செய்திகள் :

சிஎஸ்கேவின் பேட்டிங் பயிற்சியாளராகும் ரெய்னா!

post image

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் குறித்து நேற்றைய வர்ணனையில் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா புதிய தகவலை தெரிவித்துள்ளார்.

குஜராத் டைட்டன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நேற்று அகமதாபாத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியின்போது சுரேஷ் ரெய்னா, சஞ்சய் பங்கர் மற்றும் ஆகாஷ் சோப்ரா ஆகியோர் வர்ணனை செய்துகொண்டிருந்தனர்.

புதிய பயிற்சியாளர்

அப்போது, அடுத்தாண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புதிய பேட்டிங் பயிற்சியாளர் வரவிருப்பதாக அந்த அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா தெரிவித்தார்.

உடனிருந்த ஆகாஷ் சோப்ரா, அவரின் பெயர் ’எஸ்’ என்ற எழுத்தில் தொடங்குமா? என்று கேள்வி எழுப்பினார். சிரித்துக்கொண்டே பதிலளித்த ரெய்னா, அவர் சென்னை அணிக்காக அதிவேக அரைசதம் அடித்தவர் என்று தெரிவித்தார்.

கடந்த 2008 முதல் 2021 வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய சுரேஷ் ரெய்னா, 205 போட்டிகளில் 5528 ரன்கள் குவித்துள்ளார். இவரை ’சின்ன தல’, ’மிஸ்டர் ஐபிஎல்’ என்று ரசிகர்கள் அழைப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : நன்றி சென்னை! தமிழில் பதிவிட்ட சிஎஸ்கே வீரர்!

மும்பைக்கு எதிரான போட்டியில் சஹால் வருகை?

குவாலிஃபயர் 2 போட்டியில் பஞ்சாப் அணியில் சஹால் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் (219) எடுத்துள்ள யுஸ்வேந்திர சஹால் (34 வயது) பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார... மேலும் பார்க்க

கோப்பை கனவு: கால்பந்து உலகில் நடக்கும் அதிசயம் ஆர்சிபிக்கும் நடக்குமா?

கோப்பையே வெல்லாத கால்பந்து அணிகள் எல்லாம் இந்த சீசனில் வெல்லும்போது ஆர்சியாலும் வெல்ல முடியுமென அதன் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த சீசனில் கால்பந்து உலகில் பல அணிகள்... மேலும் பார்க்க

ஆக்ரோஷமாக கொண்டாடி, கோமாளியாக விரும்பவில்லை..! யாரைச் சொல்கிறார் பும்ரா?

ஜஸ்பிரீத் பும்ராவின் சமீபத்திய பேட்டி விராட் கோலி ரசிகர்களை சீண்டும் விதமாக அமைந்துள்ளது கிரிக்கெட் உலகில் பேசுபொருளாகியுள்ளது. கிரிக்கெட் போட்டிகளில் பந்துவீச்சாளர்கள் விக்கெட் எடுத்தால் மகிழ்ச்சியில... மேலும் பார்க்க

சிறந்த தலைவன், தலைசிறந்த மனிதன்..! தோனி குறித்து உர்வில் படேல்!

இளம் சிஎஸ்கே வீரர் உர்வில் படேல் எம்.எஸ்.தோனி குறித்து நெகிழ்ச்சியானப் பதிவினை எழுதியுள்ளார். அதில் பல விஷயங்கள் கற்றுக்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். 2025 ஐபிஎல் சீசன் சிஎஸ்கே அணிக்கு மோசமாக அமைந்தாலும... மேலும் பார்க்க

ரோஹித் சர்மாவுடன் இணைந்து களமிறங்கியதில் மகிழ்ச்சி: ஜானி பேர்ஸ்டோ

ரோஹித் சர்மாவுடன் இணைந்து தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கியது மிகுந்த மகிழ்ச்சியளித்தாக இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோ தெரிவித்துள்ளார்.ஐபிஎல் தொடரில் சண்டீகரில் நேற்று (மே 30) நடைபெற்ற எலிமினேட்டர் போட... மேலும் பார்க்க

ஹார்திக் பாண்டியாவுடன் மோதலா? என்ன சொல்கிறார் ஷுப்மன் கில்?!

மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹார்திக் பாண்டியா மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகி வந்தன. இதற்கு ஷுப்மல் கில்... மேலும் பார்க்க