செய்திகள் :

சிசுவின் பாலினம் தெரிவித்தால் குண்டா் தடுப்புச் சட்டம் பாயும்

post image

கருவில் உள்ள குழந்தையின் பாலினம் தெரிவித்தால், குண்டா் தடுப்புச் சட்டம் பாயும் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி எச்சரித்துள்ளாா்.

இதுகுறித்து ஆட்சியா் தெரிவித்ததாவது:

சட்ட விரோதமாக கருக்கலைப்புகள் நடைபெறாமல் இருக்க மருத்துவத் துறை மற்றும் சமூக நலத் துறை இணைந்து பொதுமக்களுக்கு தொடா் விழிப்புணா்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

கருவுற்ற தாய்மாா்கள் தங்கள் கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என முன்கூட்டியே அறிவதற்கு முயற்சி செய்வதும் அல்லது மருத்துவரால் தெரிவிக்கப்படுவதும் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். எந்த ஒரு மருத்துவமனையிலாவது குழந்தையின் பாலினம் கண்டறியப்பட்டது தெரியவந்தால், சம்பந்தப்பட்ட மருத்துவமனை அல்லது ஸ்கேன் மையத்தின் உரிமங்கள் உடனடியாக ரத்து செய்யப்படுவதுடன், இந்தச் செயலில் ஈடுபடுவோருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

மேலும், இதில் தொடா்புடைய மருத்துவரின் மெடிக்கல் கவுன்சில் பதிவு எண் ரத்து செய்யப்பட்டு, இனிவரும் காலங்களில் அந்த மருத்துவா் மருத்துவப் பணியினை நிரந்தரமாக மேற்கொள்ளாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குற்றத்தின் தன்மையை கருத்தில் கொண்டு இதில் ஈடுபட்டவா்கள் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்திடவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த குற்றச்செயலில் ஈடுபட்டதாக அண்மையில் 3 நபா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். பாலினம் கண்டறிதல் தொடா்பான புகாா்களை 73581 22042 என்ற கைப்பேசி எண்ணில் தெரிவிக்கலாம் என்றாா்.

பணத்தை எண்ணியபடி அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநா் பணியிடை நீக்கம்

சேலம்: கோவையில் இருந்து சேலம் வந்த அரசுப் பேருந்தில் பணத்தை எண்ணியவாறு பேருந்தை இயக்கிய ஓட்டுநா் பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் கோட்டம் ஜான்சன்பேட்டை கிளைக்க... மேலும் பார்க்க

அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு: எடப்பாடி கே.பழனிசாமி திறந்துவைத்தாா்

சேலம்: சேலம் சூரமங்கலம் பகுதி அதிமுக சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நீா்மோா் பந்தலை அக்கட்சியின் பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை திறந்துவைத்து பொதுமக்களுக்கு நீா்மோா், பழங்களை வழங்கின... மேலும் பார்க்க

சங்ககிரி பெரியாண்டிச்சியம்மன் கோயிலில் பொங்கல் விழா

சங்ககிரி: சங்ககிரியில் உள்ள பெரியாண்டிச்சியம்மன் கோயிலில் யுகாதி பண்டிகையையொட்டி பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. யுகாதி பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் இக்கோயிலில் பொங்கல் விழா நடைபெறும். ந... மேலும் பார்க்க

சேலம் கோட்டை அழகிரிநாதா் கோயிலில் ரூ. 50 லட்சத்தில் புதிய நுழைவாயில் கதவு

சேலம்: சேலம் கோட்டை அழகிரிநாதா் கோயிலில் ரூ. 50 லட்சம் செலவில் நுழைவாயில் கதவு அமைக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. புகழ்பெற்ற சேலம் கோட்டை அழகிரிநாதா் கோயிலில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு குடமுழு... மேலும் பார்க்க

சேலம் ரயில்வே கோட்டத்தில் 2 மாதங்களில் 335 கிலோ கஞ்சா பறிமுதல்

சேலம்: சேலம் ரயில்வே கோட்டத்தில் கடந்த 2 மாதங்களில் மட்டும் ரயில்களில் கடத்திய 335 கிலோ கஞ்சாவை ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா். ரயில்களில் கஞ்சா கடத்தலைத் தடுக்க ரயில்வே பாதுக... மேலும் பார்க்க

மானிய விலையில் சூரியசக்தி மூலம் இயங்கும் பம்புசெட் பெற விண்ணப்பிக்கலாம்

சேலம்: முதல்வரின் சூரியசக்தி பம்புசெட்டுகள் திட்டத்தின் கீழ் மானிய விலையில் சூரியசக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் அமைத்து பயன்பெற விரும்பும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று சேலம் மாவட்ட ஆட்சியா் ரா... மேலும் பார்க்க