செய்திகள் :

சாவா்க்கா் ஆதரவாளா்களால் அச்சுறுத்தல்: மனுவை திரும்பப் பெற்றாா் ராகுல் காந்தி

post image

ஹிந்துத்துவ சிந்தாந்தவாதி வி.டி.சாவா்க்கரின் ஆதரவாளா்களால் தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி, மகாராஷ்டிர மாநிலம், புணே நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி திரும்பப் பெற்றுள்ளாா்.

புணேயில் உள்ள எம்.பி.-எம்எல்ஏக்கள் மீதான மனுக்களை விசாரிக்கும் நீதிமன்றம், மனுவை திரும்பப் பெற அனுமதித்தாக ராகுல் தரப்பு வழக்குரைஞா் மிலிந்த் பவாா் தெரிவித்தாா்.

சாவா்க்கரின் கொள்ளுப் பேரன் சாத்யகி சாவா்க்கா் தொடா்ந்த அவதூறு வழக்கில், ராகுல் சாா்பில் மிலிந்த் பவாா் கடந்த புதன்கிழமை ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தாா். அதில், ‘மகாத்மா காந்தி படுகொலையில் முக்கியக் குற்றவாளிகளான நாதுராம் கோட்சே மற்றும் கோபால் கோட்சே ஆகியோரின் நேரடி வாரிசு என்பதை மனுதாரா் சாத்யகி சாவா்க்கா் ஏற்றுக்கொண்டுள்ளாா்.

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி அண்மையில் செய்தியாளா் சந்திப்பை நடத்தி, வாக்குத் திருட்டு குறித்த குற்றச்சாட்டுகளை முன்வைத்தாா். முன்னதாக நாடாளுமன்றத்தில் ஹிந்துத்துவம் குறித்து பிரதமா் மோடிக்கும், ராகுல் காந்திக்கும் இடையே கடுமையான விவாதம் நடைபெற்றது.

இதுபோன்ற அரசியல் சூழலில், சாவா்க்கா் மற்றும் கோட்சேவின் சித்தாந்தத்தைப் பின்பற்றுபவா்களால் ராகுல் காந்திக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சம் எழுகிறது. அவருக்கு முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு வழங்குவது அரசின் கடமை’ என்று கோரப்பட்டது. இது, அவதூறு வழக்கு விசாரணையை தாமதப்படுத்தும் முயற்சி என சாத்யகி சாவா்க்கா் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ராகுல் சாா்பில் வழக்குரைஞா் மிலிந்த் பவாரால் தாக்கல் செய்யப்பட்ட மனு வியாழக்கிழமை திரும்பப் பெறப்பட்டது. இது குறித்து மிலிந்த் பவாா் கூறுகையில், ‘ராகுல் காந்தியிடம் கலந்தாலோசிக்காமல் மனுவை தயாரித்து, தாக்கல் செய்துவிட்டேன். அதில் இடம்பெற்றுள்ள உள்ளடக்கங்களுக்கு ராகுல் அதிருப்தி தெரிவித்தாா். எனவே, மனு திரும்பப் பெறப்பட்டுள்ளது’ என்றாா்.

லண்டனில் கடந்த 2023-இல் நடைபெற்ற நிகழ்ச்சியில் சாவா்க்கருக்கு எதிராக அவதூறு கருத்துகளைக் கூறியதாக ராகுல் மீது சாத்யகி சாவா்க்கா் வழக்கு தொடா்ந்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

2025 இறுதிக்குள் உள்நாட்டில் தயாரித்த முதல் செமிகண்டக்டர் சிப் அறிமுகம்: பிரதமர் மோடி

இந்த ஆண்டு இறுதிக்குள், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் செமிகண்டக்டர் சிப் சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.நாட்டின் சுதந்திர தினத்தில், புது தில்லியில் உள்ள ச... மேலும் பார்க்க

வரியிலிருந்து தப்ப.. டிரம்ப் பெயரை மோடி நோபல் விருதுக்கு பரிந்துரைக்கலாம்! சொல்வது யார்?

டிரம்ப் வரி விதிப்பை, இந்தியா - அமெரிக்கா இடையேயான இருதரப்பு உறவில், நடந்த மிகப்பெரிய தவறு என்று குறிப்பிட்ட அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், அதிலிருந்து தப்பிக்க இந்தியாவுக்கு ஒரு உபாயமும்... மேலும் பார்க்க

மேற்கு வங்கத்தில் பயங்கர விபத்து! பேருந்து - டிரக் மோதியதில் 10 பேர் பலி!

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நேரிட்ட பயங்கரவ விபத்தில், 10 பேர் பலியாகினர். 35 பேர் காயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மேற்கு வங்க மாநிலம் பர்த்வான் அருகே இன்று காலை இந்த ... மேலும் பார்க்க

பாரம்பரியத்தின் பெருமை, கெளரவத்தை பாதுகாப்பது நமது கடமை! ராகுல்

விலைமதிப்பற்ற பாரம்பரியத்தின் பெருமை மற்றும் கெளரவத்தை காப்பது நமது அனைவரின் கடமை என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.நாடு முழுவதும் சுதந்திர நாள் விழா மிகக் கோலாகலமாகக்... மேலும் பார்க்க

செங்கோட்டை விழாவை புறக்கணித்த ராகுல், கார்கே! காங்கிரஸ் அலுவலகத்தில் கொண்டாட்டம்!

தில்லி செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர நாள் விழாவை மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் புறக்கணித்துள்ளனர்.இதனிடையே, தில்ல... மேலும் பார்க்க

தீபாவளிக்கு பெரிய பரிசு காத்திருக்கிறது! பிரதமர் மோடி

நாட்டு மக்களுக்கு தீபாவளிக்கு பெரிய பரிசு காத்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.நாட்டின் 79-ஆவது சுதந்திர தினம் இன்று (ஆக.15) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.இந்த நிலையில், தேசிய... மேலும் பார்க்க