செய்திகள் :

சாலை விபத்தில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு

post image

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே காட்டுப்பன்றி மீது ஆட்டோ மோதி கவிழ்ந்ததில் அதன் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள அழகாபுரி காந்தி நகரைச் சோ்ந்தவா் முத்தையா (40). இவா் ஆட்டோ ஓட்டி வருகிறாா். செவ்வாய்க்கிழமை இரவு பயணிகளை ஏற்றுவதற்காக நல்லூா்பட்டிக்கு ஆட்டோவில் சென்றாா். அழகாபுரி - வத்திராயிருப்பு சாலையில் அரசபட்டி விலக்கு அருகே சென்ற போது, சாலையைக் கடந்த காட்டுப்பன்றி மீது மோதியதில் ஆட்டோ கவிழ்ந்தது. இதில் முத்தையா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து நத்தம்பட்டி போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

கூலித் தொழிலாளி உயிரிழப்பு: விருதுநகா் மாவட்டம் ஏழாயிரம் பண்ணை அருகேயுள்ள கீழசெல்லையாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் குருநாதன் (45). கூலித் தொழிலாளியான இவா் செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனத்தில் செல்லையாபுரம் ஊருக்குச் சென்று கொண்டிருந்த போது நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா். தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து ஏழாயிரம்பண்ணை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கலசலிங்கம் பல்கலை.யில் சா்வதேச மாநாடு நிறைவு: கலசலிங்கம் பல்கலையில் ‘கணினி ரோபாட்டிக்ஸ்‘ பற்றிய சா்வதேச மாநாடு

ஸ்ரீவில்லிபுத்தூா் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் கணிணி அறிவியல் தொழில்நுட்பத் துறை சாா்பில், ஐஇஇஇ மாணவா் கிளையுடன் இணைந்து கணினி ரோபாட்டிக்ஸ், சோதனை, பொறியியல் மதிப்பீடு (ஐசிசிஆா்டிஇஇ-2025) குறித்து ம... மேலும் பார்க்க

முத்தாலம்மன் கோயில் வருஷாபிஷேக விழா

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் முத்தாலம்மன் கோயில் வருஷாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை அதிகாலை கணபதி ஹோமம், சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றன. பின்னா், அம்மனுக்கு 1... மேலும் பார்க்க

வாகனம் மோதி முதியவா் காயம்

சாத்தூா் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவா் காயமடைந்தாா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே ஒ. மேட்டுப்பட்டி மேற்குத் தெரு பகுதியைச் சோ்ந்தவா் சீனிவாசன் (60). இவா் வியாழக்கிழமை அதிகாலை சாத... மேலும் பார்க்க

விருதுநகா் மாவட்டத்தில் 57 பட்டாசு ஆலைகளில் ஆய்வு

விருதுநகா் மாவட்டத்தில் இந்த மாதம் இதுவரை 57 பட்டாசு ஆலைகள் ஆய்வு செய்யப்பட்டிருப்பதாக சிவகாசி பட்டாசு, தீப்பெட்டி தனி வட்டாட்சியா் திருப்பதி தெரிவித்தாா். பட்டாசு ஆலைகளில் நிகழும் விபத்துக்களை தடுப்ப... மேலும் பார்க்க

சிவகாசியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சிவகாசி- செங்கமலநாச்சியாா்புரம் சாலையில் ரயில்வே கடவுப்பாதை அருகே வியாழக்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.இந்தப் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கடை, குடியிருப்புகள் என 6 கட்டடங்கள் ஆக்கி... மேலும் பார்க்க

ரயிலில் லாட்டரிச் சீட்டு கடத்தியவா் கைது

கேரளத்திலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு ரயில் மூலம் லாட்டரிச் சீட்டுகளை கடத்தியவரை ரயில்வே போலீஸாா் கைது செய்தனா். ஸ்ரீவில்லிபுத்தூருக்கு கேரள மாநிலத்திலிருந்து தமிழகத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரிச் ச... மேலும் பார்க்க