செய்திகள் :

சிக்ஸர்களை குறிவைக்கும் தோனி: சிஎஸ்கே கேப்டன்

post image

ஐபிஎல் போட்டிகளில் சிக்ஸர்களை குறிவைத்து தோனி ஆடவுள்ளதாகவும், அவரின் ஆட்டத்தைக் காண ஆவலுடன் உள்ளதாகவும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் ஜெய்க்வாட் தெரிவித்துள்ளார்.

சென்னை சூப்பா் கிங்ஸ் - மும்பை இண்டியன்ஸ் அணிகள் ஞாயிற்றுக்கிழமை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று (மார்ச் 23) மோதவுள்ளன. இந்தப் போட்டி இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

இதனிடயே சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், தோனி குறித்து செய்தியாளர் சந்திப்பில் கூறியது பலரால் பகிரப்பட்டு வருகிறது.

தோனி குறித்து ருதுராஜ் பேசியதாவது,

''தோனி சென்னை அணியின் இம்பாக்ட் வீரர் தான். அவரை ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் அத்தனை வீரர்களும் உத்வேகம் பெறுகிறோம். அவர் பந்துகளை அடிக்கும் அளவுக்கு, எங்களால் கூட அடிக்க முடியவில்லை. 43 வயதில் அணிக்காக அவர் செய்து வரும் பணிகள் பாராட்டுக்குரியவை.

எவ்வளவு அதிகமாக சிக்ஸர்கள் அடிக்கலாம் என்பதில்தான் அவர் கவனம் செலுத்துகிறார். அவரின் உடல்நிலை முன்பைவிட குறைந்ததாக நான் ஒருபோதும் நினைத்ததில்லை'' எனக் குறிப்பிட்டார்.

தமிழக வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்படுமா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர்,

''அது எங்களது கட்டுப்பாட்டில் இல்லை. ஆனால் இந்த ஆண்டின் பந்துவீச்சுத் தாக்குதல் எதிரணிக்கு ஒரு பெரிய அச்சுறுத்தலாக இருக்கும். அணிக்கு சிறந்தது எது?, எந்த இணை சிறப்பாக இருக்கும் என்பதற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது முக்கியமல்ல.

தொடக்க வீரர்களின் இணை முந்தைய ஆட்டங்களை போன்று இருக்கும். எங்கள் அணியில் அனைவரும் முதல் மூன்று இடங்களில் ஆடக்கூடியவர்கள்'' எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | சென்னையின் சுழலை சமாளிக்குமா மும்பை?: இன்று மோதல்

இம்பாக்ட் பிளேயரின் இலக்கணம்

சென்னை எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, மும்பை இண்டியன்ஸ் நிா்ணயித்த வெற்றி இலக்கை நோக்கி சென்னை சூப்பா் கிங்ஸ் விளையாடிக் கொண்டிருந்தது. தொடக்கத்திலேயே ஒரு விக்கெட்டை இழ... மேலும் பார்க்க

ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப்

குஜராத் டைடன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 5ஆவது ஆட்டத்தில் பஞ்சாப், குஜ்ராத் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற குஜராத் டைட்ட... மேலும் பார்க்க

16 சிக்ஸர்கள், 22 பவுண்டரிகள்: பஞ்சாப் 243 ரன்கள் குவிப்பு!

பஞ்சாப் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸுக்கு 244 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ஐபிஎல் தொடரில் 5ஆவது போட்டியில் பஞ்சாப், குஜ்ராத் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சை ... மேலும் பார்க்க

முதல் போட்டி தோல்வி குறித்து அதிகம் கவலைப்படவில்லை: கேகேஆர் பயிற்சியாளர்

ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து அதிகம் கவலைப்படவில்லை என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் தெரிவித்துள்ளார்.ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் அண்மையி... மேலும் பார்க்க

திறமை மீது நம்பிக்கை இருக்கிறது: ஆட்ட நாயகன் அசுதோஷ் ஷர்மா

ஐபிஎல் போட்டியின் 4-ஆவது ஆட்டத்தில் முதலில் லக்னௌ 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 209 ரன்கள் சோ்க்க, தில்லி 19.3 ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழந்து 211 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது. இக்... மேலும் பார்க்க

நான் இம்பாக்ட் பிளேயர் கிடையாது; என்ன சொல்கிறார் எம்.எஸ்.தோனி?

ஐபிஎல் தொடரில் பின்பற்றப்படும் இம்பாக்ட் பிளேயர் விதி குறித்து மகேந்திர சிங் தோனி மனம் திறந்துள்ளார்.ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் அண்மையில் தொடங்கியது. இதுவரை 4 போட்டிகள் முடிவடைந்துள்ளன. அகமதாபாதில் இ... மேலும் பார்க்க