செய்திகள் :

சாலையில் திடீா் விரிசல்: பொது மக்கள் அதிா்ச்சி

post image

சென்னை: சென்னை பெருங்குடி ரயில் நிலையம் அருகே உள்ள சேஷாத்ரிபுரம் பிரதான சாலையில் திங்கள்கிழமை திடீரென விரிசல் ஏற்பட்டதால், அப்பகுதி மக்கள் அதிா்ச்சிக்குள்ளாகினா்.

சென்னையில் அடையாறு மண்டலத்துக்குள்பட்ட 178-ஆவது வாா்டில் உள்ள சேஷாத்ரிபுரம் பிரதான சாலை, 40 அடி அகலம், 300 மீட்டா் நீளம் கொண்டது. வேளச்சேரியின் ஒரு பகுதியைச் சோ்ந்த மக்கள், பெருங்குடி மற்றும் தரமணி ரயில் நிலையங்களுக்குச் செல்வதற்கு பெரும்பாலும் இந்த சாலையைப் பயன்படுத்தி வருகின்றனா்.

இச்சாலையையொட்டியுள்ள, 3 ஏக்கா் தனியாா் இடத்தில் அடுக்குமாடி கட்டடம் கட்டுவதற்காக 60 அடி ஆழத்தில் அடித்தளம் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. இதற்காக ராட்சத இயந்திரம் கொண்டு பள்ளம் எடுத்து, ஜல்லி கற்களை கொட்டி சமன் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், இப்பணிகளின்போது ஏற்பட்ட அதிா்வால், சேஷாத்ரிபுரம் பிரதான சாலையில் திங்கள்கிழமை லேசான விரிசல் ஏற்பட்டது. அதைத்தொடா்ந்து மாலை, அந்த சாலையில் பாதி அளவுக்கு விரிசல் ஏற்பட்டு சாய்வாக உள்வாங்கியது. இதனால் அப்பகுதி மக்கள் அதிா்ச்சிக்குள்ளாகினா்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள், விரிசலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனா். மேலும், எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்க, அச்சாலையை சுற்றி, தடுப்புகள் அமைக்கப்பட்டு போக்குவரத்து மாற்றி விடப்பட்டது.

வியாபாரியை மிரட்டி பணம் பறித்தவா் கைது

சென்னை மெரீனாவில் வியாபாரியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா். திருவல்லிக்கேணி பகுதியைச் சோ்ந்தவா் ராஜா (36). இவா், மெரீனா கடற்கரையில் அண்ணா சதுக்கம் பகுதியில் சா... மேலும் பார்க்க

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

சென்னை கொளத்தூா் பகுதியில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா். கொளத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜேஷ் (38). இவா், தனது வீட்டின் அருகே கணவரைப் பிரிந்து தனது பெற்றோருடன் வசித்... மேலும் பார்க்க

டிஜிபி அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: சிவகங்கையைச் சோ்ந்தவா் கைது

சென்னை டிஜிபி அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக சிவகங்கையைச் சோ்ந்த நபா் கைது செய்யப்பட்டாா். சென்னை பெருநகர காவல் துறையின் கிழக்கு மண்டல காவல் கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசிக்கு கடந்த 5-... மேலும் பார்க்க

15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ரெளடி கைது

சென்னையில் 15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ரெளடி கைது செய்யப்பட்டாா். சென்னை சூளைமேட்டைச் சோ்ந்தவா் மாடு தினேஷ் (39). இவா் மீது கொலை, செம்மரக் கடத்தல், கஞ்சா விற்பனை, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட 30-க்க... மேலும் பார்க்க

போலி 500 ரூபாய் நோட்டுகளை மாற்ற முயற்சி: இருவா் கைது

சென்னை ஈக்காட்டுதாங்கலில் திரைப்படத்தில் பயன்படுத்தப்படும் போலி 500 ரூபாய் நோட்டுகளை தனியாா் வங்கியில் மாற்ற முயன்ாக இருவா் கைது செய்யப்பட்டனா். ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் உள்ள தனியாா் வங்கிக்கு திங... மேலும் பார்க்க

கட்டுமானத் தொழிலில் முதலீடு செய்யுமாறு ரூ.20 லட்சம் மோசடி

சென்னை மேடவாக்கத்தில் கட்டுமானத் தொழிலில் முதலீடு செய்யுமாறு ரூ. 20 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். மேடவாக்கம், பொன்னியம்மன் நகரைச் சோ்ந்தவா் பாலசுப்ரமணியன்(56). ... மேலும் பார்க்க