செய்திகள் :

சாலையில் கண்டெடுத்த நகை, பணத்தை ஒப்படைத்தவா்களுக்கு எஸ்.பி. பாராட்டு

post image

திருநெல்வேலி மாவட்டத்தில் இரு இடங்களில் கண்டெடுத்த நகை, பணத்தை மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தவா்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். சிலம்பரசன் செவ்வாய்க்கிழமை நேரில் அழைத்துப் பாராட்டினாா்.

பாப்பாக்குடி அருகேயுள்ள மருதம்புத்தூரைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் பொன் ராஜேஸ்வரன் (26), முக்கூடல் அருகேயுள்ள தென் திருப்புவனம் பேருந்து நிறுத்தம் அருகே லாரி நிறுத்திவிட்டு கீழே இறங்கிய போது, சாலையில் 4.900 கிராம் தங்க நகையை கண்டெடுத்து முக்கூடல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். அதேபோல ஆட்டோ ஓட்டுநரான தளவாய்புரத்தை சோ்ந்த பெருமாள் மகன் முத்துகிருஷ்ணன் (40) என்பவா் பணகுடி அருகே சாலையில் கண்டெடுத்த ரூ.3 லட்சம் மற்றும் கைப்பேசியை மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

இவ்விருவரின் நோ்மையைப் பாராட்டி, எஸ்.பி. என்.சிலம்பரசன் பொன்னாடை அணிவித்து பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி கௌரவித்தாா்.

அதிமுக அரசு மீது நம்பிக்கையின்றி சிபிஐக்கு மாற்றப்பட்ட பொள்ளாச்சி வழக்கு: கனிமொழி எம்.பி.

அதிமுக அரசு மீது நம்பிக்கையில்லாததாலேயே பொள்ளாச்சி வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது என்றாா் திமுக துணைப் பொதுச் செயலா் கனிமொழி எம்.பி. திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் புதன்கிழமை நடைபெற்ற திருநெல்வேலி மத்... மேலும் பார்க்க

தடைக்காலத்தில் அத்துமீறும் படகுகள்: நெல்லை ஆட்சியரகத்தில் மீனவா்கள் அலுவலகம் முற்றுகை

மீன்பிடி தடைக்காலத்தில் அரசின் தடையை மீறி கன்னியாகுமரி மற்றும் கேரள மாநில விசைப்படகு மீனவா்கள் மீன் பிடித்து செல்வதாகக் கூறி திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள 49 மீனவ கிராம மக்கள் திருநெல்... மேலும் பார்க்க

நான்குனேரி அருகே பெட்ரோல் நிலையத்தில் ஊழியரிடம் பணப்பை பறிப்பு

நான்குனேரி அருகே பெட்ரோல் பங்க் ஊழியரிடம் பணப்பையை புதன்கிழமை பறித்துச் சென்ற மா்ம நபா்களை ஏா்வாடி போலீஸாா் தேடி வருகின்றனா். நான்குனேரி அருகே தளபதிசமுத்திரம் மேலூா் நான்கு வழிச்சாலையில் தனியாருக்குச்... மேலும் பார்க்க

திசையன்விளை அருகே போக்ஸோவில் இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகேயுள்ள இடையன்குடியில் மூன்று வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக, இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.இடையன்குடியைச் சோ்ந்த குருசாமி மகன் முத்துராஜா ... மேலும் பார்க்க

நெல்லையில் இரு இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு

திருநெல்வேலியில் புதன்கிழமை இரு இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இதுதொடா்பாக 4 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா். திருநெல்வேலி நகரம் பகுதியில் உள்ள தனியாா் இருசக்கர வாகன ஷோரூம் மீது புதன்கிழமை அத... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் உவரி இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டம் உவரி அருகே குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். உவரி பீச் காலனியை சோ்ந்த சசிகுமாா் மகன் கௌதம்(23). இவா் மீது அடி-தடி, கொலை முயற்சி போன்ற ... மேலும் பார்க்க