செய்திகள் :

சிக்கன் கேட்டதால் அடி; 7 வயது மகன் உயிரிழப்பு - தாய் கைது

post image

மும்பை அருகில் உள்ள பால்கர் காசிபாடாவில் வசிப்பவர் பல்லவி. இவருக்கு 7 மற்றும் 10 வயதில் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அவரது 7 வயது மகன் வீட்டில் சிக்கன் குழம்பு வைக்க வேண்டும் என்று கேட்டான். ஆனால் போதிய பணம் இல்லை என்று சொல்லிப்பார்த்தார். ஆனால் சிறுவன் தொடர்ந்து சிக்கன் சமைக்கவேண்டும் என்று கேட்டு தன் தாயாரிடம் அடம்பிடித்திருக்கிறான். இதனால் பல்லவி கோபத்தில் வீட்டில் கிடந்த சப்பாத்தி உருட்ட பயன்படுத்தும் கட்டையை எடுத்து தன் மகனை சரமாரியாக அடித்து உதைத்தார்.

காவல் நிலையம்
காவல் நிலையம்

மகன் மட்டுமல்லாது 10 வயது மகளையும் கொடூரமாக அக்கட்டையால் தாக்கினார். இதில் 7 வயது கணேஷ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்திருக்கிறான்.

அவனை பல்லவி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லாமல் இருந்தார். இதனால் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறான். பக்கத்து வீட்டுக்காரர்கள் வந்து பார்த்தபோது பல்லவி தனது மகன் உடம்பு மீது ஒரு துணியைப் போட்டு மூடி வைத்திருந்தார். சிறுவன் எப்படி இறந்தான் என்று கேட்டதற்கு, தன் மகன் மஞ்சள் காமாலை காரணமாக இறந்துவிட்டான் என்று பல்லவி தெரிவித்தார். ஆனால் அவரது பேச்சில் சந்தேகம் அடைந்த உள்ளூர்காரர்கள், பையன் மீது போர்த்தப்பட்டு இருந்த பெட்ஷீட்டை எடுத்து பார்த்தபோது சிறுவனின் உடம்பு முழுக்க காயம் இருந்தது.

இதையடுத்து பக்கத்து வீட்டுக்காரர்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து இறந்த சிறுவனின் உடலை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பல்லவி அடித்ததில் அவரது 10 வயது மகளும் காயம் அடைந்திருந்தார். அவரை போலீஸார் மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சைக்கு பிறகு அவரை ஆசிரமத்தில் சேர்த்துள்ளனர். 10 வயது சிறுமியிடம் போலீஸார் விசாரித்தபோது முதலில் எதுவும் சொல்லவில்லை. அதன் பிறகு தனது தாயார் தன்னையும், தனது தம்பியையும் அடித்ததை ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து சொந்த மகனை அடித்துக்கொன்ற பல்லவியை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். பல்லவி தனது கணவனை பிரிந்து குழந்தைகளோடு தனியாக வசித்து வருகிறார்.

கோத்தகிரி: தலையில் காயம்,தேயிலைத் தோட்டத்தில் மர்மாக கிடந்த வடமாநில பெண்ணின் சடலம்; விசாரணை தீவிரம்!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேயிலைத் தோட்டங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் அதிக எண்ணிக்கையிலான வடமாநில தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேயிலை தோட்டங்களைப் பொறுத்தவரை பெரும்பாலான வடமாநில தொழில... மேலும் பார்க்க

``இனிமே இங்க வந்தா கொன்னுடுவோம்" - ஆம்புலன்ஸ் டிரைவரின் புகார் - FIR சொல்வது என்ன?

தவெக தலைவர் விஜய் பரப்புரையில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் எழுந்திருக்கின்றன. அதில் மிகவும் முக்கியமானது ஆ... மேலும் பார்க்க

சென்னை: காதல் ஜோடியை மிரட்டிய கும்பல் - ஆன்லைன் மூலம் பணத்தை பறித்ததால் சிக்கிய பின்னணி!

வில்லிவாக்கத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், படப்பையை அடுத்த மணிமங்கலம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணைக் காதலித்து வந்திருக்கிறார். சம்பவத்தன்று மணிமங்கலம் பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் அமர்ந்து ப... மேலும் பார்க்க

`காதலிக்க மறுத்த ராணுவ வீரரின் காதலி மீது ஆசிட் வீச்சு' - சோசியல் மீடியா காதலனை ஏவிய பெண்

ஆசிட் வீசிய பெண்உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அம்ரோஹா மாவட்டத்தில் இருக்கும் திக்ரி என்ற கிராமத்தைச் சேர்ந்த சுகுனா(22) என்ற ஆசிரியை பள்ளிக்குச் சென்றுவிட்டு ஸ்கூட்டரில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந... மேலும் பார்க்க

மதுரை: கழிவறை ஜன்னல் வழியாக பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்த மின்வாரிய ஊழியர் கைது

கழிவறையில் மொபைல் போன் வைத்து சக பெண் ஊழியர்களை வீடியோ எடுத்த மின்வாரிய ஊழியர் கைது செய்யப்பட்ட சம்பவம் வாடிப்பட்டி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆபாச வீடியோமதுரை மாவட்டத்திலுள்ள மின்வாரிய அ... மேலும் பார்க்க

மதுரை: போலீஸ் கஸ்டடியில் சிறுவன் மரணம்; இன்ஸ்பெக்டர், போலீஸாருக்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை

விசாரணையில் உயிரிழந்த சிறுவன்மதுரை கோச்சடை பகுதியைச் சேர்ந்த ஜெயா என்பவரின் மகன் முத்து கார்த்திக் என்ற 17 வயதுச் சிறுவனை கடந்த 2019 ஆம் ஆண்டு ஒரு வழக்கு தொடர்பான விசாரணைக்காக எஸ்.எஸ்.காலனி காவல் நிலை... மேலும் பார்க்க