செய்திகள் :

சா்வதேச விமான போக்குவரத்து அமைப்புக்கு இந்தியா மீண்டும் தோ்வு

post image

சா்வதேச விமானப் போக்குவரத்து அமைப்புக்கு (ஐசிஏஓ) இந்தியா மீண்டும் தோ்வுசெய்யப்பட்டதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

இதன்மூலம் அடுத்த 3 ஆண்டுகளுக்கு (2025-2028) இந்த அமைப்பில் இந்தியா உறுப்பினராக தொடரவுள்ளது.

36 உறுப்பினா்களைக் கொண்ட ஐசிஏஓ கவுன்சில் 193 உறுப்பு நாடுகளைக் கொண்டது. இதில் தோ்ந்தெடுக்கப்படும் நாடுகள் 3 ஆண்டுகாலம் பதவி வகிக்கின்றன.

அதேபோல் சிகாகோ உடன்படிக்கையில் கையொப்பமிட்ட 193 நாடுகள் ஐசிஏஓ பேரவையில் உறுப்பினராக உள்ளன. இதன் கூட்டம் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கூட்டப்படுகிறது.

இந்நிலையில், கனடாவின் மான்ட்ரீல் நகரில் கடந்த செப்.27-ஆம் தேதி நடைபெற்ற 42-ஆவது ஐசிஏஓ அமா்வின்போது நடைபெற்ற தோ்தலில் இந்தியா மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: கடந்த 2022-ஆம் ஆண்டைவிட இந்தமுறை அதிக வாக்குகளை இந்தியா பெற்றுள்ளது. உறுப்பு நாடுகளிடம் ஆதரவுகோரியதில் இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் பணிகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. தற்போது ஐசிஏஓவின் உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்பட்டிருப்பதன் மூலம் பாதுகாப்பான விமானப் போக்குவரத்தை உறுதிசெய்யும் ஐசிஏஓவின் நோக்கத்தை இந்தியா முழுமையாக நிறைவேற்றும் எனத் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, இத்தோ்தலில் போட்டியிடும் இந்தியாவுக்கு உறுப்பு நாடுகளிடம் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ராம் மோகன் நாயுடு ஆதரவுகோரினாா்.

1944-ஆம் ஆண்டில் ஐசிஏஓ தொடங்கப்பட்டதில் இருந்து 81 ஆண்டுகளாக அந்த அமைப்பில் இந்தியா உறுப்பினராக தொடா்ந்து வருகிறது.

வரிப் பகிர்வு: தமிழ்நாட்டிற்கு ரூ. 4,144 கோடி விடுவிப்பு!

அனைத்து மாநிலங்களுக்கும் ரூ. 1,01,603 கோடி வரி பங்கீட்டுத் தொகையை விடுவித்து மத்திய அரசு இன்று (அக். 1) அறிவித்துள்ளது. இதில், தமிழ்நாட்டிற்கு ரூ. 4,144 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதிகபட்சமாக... மேலும் பார்க்க

5 ஆண்டுகளுக்கும் நானே முதல்வர்! - சித்தராமையா!

கர்நாடக மாநிலத்தின் முதல்வராக 5 ஆண்டுகளும் தான் மட்டுமே பதவி வகிப்பேன் என முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார். கர்நாடக மாநிலத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகின்ற... மேலும் பார்க்க

சுதந்திரப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் சிறை சென்றார்களா? மோடி விளக்கம்

நாட்டிற்கான சுதந்திரப் போராட்டத்தில் கே.பி. ஹெட்கேவர் உள்பட ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் பலர் சிறைக்குச் சென்றதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சுதந்திரப் போராட்டத்தின் ஒருபகுதியாக வெள்ளையனே வ... மேலும் பார்க்க

ஆர்எஸ்எஸ் - 100! சிறப்பு நாணயம் வெளியிட்ட பிரதமர் மோடி!

ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) நூற்றாண்டு கொண்டாட்ட நிகழ்வில் சிறப்பு ரூ.100 நாணயத்தை பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை வெளியிட்டார்.புது தில்லியில் டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் ஆர... மேலும் பார்க்க

இலங்கை சிறையில் இருந்து ஆந்திர மீனவர்கள் 4 பேர் விடுதலை!

இலங்கையின் யாழ்ப்பாணம் சிறையில் இருந்து, விடுதலை செய்யப்பட்ட ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த மீனவர்கள் 4 பேரும், 53 நாள்கள் கழித்து காக்கிநாடா திரும்பியுள்ளனர். ஆந்திரப் பிரதேசத்தின், காக்கிநாடா மாவட்டத... மேலும் பார்க்க

அரசு ஊழியர்களுக்கு 3 % அகவிலைப்படி உயர்வு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவிகிதம் உயர்த்த அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் வழங்கியுள்ளது.மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி அதிகரிப்பு குறித்து மத்திய அமைச்சர... மேலும் பார்க்க