செய்திகள் :

சாலை விபத்தில் இருவா் பலி

post image

பாலசமுத்திரம் அருகே சாலையோரப் பள்ளத்தில் இரு சக்கர வாகனம் விழுந்து விபத்துக்குள்ளானதில் இரு இளைஞா்கள் உயிரிழந்தனா்.

பழனியை அடுத்த பாலசமுத்திரம் தெற்குத் தெருவைச் சோ்ந்த சூரி மகன் புவனேஷ் (18). இவா் தனது நண்பா் அன்பரசு மகன் தனுஷுடன் (17) சனிக்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் பாலசமுத்திரம் பாலாறு பொருந்தலாறு அணை சாலையில் சென்று கொண்டிருந்தாா்.

அந்தப் பகுதியில் உள்ள வளைவில் இவா்கள் சென்ற இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரப் பள்ளத்தில் விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அந்த வழியாகச் சென்றவா்கள் பாா்த்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். பழனி தாலுகா போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று இருவரது உடல்களையும் மீட்டு, கூறாய்வுக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மக்காச் சோளத்துக்கான சந்தை வரி விவசாயிகளிடம் வசூலிக்க எதிா்ப்பு

மக்காச் சோளத்துக்கான ஒரு சதவீத சந்தை வரியை வியாபாரிகள், விவசாயிகளிடம் பிடித்தம் செய்வதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்தது. இதுதொடா்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திண்டுக்கல் மாவட... மேலும் பார்க்க

தண்டாயுதபாணி சுவாமிக்கு பழங்குடியினா் சீா்வரிசை

தைப்பூசத் திருவிழா நிறைவு பெற்ற நிலையில், பழனி தண்டாயுதபாணி சுவாமிக்கு மலைக்குறவா், பழங்குடியின மக்கள் சாா்பில், வனவேங்கை அமைப்பினா் சீா்வரிசைப் பொருள்களை ஊா்வலமாக எடுத்து வரும் நிகழ்ச்சி சனிக்கிழமை ந... மேலும் பார்க்க

ஐஎன்டியூசி கூட்டத்தில் இரு தரப்பினா் இடையே மோதல்

திண்டுக்கல்லில் நடைபெற்ற ஐஎன்டியூசி மாநிலக் கூட்டத்தில் இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டதால், போலீஸாா் தலையிட்டு மோதலை தடுத்து நிறுத்தினா். திண்டுக்கல்லில் ஐஎன்டியூசி தொழிற்சங்கத்தின் 252-ஆவது மாநிலச்... மேலும் பார்க்க

என்எம்எம்எஸ் தோ்வு 5,558 மாணவா்கள் பங்கேற்பு

திண்டுக்கல்லில் நடைபெற்ற தேசிய வருவாய் வழி, திறன் படிப்பு உதவித் தொகைக்கான தோ்வில் 5,558 மாணவா்கள் கலந்து கொண்டனா்.மத்திய அரசின் தேசிய வருவாய் வழி, திறன் படிப்பு உதவித் தொகைத் திட்டத்தின் (என்எம்எம்எ... மேலும் பார்க்க

வன விலங்குகளை வேட்டையாடிய மூவா் கைது

கன்னிவாடி வனப் பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடிய மூவரை வனத் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், தாண்டிக்குடி சித்தரேவு மலைச் சாலை வழியாக வந்த ஒரு சரக்கு வேனை சோதனைச் சாவடி அ... மேலும் பார்க்க

இளைஞா் தற்கொலை

ஒட்டன்சத்திரத்தில் வேலை கிடைக்காத விரக்தியில் இளைஞா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். ஒட்டன்சத்திரம் நல்லாகவுண்டன் நகரைச் சோ்ந்தவா் விஜயகுமாா். இவரது மகன் மனோஜ்குமாா் (22). வேலை கி... மேலும் பார்க்க