செய்திகள் :

சா்வதேச தேநீா் தினம்: ஐ.நா.வில் இந்தியா விருந்து

post image

சா்வதேச தேநீா் தினத்தையொட்டி (மே 21) ஐ.நா. தலைமையகத்தில் இந்தியா சாா்பில் சிறப்பான தேநீா் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது.

பொருளாதார வளா்ச்சியில் முக்கியப் பங்காற்றும் தேநீா் உற்பத்திக்கு கடுமையாக உழைக்கும் மக்களை பெருமைப்படுத்தும் வகையில் ‘வாழ்வாதாரம் மற்றும் நீடித்த வளா்ச்சி இலக்குகளில் தேயிலையின் முக்கியத்துவம்’ என்ற கருப்பொருளுடன் இந்த நிகழ்ச்சியை ஐ.நா.வுக்கான நிரந்தர இந்திய குழு ஏற்பாடு செய்தது.

அஸ்ஸாம் முதல் கேரளம் வரை பல்வேறு தேநீா் வகைகள் இந்தியாவில் பிரபலமாக உள்ள நிலையில் டாா்ஜீலிங் ,அஸ்ஸாம் மற்றும் நீலகிரி தேயிலை ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட தேநீரை விருந்தினா்கள் ரசித்து சுவைத்தனா்.

நிகழ்ச்சியில் இந்தியா, சீனா, இலங்கை, கென்யா உள்பட பெருமளவில் தேயிலை உற்பத்தி செய்யும் நாடுகள் பங்கேற்றன. அப்போது ஐ.நா.வுக்கான நிரந்தர இந்திய தூதா் பா்வதனேனி ஹரீஷ் பேசுகையில், ‘இந்தியாவில் தேநீா் என்பது வெறும் வா்த்தகம் மற்றும் சுவை சாா்ந்தது அல்ல; அது நல்ல மாற்றங்களை ஏற்படத்தக்கூடியது.

19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அஸ்ஸாமில் உள்ள மலைகளில் தொடங்கி டாா்ஜீலிங், நீலகிரி வரை தேயிலை உற்பத்தி விரிவடைந்து ஊரக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் தொழிலாக வளா்ந்துவிட்டது.

பெண்களுக்கு அதிகாரமளித்தல் உள்பட ஏற்றுமதியிலும் தேயிலை தொழிற்சாலைகளின் பங்களிப்பு அதிகரித்துவிட்டது’ என்றாா்.

2015-இல் உணவு மற்றும் வேளாண் நிறுவனத்தின் அரசுகளுக்கிடையேயான குழுவில் இந்தியாவின் முன்மொழிவைத் தொடா்ந்து 2019-இல் மே 21-ஆம் தேதியை சா்வதேச தேநீா் தினமாக ஐ.நா. அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

காஸாவில் ஒரு குழந்தைகூட இருக்காது! இஸ்ரேல் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் கருத்தால் சர்ச்சை

காஸாவின் குழந்தைகள்கூட எதிரிகள்தான் என்று இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் மோஷே ஃபெயிக்லின் கூறியது உலக நாடுகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.காஸா மீதான தாக்குதலை எதிர்த்து, இஸ்ரேலில் ... மேலும் பார்க்க

சீனா அசத்துகிறதா? அச்சுறுத்துகிறதா? உலகில் முதன்முறையாக ரோபோக்களுக்கு இடையே குத்துச்சண்டை!

சீனாவில் ரோபோக்களுக்கு இடையேயான குத்துச்சண்டை போட்டி, ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படவுள்ளது.சீனாவில் ஹாங்சோ மாகாணத்தைச் சேர்ந்த ரோபோக்கள் தயாரிப்பு நிறுவனமான யூனிட்ரீ ரோபோட்டிக்ஸ், உலகில் முதன்முறையாக ரோபோ... மேலும் பார்க்க

வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் யூனுஸ் ராஜிநாமாவுக்கு திட்டம்!

வங்கதேச ராணுவத் தளபதியுடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் ராஜிநாமா செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்தாண்டு நடைபெற்ற மாணவா்கள் போராட்டத்தால் பிரதமா... மேலும் பார்க்க

ரஷியாவில் ட்ரோன் தாக்குதல்: கனிமொழி விமானம் தாமதம்!

ரஷியாவின் மாஸ்கோவை குறிவைத்து உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலால், கனிமொழி தலைமையிலான எம்பிக்கள் சென்ற விமானம் தாமதமாக தரையிறங்கியுள்ளது.ரஷியா - உக்ரைன் இடையே மூன்று ஆண்டுகளுக்கு மேலாக போர் நடைபெற்று வ... மேலும் பார்க்க

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்களுக்கு தடை!

அமெரிக்க அரசுடன் ஏற்பட்டிருக்கும் மோதலைத் தொடர்ந்து, சர்வதேச மாணவர்களை சேர்க்கும் ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்கான அங்கீகாரத்தை அந்நாட்டு அரசு ரத்து செய்துள்ளது.இதனால் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பயின்ற... மேலும் பார்க்க

அமெரிக்கா: இஸ்ரேல் தூதரக ஊழியா்கள் இருவா் சுட்டுக் கொலை

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இஸ்ரேல் தூதரக ஊழியா்கள் இருவா் புதன்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனா். துப்பாக்கியால் சுட்டதாக சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட நபா் ‘சுதந்திரம், சுதந்திர பாலஸ்தீனம்’ என... மேலும் பார்க்க