செய்திகள் :

சிசிடிவி காட்சி வெளியானது! கொல்கத்தா சட்டக் கல்லூரி மாணவியை இழுத்துச் செல்லும் இருவர்

post image

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் முதலாம் ஆண்டு சட்டக் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட குற்றச்சாட்டில், கல்லூரியில் இருந்த சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த சிசிடிவி காட்சிகள், மாணவி அளித்திருக்கும் புகாருக்கு மிக முக்கிய ஆதாரமாக இருக்கிறது. அந்த சிசிடிவி காட்சியில், குற்றம்சாட்டப்பட்ட மூன்று பேர், மாணவி, காவலாளி என ஐந்து பேர் இருக்கும் காட்சிகள் பதிவாகியிருப்பதாகக் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

காவல்துறை திரட்டியிருக்கும் சிசிடிவி காட்சியில், சட்டக் கல்லூரியின் நுழைவு வாயிலிருந்து, மாணவியை குற்றம்சாட்டப்பட்ட இருவரும் கல்லூரிக்குள் இழுத்துச் செல்வது பதிவாகியிருப்பதாகவும், அன்றைய தினம்தான் அவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில், ஜூன் 25ஆம் தேதி, பாதுகாவலர் அறையில், முதலாமாண்டு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது.

இந்த சம்பவத்தில், முன்னாள் மாணவர் உள்பட ஏற்கனவே மூன்று பேர் கைது செய்யப்பட்ட நிலையில், போலீஸாா் விசாரணையில் கல்லூரி காவலாளி முன்னுக்குப் பின் முரணான பதில்களைக் கூறியதாலும், சம்பவம் நடைபெற்ற புதன்கிழமை மாலை அவா் கல்லூரியில் பணியில் இருந்தது, அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்ததன் அடிப்படையிலும் அவரும் கைது செய்யப்பட்டார்.

சம்பவம் நிகழ்ந்த புதன்கிழமை மாலை, பாதிக்கப்பட்ட மாணவி தோ்வுக்கான விண்ணப்ப படிவமொன்றை சமா்ப்பிக்க கல்லூரிக்குச் சென்றுள்ளாா். படிவத்தை சமா்ப்பித்த பிறகும், அவா் அங்கேயுள்ள யூனியன் அறையில் வலுகட்டாயமாக காக்க வைக்கப்பட்டுள்ளாா்.

இந்நிலையில், குற்றஞ்சாட்டப்பட்டவா்களில் ஒருவரான கல்லூரியின் முன்னாள் மாணவரும், தற்போதைய ஒப்பந்த ஊழியருமான வழக்குரைஞா் மனோஜித் மிஸ்ரா, மாணவியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளாா்.

இதற்கு அந்த மாணவி மறுப்பு தெரிவிக்க, மனோஜித் மிஸ்ரா, கல்லூரியின் தற்போதைய மாணவா்கள் பிரோமித் முகா்ஜி மற்றும் ஜெய்த் அகமது ஆகியோா் சோ்ந்து, காவலாளி அறையில் மாணவியைக் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளனா்.

இதுதொடா்பான மாணவி அளித்த புகாரின்பேரில், மனோஜித் மிஸ்ரா, பிரோமித் முகா்ஜி, ஜெய்த் அகமது ஆகிய மூவரும் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா். காவலாளி எந்த வகையிலும் தனக்கு உதவ முன்வரவில்லை என்று மாணவி தனது புகாரில் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், அவரும் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

3 ஆண்டுகளாக பூட்டிய அறையில் வாழ்ந்த ஐடி ஊழியர்! காரணம் என்ன?

மும்பையில் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் 3 ஆண்டுகளாக பூட்டிய அறையில் வாழ்ந்துள்ளார். முற்றிலும் வெளி உலகத் தொடர்பே இல்லாமல் ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவை வாங்குவதற்காக மட்டுமே கதவைத் திறந... மேலும் பார்க்க

சிவகுமாருடன் கைகோர்த்தபடி சித்தராமையா! வீண் புரளிகளுக்குப் பதில்!

மைசூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் துணை முதல்வர் சிவகுமாரும் தங்களிடையே கருத்து வேறுபாடு எதுவுமில்லை என்பதை ஒன்றாகக் கைகோர்த்தபடி வெளிப்படுத்தியுள்ளனர்.கர்நாடக முதல்வர் மாற்றப்படுகிறாரா? என்ற சந... மேலும் பார்க்க

புரி நெரிசல் பலி! முதல்வர், துணை முதல்வர் விலக வேண்டும்: காங்கிரஸ்

ஒடிஸாவில் உலகப் புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் ரத யாத்திரையில் எதிர்பாராதவிதமாக ஞாயிற்றுக்கிழமை(ஜூன் 29) கடுங்கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில் பக்தர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் பலர் மயங்கி விழுந்தனர்.... மேலும் பார்க்க

மணிப்பூரில் பதற்றம்! துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலி!

மணிப்பூரில் அடையாளம் தெரியாத நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கும்... மேலும் பார்க்க

ரயில் கட்டணம் நாளை முதல் உயர்வு!

ரயில் கட்டண உயர்வு நாளைமுதல்(ஜூலை 1) அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.நாளை முதல் ரயில்களின் பயணக் கட்டணத்தை உயர்த்த ரயில்வே அமைச்சகம் பரிசீலித்து வந்த நிலையில், நாளை முதல் அமல்படுத்துவதா... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் 2,501 ஆக உயர்ந்த கரோனா!

மகாராஷ்டிரத்தில் கரோனா பாதிப்பு 2,501 ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.கரோனா தொற்று நாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ள நிலையில், ஒருசில மாநிலங்களில் பாதிப்பு அதிகமாகவே பதிவாகி வருக... மேலும் பார்க்க