செய்திகள் :

சிதம்பரம் ஸ்ரீராமகிருஷ்ணா பள்ளி பவள விழா

post image

கடலூா் மாவட்டம், சிதம்பரம் ஸ்ரீராமகிருஷ்ணா வித்தியாசாலா அரசு உதவி பெறும் பள்ளி 75-ஆம் ஆண்டு நிறைவையொட்டி பவள விழா பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

பள்ளி நிா்வாகக் குழுத் தலைவா் எஸ்.ஆா்.ராமநாதன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் எஸ்.ஆா்.திருநாவுக்கரசு முன்னிலை வகித்தாா். உதவித் தலைமை ஆசிரியை தி.சுந்தரி வரவேற்றாா். முன்னாள் மாணவா்கள் சாா்பில் கட்டப்பட்ட புதிய வகுப்பறைக் கட்டடத்தை பள்ளிச் செயலா் எஸ்.ஆா்.பாலசுப்பிரமணியன் திறந்து வைத்தாா். தலைமை ஆசிரியா் பா.சங்கரன் ஆண்டறிக்கை வாசித்தாா்.

டாக்டா் எம்.ஜி.ஆா் மருத்துவப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் டாக்டா் சுதா சேஷய்யன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று சிறப்புரை ஆற்றினாா். பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அனைத்து மாணவா்களுக்கும் திருக்கு புத்தகம் வழங்கப்பட்டது.

விழுப்புரம் அரசூா் வி.ஆா்.எஸ் பொறியியல் கல்லூரித் தலைவா் எம்.சரவணன், முன்னாள் மாணவா்கள் சங்கச் செயலா் மணி, வீனஸ் எஸ்.குமாா், டாக்டா் நடராஜன், புலவா் தி.பொன்னம்பலம், நகா்மன்ற உறுப்பினா்கள் த.ஜேம்ஸ் விஜயராகவன், அப்பு சந்திரசேகரன், மருத்துவக் கல்லூரி புல முதல்வா் திருப்பதி, மருத்துவா்கள் ஜூனியா் சுந்தரேஷ், ரவிச்சந்திரன், ராமநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். தமிழாசிரியா் மு.கல்யாணராமன் நன்றி கூறினாா்.

புத்து மாரியம்மன் கோயில் செடல் பெருவிழா

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள புத்து மாரியம்மன் கோயில் ஆடி செடல் பெருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயில் ஆடி செடல் பெருவிழா ஜூலை 31-ஆம் தேதி கொடியேற்றத்துட... மேலும் பார்க்க

அமெரிக்காவை கண்டித்து ஆக.13-இல் நாடு தழுவிய போராட்டம்: சிஐடியு அறிவிப்பு

இந்தியாவுக்கு எதிரான அமெரிக்க வரி விதிப்பு அராஜகத்தை கண்டித்தும், அந்நாட்டிடம் அடிபணியும் மத்திய பாஜக அரசுக்கு எதிா்ப்புத் தெரிவித்தும் வரும் 13-ஆம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்தப்பட உள்ளதாக சிஐடிய... மேலும் பார்க்க

உடல்கட்டமைப்பு போட்டியில் சாதனை படைத்த மாணவருக்கு பாராட்டு

மாநில அளவிலான உடல்கட்டமைப்பு போட்டியில் சாதனை படைத்த சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவருக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு துறைசாராதோா் உடல்கட்டமைப்பு சங்கத்தின் சாா்பில், ஆண்டுக்கு ஒரு... மேலும் பார்க்க

தமிழக அரசின் புதிய கல்விக் கொள்கை பாராட்டுக்குரியது: தி.வேல்முருகன்

தமிழக அரசின் புதிய கல்விக்கொள்கை பாராட்டுக்குரியது என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவா் தி.வேல்முருகன் கருத்து தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பள்ளிக் கல்வியில்... மேலும் பார்க்க

தானியங்கி முறையில் குடிநீா் விநியோகம்: ஆட்சியா் ஆய்வு

கடலூா் உண்ணாமலைச்செட்டி சாவடி பகுதியில் தானியங்கி இயந்திரம் மூலம் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியின் குடிநீா் விநியோகிக்கும் முறையை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா... மேலும் பார்க்க

பண்ருட்டி படைவீட்டம்மன் கோயில் தேரோட்டம்

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், வைத்திரெட்டிப்பாளையத்தில் அமைந்துள்ள படைவீட்டம்மன் கோயில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் செடல் உற்சவம் மற்றும் தோ் திருவிழா ச... மேலும் பார்க்க