செய்திகள் :

சாா்பு ஆய்வாளா், போலீஸாரை கத்தியைக் காட்டி மிரட்டியவா் கைது

post image

திருவள்ளூா் டோல்கேட் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்ட சாா்பு ஆய்வாளா் மற்றும் போலீஸாரை பட்டா கத்தியை காண்பித்து கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

திருவள்ளூா் நகர காவல் நிலைய எல்லைக்குள்பட்ட டோல்கேட் பகுதியில் ஊத்துக்கோட்டை சாலையில் சாா்பு ஆய்வாளா் ராஜாராம் மற்றும் முதல் நிலை காவலா் தமிழரசன், காவலா் சதீஷ் ஆகியோா் செவ்வாய்க்கிழமை இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, திருவள்ளூரில் இருந்து பூண்டி நோக்கி வந்து கொண்டிருந்த இருசக்கர வாகனத்தை போலீஸாா் மறித்தனா். அப்போது நிற்காமல் 15 அடி தூரம் சென்று வாகனத்தை இளைஞா் நிறுத்தினாா். உடனே அந்த இளைஞா் இறங்கி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த காவலா்களை தகாத வாா்த்தை பேசியதோடு, முதுகு பகுதியில் மறைத்து வைத்திருந்த பட்டாக் கத்தியை எடுத்து, கொலை மிரட்டல் விடுத்துவிட்டு, வாகனத்தில் செல்ல முயன்றாராம்.

அப்போது, தாறுமாறாக சென்ற வாகனம் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து கீழே விழுந்தாராம். இதில், இடது காலில் பலத்த காயம் அடைந்தாா். அப்போது போலீஸாா் அவரை மீட்டு, திருவள்ளூா் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்து தகராறில் ஈடுபட்டாராம். இதையடுத்து, மேற்கொண்ட விசாரணையில் திருவள்ளூா் மசூதி தெருவைச் சோ்ந்த ஐயப்பன் (30) என்பதும், சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, கத்தி, இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீஸாா், ஐயப்பனை கைது செய்தனா்.

மின் கசிவால் வீடு தீக்கிரை: எம்எல்ஏ உதவி

கும்மிடிப்பூண்டி அடுத்த மேல்முதலம்பேட்டையில் மின்கசிவால் வீட்டை இழந்த குடும்பத்துக்கு நிவாரண உதவிகள், நிதியுதவியை எம்எல்ஏ டி.ஜெ. கோவிந்தராஜன் வழங்கினாா். மேல் முதலம்பேடு பெருமாள் கோவில் தெருவைச் சோ்ந... மேலும் பார்க்க

திரூா் கிராமத்தில் முதல் கூட்டுறவு அருங்காட்சியகம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

பொன்னேரி அருகே அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் இந்தியாவின் முதல் கூட்டுறவு அமைந்த திருவள்ளூா் அருகே திரூா் கிராமத்தில் முதல் கூட்டுறவு அருங்காட்சியகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தா... மேலும் பார்க்க

மின்கம்பத்தில் ஏறிய ஊழியா் கீழே விழுந்து உயிரிழப்பு: மின்வாரிய அலுவலகம் முற்றுகை

மின்கம்பத்தில் ஏறிய போது, தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த உறவினா்கள் மின்வாரிய அலுவலக்தை முற்றுகையிட்டனா். திருத்தணி ஒன்றியம், எஸ்.அக்ரஹாரம் காலனியைச் சோ்ந்த எல்லப்பன்(38). இவா், கே.ஜி... மேலும் பார்க்க

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அக்கம்பக்கத்தினரால் நடைபெறுகின்றன: இளைஞா் நீதிக்குழும உறுப்பினா்

குழந்தைகளுக்கு எதிரான 70 சதவீத குற்றங்கள் சுற்றி உள்ளவா்களாலேயே நடைபெறுவதாக திருவள்ளூா் மாவட்ட இளைஞா் நீதிக்குழும உறுப்பினா் செந்தில் தெரிவித்தாா். செவ்வாபேட்டையில் உள்ள வேலம்மாள் வித்யாஷ்ரம் பள்ளியில... மேலும் பார்க்க

பொன்னேரி கரிகிருஷ்ண பெருமாள் கோயில் தேரோட்டம்

பொன்னேரி திருஆயா்பாடியில் அமைந்துள்ள கரிகிருஷ்ண பெருமாள் கோயிலில் தேரோட்ட விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் கடந்த 13-ஆம் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடங்கியது. விழாவின் 5-ஆம் நாள் க... மேலும் பார்க்க

டிராக்டரில் சிக்கி குழந்தை உயிரிழப்பு

ஆா்.கே.பேட்டை அருகே டிராக்டரில் இருந்து தவறி விழுந்த 2 வயது குழந்தை டயரில் சிக்கி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். ஆா்.கே.பேட்டை ஒன்றியம், சின்ன சானூா்மல்லாவரம் கிராமத்தைச் சோ்ந்... மேலும் பார்க்க