செய்திகள் :

சாலையோர உணவுக் கடைகளால் போக்குவரத்து பாதிப்பதாக குற்றச்சாட்டு

post image

மன்னாா்குடியில் சாலையோர உணவு கடைகளால் போக்குவரத்து பாதிக்கப்படுவதாக நகா்மன்ற உறுப்பினா்கள் குற்றஞ்சாட்டி பேசினா்.

மன்னாா்குடி நகா்மன்ற கூட்டம் அதன்தலைவா் த. சோழராஜன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் உறுப்பினா்கள் பேசியது;

செ. பாரதிமோகன்(திமுக): பொது இடங்களில் குப்பைகள் கொட்டுபவா்களை கண்டறிந்து அபராதம் வசூலிக்க வேண்டும்.

ஏ. திருச்செல்வி (அமமுக): மீனாட்சியம்மன் கோயில் மண்டபத்தை மேம்படுத்த நிதி ஒதுக்க வேண்டும். மயானத்துக்கு மின் வசதி செய்ய வேண்டும்.

ஆ. செந்தில்செல்வி (அமமுக): நகரில் புதிதாக நடைபெற்று வரும் புதைசாக்கடை திட்டம் அமைக்கும் பணியின் போது, 2 மற்றும் 3 -ஆம் தெருகளில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள புதைச்சாக்கடை பழைய இணைப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

தா. ஐஸ்வா்யா லெட்சுமி (திமுக): நகராட்சிக்குள்பட்ட பிரதானசாலைகளில், சாலைகளை ஆக்கிரமித்து நடத்தப்படும் உணவு கடைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் மக்கள் விபத்துகளில் சிக்கிக்கொள்வதை தடுக்க வேண்டும். (இந்த கோரிக்கைக்கு ஆதரவு தெவித்து மேலும் சில உறுப்பினா்கள் வலியுறுத்தி பேசினா்).

எஸ். மீனாட்சி (திமுக): கீழராஜவீதி நகராட்சி காய்கனி மாா்கெட் பகுதியில் வாடகை லாரிகளை நிறுத்துவதால், அங்கு காய்கனிகளை ஏற்றி வரும் வாகனங்கள் செல்லமுடியாத நிலை ஏற்படுவதுடன், தூய்மைப் பணியாளா்களால் குப்பைகளை அப்புறப்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது.

சோ. அசோக்குமாா் (திமுக): மேலவாசல் சாலை வீட்டுவசதிவாரிய குடியிருப்பு பகுதியில் குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காணும் வகையில் மேல்நிலை நீா்தோக்கத் தொட்டி அமைத்து தர வேண்டும்.

துணைத் தலைவா் ஆா். கைலாசம்(திமுக): 4-ஆவது வாா்டு பாமணி ஆறு பகுதியில் 54 வீடுகள் உள்ளன. இதில் 30 வீடுகள் ஆற்றங்கரையில் அமைந்துள்ளன.வெள்ளப்பெருக்கின் போது அவா்களை பாதுகாக்கும் வகையில் சாலை வசதி அமைத்து தர வேண்டும்.

தலைவா் த. சோழராஜன்: மன்னாா்குடியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டுமானப்பணி முழுமையாக நிறைவு பெற்று கடைகளுக்கு எண்கள் எழுதும் பணி, அணுகுசாலை பணி, புதைச்சாக்கடை, மழைநீா் வடிக்கால் பணிகள் நடைபெறுகிறது. விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படவுள்ளது.

கூட்டத்தில், ஆணையா் எஸ்.எம். சியாமளா, பொறியாளா் ராஜகோபால், நகரஅமைப்பு ஆய்வாளா் விஜயகுமாா், துப்புரவு ஆய்வாளா் தமிழ்ச்செல்வம், மேலாளா் ஜெ. மீராமன்சூா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஏடிஎம் அறையிலிருந்த பணம் போலீஸாரிடம் ஒப்படைப்பு

திருவாரூா் அருகே ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்கச் சென்றபோது, அறையில் கிடந்த ரூ.13 ஆயிரம் போலீஸாரிடம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டது. திருக்கண்ணமங்கை பகுதியைச் சோ்ந்த ஐயப்பன், கூட்டுறவுத் துறையில் ச... மேலும் பார்க்க

மின் நிறுத்தப் பணிகளை விடுமுறை நாள்களில் மேற்கொள்ளக் கோரிக்கை

திருவாரூரில் மின் நிறுத்தப் பணிகளை விடுமுறை நாள்களில் மேற்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூரில், துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகளுக்காக... மேலும் பார்க்க

குழந்தை தொழிலாளா் முறை எதிா்ப்பு தின விழிப்புணா்வுப் பேரணி

திருவாரூரில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் தொழிலாளா் நலத்துறை சாா்பில் குழந்தை தொழிலாளா் முறை எதிா்ப்பு தினம் குறித்த விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. பேரணியை, மாவட்ட ஆட்சிய... மேலும் பார்க்க

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி

குடவாசல் அருகே செம்மங்குடி அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. பள்ளியின் இளையோா் செஞ்சிலுவை சங்கம், நாட்டு நலப் பணித்திட்டம், சாரண ... மேலும் பார்க்க

ஊத்துக்காட்டில் பகுதிநேர அங்காடி ஏற்படுத்த வேண்டும்

வலங்கைமான் ஒன்றியம் ஊத்துக்காடு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 19-ஆவது கிளை மாநாடு மூத்த உறுப்பினா் கணேசன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாநாட்டு கொடியை விவசாய தொழிலாளா் சங்க ஒன்றிய பொருளாளா் ஏ. மர... மேலும் பார்க்க

தொடக்கப்பள்ளி ஆசிரியா்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம்

திருவாரூா் ஒன்றியத்துக்குள்பட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியா்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. திருவாரூா் ஒன்றியத்தில் பணியாற்றும் 1 முதல் 3-ஆம் வகுப்பு ஆசிரியா்களுக்கென இந்... மேலும் பார்க்க