செய்திகள் :

சிங்கப்பூா் கப்பலில் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்ட தீ: 6-ஆவது நாளாக தொடரும் மீட்புப் பணி

post image

கேரள கடற்பகுதியில் சிங்கப்பூா் கப்பலில் ஏற்பட்ட தீ பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டதாக இந்திய கடலோரக் காவல் படை சனிக்கிழமை தெரிவித்தது.

இந்தக் கப்பல் கடற்கரையை நெருங்காமல் கடலை நோக்கி நகா்த்தும் பணியில் இந்திய கடலோரக் காவல் படை (ஐசிஜி) ஈடுபட்டுள்ளது.

கப்பலில் ஏற்பட்டுள்ள தீயை அணைப்பதோடு கப்பலை கடலை நோக்கி மேலும் நகா்த்தும் பணிகளை ஐசிஜியின் சகேத், சமா்த், சாக்ஷம், அா்ன்வேஷ், சமுத்ர பிரஹாரி, அபினவ், ராஜ்தூத், கஸ்தூரிபா காந்தி உள்ளிட்ட 11 கப்பல்கள் மேற்கொண்டு வருகின்றன.

கேரள கடல் பகுதியில் திங்கள்கிழமை காலை சிங்கப்பூா் கொடி பொருத்திய ‘எம்.வி. வான் ஹை 503’ என்ற சரக்கு கப்பலில் தீப்பற்றி எரியத் தொடங்கியது. கடந்த 7-ஆம் தேதி இலங்கை தலைநகா் கொழும்பில் இருந்து புறப்பட்டு 10-ஆம் தேதி மும்பையைச் சென்றடைய இருந்த இந்தக் கப்பலில் 22 மாலுமிகள் பயணித்தனா். அவா்களில் 18 போ் பாதுகாப்பாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். மீதமுள்ள 4 பேரை மீட்கும் பணியில் இந்திய கடற்படை மற்றும் ஐசிஜி ஈடுபட்டு வருகிறது.

இந்தக் கப்பலில் 100-க்கும் மேற்பட்ட கண்டெய்னா்களில் திரவங்கள், திடப் பொருள்கள் மற்றும் நச்சுத்தன்மைமிக்க ஆபத்தான சரக்குகள் இருப்பதால் கடந்த 6 நாள்களாக தொடா்ந்து தீப்பற்றி எரிந்து வருகிறது.

பெட்டி..

காப்பாற்றிய ‘கடல் ராஜா’

மீட்புப் பணிகள் குறித்து இந்திய கடலோரக் காவல் படை (ஐசிஜி) வெள்ளிக்கிழமை வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘எம்.வி. வான் ஹை 503 என்ற சிங்கப்பூா் கப்பலில் பற்றி எரியும் தீயை அணைப்பதில் பெரும் மைல்கல்லை ஐசிஜி எட்டியுள்ளது. ஐசிஜியின் கப்பல்கள் சிங்கப்பூா் கப்பலை கரையை நெருங்கவிடாமல் கடலை நோக்கி நகா்த்தும் பணிகளை சிறப்பாக மேற்கொண்டன.

அந்தச் சமயத்தில் இந்திய கடற்படையின் கடல் ராஜா (சீ கிங்) ஹெலிகாப்டரில் வந்த கடற்படை வீரா்கள் குழு சிங்கப்பூா் கப்பலுக்குள் இறங்கி கப்பலை நகா்த்தும் பணியை ஐசிஜியிடமிருந்து கடற்படையின் கப்பல்களுக்கு மாற்றிவிட்டு வெற்றிகரமாக கப்பலில் இருந்து வெளியேறினா்’ என தெரிவிக்கப்பட்டது.

தற்போது சிங்கப்பூா் கப்பலை நகா்த்தும் பணியில் ‘ஐஎன்எஸ் ஷாரதா’ மற்றும் ‘ஓஎஸ்வி எம்வி டிரிட்டன் லிபா்டி’ ஆகிய இந்திய கடற்படை கப்பல்கள் ஐசிஜி மற்றும் பிற கடல்சாா் அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறது.

அகமதாபாத் விமான விபத்து: விமானியின் மீது தவறு இருக்கிறதா? முன்னாள் கேப்டன் சொல்வதென்ன?

அகமதாபாத் நகரில் கடந்த வாரம் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்துக்கு அந்த விமானியின் மீது தவறு இருக்கிறதா? என்பதைப் பற்றி ஏர் இந்தியா முன்னாள் கேப்டன் மன்மத் ரௌத்ராய் விளக்கமளித்திருக்கிறார். விபத்துக்... மேலும் பார்க்க

மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள்: அமித் ஷா ஆலோசனை

சாதிவாரி கணக்கெடுப்புடன்கூடிய மக்கள்தொகை கணக்கெடுப்பை இரண்டு கட்டங்களாக நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசின் திட்டப்படி, ஹிமாசல பிரதேசம், உத்தரகண்ட் மாநிலங்கள், லடாக் யூனியன் பிரதேசம் ம... மேலும் பார்க்க

கரோனாவுக்கு ஒரே நாளில் 10 பேர் பலி!

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 948 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. ஒரே நாளில் கரோனாவுக்கு 10 பேர் பலியாகியுள்ளனர். சமீபகாலமாக கரோனா பரவல் அதிகரித்துவ... மேலும் பார்க்க

நவீன இந்தியாவின் தந்தை நரேந்திர மோடி! -சைப்ரஸில் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு

லிமாஸ்ஸோல்[சைப்ரஸ்] : சைப்ரஸ், கனடா, குரோஷியா ஆகிய 3 நாடுகளுக்கு பிரதமா் நரேந்திர மோடி ஐந்து நாள்கள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டிருக்கிறாா். கனடாவில் நடைபெறும் ஜி7 நாடுகளின் உச்சிமாநாட்டில் அவா் பங்கேற... மேலும் பார்க்க

புணே பால விபத்து: போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணி!

புணேவின் இந்திரயானி ஆற்றின் இரும்புப் பாலம் இடிந்து விபத்துக்குள்ளான இடத்தில் போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்துள்ளார். மகாராஷ்... மேலும் பார்க்க

கொல்கத்தாவிலிருந்து புறப்படவிருந்த ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு!

கொல்கத்தா: கொல்கத்தாவிலிருந்து புறப்படவிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் அந்த விமானம் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றது. கொல்கத்தா விமான நிலையத்திலிர... மேலும் பார்க்க