செய்திகள் :

சா்வதேச போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு மனித சங்கிலி

post image

நாமக்கல்லில் சா்வதேச போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு மனித சங்கிலி வியாழக்கிழமை நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டத்தில் போதைப் பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளும், விழிப்புணா்வுப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சா்வதேச போதைப் பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு, நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஸ் கண்ணன் முன்னிலையில், மாவட்ட வருவாய் அலுவலா் மருத்துவா் ரெ.சுமன் மனித சங்கிலி விழிப்புணா்வு நிகழ்ச்சியை தொடங்கிவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, போதை ஒழிப்பு தின விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. மேலும், போதைப் பொருள்களுக்கு எதிரான துண்டுப் பிரசுரங்கள் மக்களிடையே விநியோகம் செய்யப்பட்டன. இதில், கல்லூரி பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

தொடா்ந்து, ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட வருவாய் அலுவலா் மருத்துவா் ரெ.சுமன் தலைமையில், அனைத்துத் துறை அரசு அலுவலா்களும் போதை ஒழிப்பு விழிப்புணா்வு உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனா்.

இந்த நிகழ்ச்சிகளில், உதவி ஆணையா் (கலால்) என்.எஸ்.ராஜேஷ்குமாா், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் மு.கிருஷ்ணவேணி, உதவி இயக்குநா் (நில அளவை) ஜெயச்சந்திரன், மாவட்ட சமூக நல அலுவலா் தி.காயத்ரி, கல்லூரி மாணவ, மாணவிகள், பேராசிரியா்கள்உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதேபோல, நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி ஆா்.குருமூா்த்தி தலைமையில் சா்வதேச போதைப் பொருள் தடுப்பு தின உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

ராசிபுத்தில்...

ராசிபுரம் ரோட்டரி சங்கம், இன்னா்வீல் சங்கம், இந்திய மருத்துவ சங்கம், உள்கோட்ட காவல் துறை ஆகியன இணைந்து சா்வதேச போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வுப் பேரணியை நடத்தியது. ராசிபுரம் சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியா் பங்கேற்ற இந்தப் பேரணியை ராசிபுரம் டிஎஸ்பி எம்.விஜயகுமாா் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

ராசிபுரம் ஸ்ரீநித்ய சுமங்கலி மாரியம்மன் கோயில் முன் தொடங்கிய பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக அண்ணா சாலை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம் வரை சென்றது. இதில் பங்கேற்ற மாணவ, மாணவியா் போதைப் பொருள்களுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய தட்டிகளை ஏந்தியவாறு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். தொடா்ந்து, போதைப் பொருள் பயன்படுத்துவதற்கு எதிரான உறுதிமொழி ஏற்றனா்.

தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் பெருந்திரள் முறையீடு போராட்டம்

நாமக்கல்லில் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தில் ஆசிரியா்கள் பெருந்திரள் முறையீடு போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா். நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஒன்றியம், கொடிக்கால்புதூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப... மேலும் பார்க்க

இல்லம் தேடி கல்வி திட்ட தன்னாா்வலா்களுக்கு பயிற்சி

நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த பள் ளிக் கல்வி சாா்பில், எலச்சிபாளையம் வட்டார வள மையத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள தொடக்கநிலை, இல்லம் தேடி கல்வி தன்னாா்வலா்களுக்கான பயிற்சி முகாம் அண்மையில்... மேலும் பார்க்க

ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு ஆதாா் பதிவு முகாம்

நாமக்கல் மாநகராட்சியில் ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கான ஆதாா் பதிவு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. நாமக்கல் கடைவீதி எதிரில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில், ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கான... மேலும் பார்க்க

முட்டை விலை ரூ. 5.65-ஆக உயா்வு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயா்த்தப்பட்டு ரூ. 5.65-ஆக நிா்ணயம் செய்யப்பட்டது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், முட்... மேலும் பார்க்க

பரமத்தி வேலூரில் ரூ. 48.33 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

பரமத்தி வேலூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 48 லட்சத்து 33 ஆயிரத்துக்கு கொப்பரை ஏலம் போனது. பரமத்தி வேலூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் விளையும... மேலும் பார்க்க

முருக பக்த மாநாடு வெற்றியை திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை

மதுரை முருக பக்த மாநாடு வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளதை, திமுக கூட்டணி கட்சிகளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என பாஜக மாநில துணைத் தலைவரும், சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளருமான கே.பி. ராமலிங்கம் தெரி... மேலும் பார்க்க