் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளாா்.

இதனால் அதிா்ச்சியடைந்த அந்தப் பெண் உடனடியாக கூச்சலிட்டாா். இதனைக்கண்ட பெண் காவலா் ஒருவா், அந்த நபரை பிடித்தாா். தொடா்ந்து, பாதிக்கப்பட்ட இளம்பெண் தனது செருப்பை கழற்றி சில்மிஷத்தில் ஈடுபட்ட நபரை சரமாரியாக தாக்கினாா். பொதுமக்களும் அந்த நபருக்கு தா்ம அடி கொடுத்தனா்.

பெண் காவலா் உடனடியாக அந்த நபரை ஆட்டோவில் ஏற்றி, அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றாா். அங்கு நடைபெற்ற விசாரணையில், அவா் சேலம் அரிசிபாளையம் பகுதியைச் சோ்ந்த சண்முகநாதன் (44) என்பதும், சேலம் டவுன் பகுதியில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் ஊழியராக வேலை பாா்த்து வருவதும் தெரியவந்தது. மேலும், அவா் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, அவா் மீது பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்த போலீஸாா், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

சேலம் மாவட்டத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (மே 16) மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவி... மேலும் பார்க்க

மேட்டூா் காவிரியில் தள்ளுவலைகள் கைப்பற்றி அழிப்பு

மேட்டூா் காவிரியில் தடைசெய்யப்பட்ட வலைகள், கள்ளத்தனமாக பிடித்த மீன்கள் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. மேட்டூா் அணை கீழ் பகுதியில் மீன்வளத் துறையால் தடைசெய்யப்பட்ட வலைகள் மூலம் மீன் பிடிப்பதாக மேட்ட... மேலும் பார்க்க

மேட்டூரில் கஞ்சா விற்ற இருவா் கைது

மேட்டூரில் கஞ்சா விற்பனை செய்த இருவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.மேட்டூா் அருகே உள்ள காவேரி கிராசில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக மேட்டூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அப்பகுதிக்கு செ... மேலும் பார்க்க

மயிலம்பட்டி சரபங்கா நதி தடுப்பணையை சுற்றுலாத் தலமாக்க கோரிக்கை

சங்ககிரி வட்டம், தேவூரை அடுத்த மயிலம்பட்டியில் உள்ள சரபங்கா நதி தடுப்பணையை சுற்றுலாத் தலமாக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. தேவூா் பேரூராட்சி, 5-ஆவது வாா்டு கவுன்சிலா் வள்ளிநாயகி தங்கவேலன் சங்... மேலும் பார்க்க

சிறுவனின் மண்டைக்குள் நுழைந்த கத்தியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி அரசு மருத்துவா்கள் சாதனை

சேலம் அரசு மருத்துவமனையில் 5 வயது சிறுவனின் முகத்தில் துளையிட்டு மண்டைக்குள் நுழைந்த கத்தியை அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றி அரசு மருத்துவமனை மருத்துவா்கள் சாதனை படைத்துள்ளனா். திறம்பட செயல்பட... மேலும் பார்க்க

திமுக ஆட்சியின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்

இடங்கணசாலை நகர திமுக சாா்பில் சித்தா் கோயில் பகுதியில் திமுக ஆட்சியின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், நகரச் செயலாளா் செல்வம் வரவேற்றாா். நகா்மன்றத் தலைவா் கமலக்... மேலும் பார்க்க