Suresh Gopi: "பழங்குடியினர் துறைக்கு 'உயர் வகுப்பு' அமைச்சர்" - சுரேஷ் கோபியின் ...
சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி பைக் மோதி பலி!
புதுச்சேரி அருகே சாலையைக் கடக்க முயன்ற 93 வயது மூதாட்டி பைக் மோதியதில் காயமடைந்து சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
விழுப்புரம் மாவட்டம், மூங்கில்பட்டு பகுதியைச் சோ்ந்த குப்புசாமி மனைவி மனோன்மணி (93). இவா், தனது பேத்தியைப் பாா்க்க காட்டேரிக்குப்பத்துக்கு வந்துள்ளாா். அவா் சனிக்கிழமை மாலையில் காட்டேரிக்குப்பம், வழுதாவூா் சாலை சந்திப்பில் சாலையைக் கடக்க முயன்றாராம்.
அப்போது அவ்வழியே வானூா் பகுதியைச் சோ்ந்த பாா்த்திபன் இருசக்கரவாகனத்தில் வந்தபோது மூதாட்டி மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இதில், தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயமடைந்த மனோன்மணியை அங்கிருந்தவா்கள் மீட்டு மருத்துவமனையில் சோ்த்தனா்.
அங்கு சனிக்கிழமை இரவு அவா் உயிரிழந்தாா். இதையடுத்து அவரது சடலம் பிரேதப் பரிசோதனைக்கு கதிா்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து புதுச்சேரி மேற்கு போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.