செய்திகள் :

கோத்தகிரி: தலையில் காயம்,தேயிலைத் தோட்டத்தில் மர்மாக கிடந்த வடமாநில பெண்ணின் சடலம்; விசாரணை தீவிரம்!

post image

நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேயிலைத் தோட்டங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் அதிக எண்ணிக்கையிலான வடமாநில தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேயிலை தோட்டங்களைப் பொறுத்தவரை பெரும்பாலான வடமாநில தொழிலாளர்கள் தோட்ட குடியிருப்புகளில் குடும்பமாக தங்கி அங்கேயே பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேயிலை தோட்டத்தில் வடமாநில பெண் சடலம்

சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் , தன்னுடைய மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் கோத்தகிரி, அரவேணு பகுதியில் உள்ள 'நில்கிரி கிளன்பர்ன்' என்கிற தனியார் தேயிலை தோட்டத்தில் வேலை செய்து வந்துள்ளார். 3 மாதங்களாக அதே நிறுவனத்தின் தேயிலை தொழிற்சாலையில் வேலை செய்து வந்த நிலையில், கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் அவரின் மனைவி திடீரென மாயமாகியிருக்கிறார். அக்கம்பக்கத்தில் தேடப்பட்டு வந்த நிலையில், அருகில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

தொழிலாளி மனைவியின் மர்ம மரணம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து தெரிவித்த கோத்தகிரி காவல்துறையினர், " சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த 35 வயதான இந்த பெண் கணவர் மற்றும் 3 குழந்தைகளை பராமரித்து வந்திருக்கிறார். வீட்டிலிருந்து நேற்று முன்தினம் இரவு திடீரென மாயமான இவர், தலையில் காயங்களுடன் அருகில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

தேயிலை தோட்டத்தில் வடமாநில பெண் சடலம்

பெண்ணின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வடமாநில பெண் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறோம். முதல்கட்டமாக சந்தேக மரணப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது‌. உடற்கூறாய்வு முடிவுகளின் அடிப்படையிலேயே அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

வடமாநில பெண் ஒருவர் தனியார் தேயிலைத் தோட்டத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

``இனிமே இங்க வந்தா கொன்னுடுவோம்" - ஆம்புலன்ஸ் டிரைவரின் புகார் - FIR சொல்வது என்ன?

தவெக தலைவர் விஜய் பரப்புரையில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் எழுந்திருக்கின்றன. அதில் மிகவும் முக்கியமானது ஆ... மேலும் பார்க்க

சிக்கன் கேட்டதால் அடி; 7 வயது மகன் உயிரிழப்பு - தாய் கைது

மும்பை அருகில் உள்ள பால்கர் காசிபாடாவில் வசிப்பவர் பல்லவி. இவருக்கு 7 மற்றும் 10 வயதில் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அவரது 7 வயது மகன் வீட்டில் சிக்கன் குழம்பு வைக்... மேலும் பார்க்க

சென்னை: காதல் ஜோடியை மிரட்டிய கும்பல் - ஆன்லைன் மூலம் பணத்தை பறித்ததால் சிக்கிய பின்னணி!

வில்லிவாக்கத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், படப்பையை அடுத்த மணிமங்கலம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணைக் காதலித்து வந்திருக்கிறார். சம்பவத்தன்று மணிமங்கலம் பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் அமர்ந்து ப... மேலும் பார்க்க

`காதலிக்க மறுத்த ராணுவ வீரரின் காதலி மீது ஆசிட் வீச்சு' - சோசியல் மீடியா காதலனை ஏவிய பெண்

ஆசிட் வீசிய பெண்உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அம்ரோஹா மாவட்டத்தில் இருக்கும் திக்ரி என்ற கிராமத்தைச் சேர்ந்த சுகுனா(22) என்ற ஆசிரியை பள்ளிக்குச் சென்றுவிட்டு ஸ்கூட்டரில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந... மேலும் பார்க்க

மதுரை: கழிவறை ஜன்னல் வழியாக பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்த மின்வாரிய ஊழியர் கைது

கழிவறையில் மொபைல் போன் வைத்து சக பெண் ஊழியர்களை வீடியோ எடுத்த மின்வாரிய ஊழியர் கைது செய்யப்பட்ட சம்பவம் வாடிப்பட்டி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆபாச வீடியோமதுரை மாவட்டத்திலுள்ள மின்வாரிய அ... மேலும் பார்க்க

மதுரை: போலீஸ் கஸ்டடியில் சிறுவன் மரணம்; இன்ஸ்பெக்டர், போலீஸாருக்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை

விசாரணையில் உயிரிழந்த சிறுவன்மதுரை கோச்சடை பகுதியைச் சேர்ந்த ஜெயா என்பவரின் மகன் முத்து கார்த்திக் என்ற 17 வயதுச் சிறுவனை கடந்த 2019 ஆம் ஆண்டு ஒரு வழக்கு தொடர்பான விசாரணைக்காக எஸ்.எஸ்.காலனி காவல் நிலை... மேலும் பார்க்க