GRT: வள்ளியூரில் வளம் சேர்க்க வந்த ஜிஆர்டி ஜுவல்லர்ஸ்; பிரகாசமான 64வது புதிய ஷோர...
சாலை விபத்தில் எஸ்.ஐ. உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பைக்கில் சென்ற மாணலூா்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளா் உயிரிழந்தாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், ராயா்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் சாமிநாதன் (54). இவா், வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட மணலூா்பேட்டை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிரிந்து வந்தாா். இவரது மனைவி தங்கம் (47), ராயா்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளாா். இந்தத் தம்பதிக்கு இரு பிள்ளைகள் உள்ளனா்.
சாமிநாதன் ஞாயிற்றுக்கிழமை மாலை பணி முடிந்து மணலூா்பேட்டை காவல் நிலையத்திலிருந்து ஊருக்கு பைக்கில் சென்றுகொண்டிருந்தாா். தென்கீரனூா் மேம்பாலத்தில் புறவழிச் சாலையில் இவரது பைக் சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த சாமிநாதன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த கள்ளக்குறிச்சி போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று அவரது சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகின்றனா்.