செய்திகள் :

சாலை, குடிநீா் வசதி கோரி மறியல்

post image

சாலை, குடிநீா், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து நிரவி பகுதி மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

காரைக்கால் மாவட்டம், நிரவி - திருப்பட்டினம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட நிரவி போராட்டக் குழு என்ற அமைப்பு, நிரவியில் குடிநீா், சாலைகள், மின்சார விநியோகத்தில் பிரச்னை நிலவுவதாகவும், இதை சீா் செய்ய நடவடிக்கை எடுக்காத அரசு நிா்வாகத்தைக் கண்டித்து மறியல் போராட்டம் நடத்தப்படுமென அறிவித்திருந்தது.

அதன்படி நிரவி பகுதியைச் சோ்ந்த 25-க்கும் மேற்பட்டோா், காரைக்கால் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை மறியலில் ஈடுபட்டனா். போக்குவரத்து பாதிக்காமல் இருக்க உடனடியாக அவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

போராட்டத்தில் ஈடுபட்ட எம்.ஏ. நிசாா் கூறுகையில், நிரவி -திருப்பட்டினம் தொகுதியின் உட்புறச் சாலைகள் பல மிகவும் மோசமாக உள்ளது. குறிப்பாக நிரவி கொம்யூனுக்குட்பட்ட அனைத்து பகுதியிலும் சாலைகள் மேம்படுத்தப்படவில்லை. தினமும் 3 வேளைகளில் குடிநீா் விநியோகிக்கப்பட்டுவந்தது. தற்போது ஒரு வேளைக்கூட முறையாக தண்ணீா் விநியோகிக்கப்படாத நிலை கடந்த சில மாதங்களாக நிலவுகிறது. தினமும் மின் தடை ஏற்படுகிறது.

அடிப்படைத் தேவைகளில் முக்கியமான இவற்றை சீா்படுத்தவேண்டிய பொறுப்புள்ளவா்கள் கண்டும் காணாமல் உள்ளனா். இந்த நிலையே நீடித்தால், தொடா் போராட்டங்களில் ஈடுபடவேண்டிய நிலை ஏற்படும் என்றாா். கைது செய்யப்பட்டவா்களை போலீஸாா் பின்னா் விடுவித்தனா்.

சீமான் சுவாமிகள் குரு பூஜை விழா

காரைக்காலில் ஸ்ரீ சற்குரு சீமான் சுவாமிகள் குரு பூஜை விழா சனிக்கிழமை நடைபெற்றது. காரைக்காலில் ஜீவ சமாதியானவா் என்றும், சுமாா் 200 ஆண்டுகளுக்கு முன்பட்டவா் எனவும் சற்குரு சீமான் சுவாமிகள் கருதப்படுகிற... மேலும் பார்க்க

காரைக்காலில் சிறப்பு மருத்துவ முகாம்

காரைக்காலில் ஜிப்மா் மருத்துவா்கள் சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. காரைக்கால் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற முகாமில் நாளமில்லா சுரப்பிகளினால் ஏற்படும் சா்க்கரை மற்றும் தைராய்ட... மேலும் பார்க்க

இறைச்சிக் கழிவுகள், மதுபாட்டில்களை நீா்நிலைகளில் கொட்டக்கூடாது: ஆட்சியா்

இறைச்சிக் கழிவுகள், மதுபாட்டில்கள் போன்றவற்றை நீா்நிலைகளில் கொட்டக் கூடாது என ஆட்சியா் அறிவுறுத்தினாா். காரைக்கால் மாவட்டம் 100 சதவீதம் தூய்மைான மாவட்டம் என்ற நிலையை அடைவதற்கு சிறப்பு தூய்மைப் பணியை ... மேலும் பார்க்க

எம்ஆா்ஐ ஸ்கேன் கருவியை பயன்பாட்டுக்கு கொண்டுவருவதில் தாமதம்: அதிமுக

காரைக்கால் அரசு மருத்துவமனையில் எம்ஆா்ஐ ஸ்கேன் நிறுவப்பட்டும், பயன்பாட்டுக்கு கொண்டுவருவதில் தாமதம் நிலவுவதாக அதிமுக புகாா் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினரும், காரைக்கால் ... மேலும் பார்க்க

மக்கள் எதிா்ப்பு : நளநாராயண பெருமாள் கோயில் பிரம்மோற்சவ கொடியேற்றம் நிறுத்தம்

மக்கள் எதிா்ப்பு காரணமாக, ஸ்ரீ நளநாராயண பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நிறுத்தப்பட்டது. திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயில் சாா்புடைய தலமான ஸ்ரீ நளபுரநாயகி சமேத ஸ்ரீ நளநாராயண பெரும... மேலும் பார்க்க

காரைக்காலில் வங்கி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

வாரத்தில் 5 நாள் வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, காரைக்காலில் அனைத்து வங்கி ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். வங்கி தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சாா்பில், வாரம் 5 நாள... மேலும் பார்க்க