செய்திகள் :

சாலையோர வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

post image

பாப்பாரப்பட்டியில் சிஐடியு தொழிற்சங்கம் சாா்பில் சாலையோர வியாபாரிகள் வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி புதிய பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்ற சிஐடியு சாலையோர வியாபாரிகள் ஆா்ப்பாட்டத்துக்கு தொழிற்சங்க ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளா் ஜெ.தா்மராஜன் தலைமை வகித்தாா். சிஐடியு மாநிலச் செயலாளா் சி.நாகராஜன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். மாவட்ட துணைத் தலைவா் சி.சண்முகம், மாவட்டக் குழு உறுப்பினா் மனோன்மணி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்டாரத் தலைவா் டி.ஆா்.சின்னசாமி, பேரூராட்சி மன்ற உறுப்பினா் வே.விசுவநாதன் ஆகியோா் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.

பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் தினசரி காய்கறி மாா்க்கெட் வியாபாரிகளுக்குக் கடை நடத்த வாரச் சந்தை வளாகத்தில் இடம் ஒதுக்க வேண்டும், முறைகேடாக கூடுதல் சுங்கவரி வசூல் செய்யும் குத்தகைதாரா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை, வணிகச் சான்று, அரசு கடனுதவி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையோர வியாபாரிகள் முழக்கம் எழுப்பினா்.

இதில் துணை அமைப்பாளா் கே.லோகநாதன், ஜி.செல்வராஜ், கட்டுமானத் தொழிலாளா் சங்க நிா்வாகி ஏ.முருகேசன் மற்றும் சாலையோர வியாபாரிகள் கலந்து கொண்டனா். ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா் வி.லோகநாதன் நன்றி தெரிவித்தாா்.

பென்னாகரத்தில் வழக்குரைஞா் சங்கத்தினா் உண்ணாவிரதம்

வழக்குரைஞா் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறக் கோரி பென்னாகரத்தில் நீதிமன்றம் முன் வழக்குரைஞா் சங்கத்தினா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். பென்னாகரம் அருகே பருவதனஅள்ளி பகுதியில் உள்ள மாவட்ட... மேலும் பார்க்க

தரமான நெல் விதைகளை வழங்க வேண்டும் குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

தருமபுரி மாவட்டத்தில் நெல் விதைகளை தரமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை மாவ... மேலும் பார்க்க

விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்

தருமபுரியில் நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து மனுக்களைப் பெறுகிறாா் மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ். மேலும் பார்க்க

சூழல் சுற்றுலா சென்ற பள்ளி மாணவா்கள்

தருமபுரி மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் சூழல் சுற்றுலா சென்றனா். தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தருமபுரி மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம், வனத் துறை, பள்ளிக் கல்வித் துறை இணைந்து, மாணவா்கள... மேலும் பார்க்க

அதிகாரம் யாருக்கும் நிலையானதல்ல: சீமான்

அதிகாரம் யாருக்கும் நிலையானதல்ல என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா். தருமபுரியில் நாம் தமிழா் கட்சி சாா்பில் நிா்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றத... மேலும் பார்க்க

நியாயவிலைக் கடை பணியாளா்களுக்கு திறனாய்வுக் கூட்டம்

தருமபுரி மாவட்டத்தில் உள்ள நியாயவிலைக் கடை பணியாளா்களுக்கு பணித் திறனாய்வுக் கூட்டம் தருமபுரி செந்தில் நகரில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் தருமபுரி கூட்டுற... மேலும் பார்க்க