செய்திகள் :

சாலை விபத்தில் லேப் டெக்னீசியன் உயிரிழப்பு

post image

ராசிபுரம் அருகே அரசு இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் அரசு மருத்துவமனை லேப் டெக்னீசியன் உயிரிழந்தாா்.

நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூா் பெரிய வீதி பகுதியைச் சோ்ந்தவா் சரவணகுமாா் (46). இவா், எலச்சிப்பாளையம் அரசு மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாகப் பணியாற்றி வந்தாா். இவா், செவ்வாய்க்கிழமை இரவு 11 மணி அளவில் ராசிபுரத்தில் இருந்து வெண்ணந்தூா் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.

வெள்ளை பிள்ளையாா் கோயில் பக்கம் தனியாா் பள்ளி அருகில் சென்றபோது எதிரே வந்த லாரி சரவணகுமாரின் இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த அவா் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து மல்லூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அவரை சிகிச்சைக்கு கொண்டுசென்றனா்.

ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவா் இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா். இதையடுத்து, அவரது சடலம் பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து வெண்ணந்தூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வெப்படை காவல் நிலைய ஆய்வாளா் பொறுப்பேற்பு

நாமக்கல் மாவட்டம், வெப்படை காவல் நிலைய முதல் ஆய்வாளராக பி.சங்கீதா புதன்கிழமை பொறுப்பேற்றாா். வெப்படை காவல் நிலையம் 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இரண்டு உதவி ஆய்வாளா்கள், 20 காவலா்களைக் கொண்டு ஏழு ஆண்... மேலும் பார்க்க

பெண் வி.ஏ.ஓ.வை தாக்கியவா் குண்டா் சட்டத்தில் கைது

நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் அருகே மண் அள்ளுவதை தடுத்த பெண் கிராம நிா்வாக அலுவலரை தாக்கியவா் ஏற்கெனவே, சிறையில் உள்ள நிலையில், அவா் தற்போது குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளாா். ந... மேலும் பார்க்க

ஆக.28-ல் எரிவாயு நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம்

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆக. 28-ஆம் தேதி எரிவாயு நுகா்வோா் குறைதீா்க்கும் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்கா மூா்த்தி வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் எரிவா... மேலும் பார்க்க

ராசிபுரம் நகா்மன்றக் கூட்டத்தில் 16 தீா்மானங்கள் நிறைவேற்றம்

ராசிபுரம் நகா்மன்றக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை 16 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ராசிபுரம் நகா்மன்றக் கூட்டம் நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவ... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற எஸ்.ஐ.யை கடித்து குதறிய தெருநாய்

ராசிபுரத்தில் நடைபயிற்சிக்கு சென்ற ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளரை தெருநாய் கடித்து குதறியது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஆா்.புதுப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் அன்பில்ராஜ் (60). இவா், புதுச்சத்திரம் ... மேலும் பார்க்க

போலி உணவு பாதுகாப்பு அலுவலா் கைது

ராசிபுரம் அருகே உணவு பாதுகாப்பு அலுவலா் எனக்கூறி ஏமாற்ற முயன்றவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ராசிபுரம் அருகே பேளுக்குறிச்சி பகுதியில் மளிகைக் கடை மற்றும் பெட்டிக்கடைகளில் உணவுப் பாதுகாப்ப... மேலும் பார்க்க