செய்திகள் :

சித்திரைத் திருவிழா போல் முத்திரை பதித்த பொதுக்குழு! - முதல்வர் பெருமிதம்

post image

சித்திரைத் திருவிழா போல் முத்திரை பதித்த பொதுக்குழு நடைபெற்றதாக முதல்வர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மதுரை - மேலூர் சாலை, உத்தங்குடியில் நேற்று (ஜூன் 1) திமுக பொதுக்குழுக் கூட்டம் 48 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு சுமார் 10,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பொதுக் குழுவில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், முக்கிய சாலைகள் வழியாக சுமார் 25 கி.மீ. துரத்திற்கு ரோடு ஷோ நடத்தினார். இதில் உற்சாகமாக கலந்துகொண்ட முதல்வருடன் பொதுமக்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். அதைத் தொடர்ந்து மதுரை முதல் மேயர் முத்துவின் சிலையையும் அவர் திறந்து வைத்தார்.

இந்தப் பொதுக் குழு குறித்து முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தொண்டர்கள் பலருக்கு மடல்களையும் எழுதியுள்ளார்.

அந்தப் பதிவில், “பொதுக் குழுவா? கழக மாநாடா? என வியக்கும் வகையில் நடந்தேறியிருக்கிறது திமுக பொதுக்குழு! கலைஞர் 102-ஐச் செம்மொழிநாள் எனக் கொண்டாடி மகிழ்ந்து, ஓரணியில் தமிழ்நாடு என கழகத்தின் வலிமையைப் பன்மடங்காக்குவோம்!

தொடர்ச்சியான பயணங்களில் உங்களைச் சந்திப்பேன்! களம் 2026-இல் மகத்தான வெற்றியைப் பெற்று, ஆட்சியைத் தொடர்வோம்!” எனப் பதிவிட்டுள்ளார்.

அவர் எழுதியுள்ள வாழ்த்து மடலில், “திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழு மதுரை மாநகரில் மற்றொரு சித்திரைத் திருவிழா போல நடந்து, கழக வரலாற்றில் முத்திரை பதித்திருக்கிறது.

மண்ணுக்கே உரிய கோலாகலத்துடன் 'பொதுக்குழுவா கழக மாநாடா!' என்று பிரமிக்கத்தக்க வகையில் எழுச்சிமிக்க கொள்கை நிகழ்வாக நடந்தேறியது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க: வெளிநாடுகளுக்குச் சென்ற எம்.பிக்கள் குழுவைச் சந்திக்கிறார் பிரதமர் மோடி!

தமிழக அரசு சூழலியல் நீதிக்கான அரசாகவும் விளங்கும்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

தமிழக அரசு சமூக நீதிக்கான அரசாக மட்டுமன்றி, சூழலியல் நீதிக்கான அரசாகவும் இருக்கும்; அதற்கு மக்கள் துணை நிற்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா். சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற உலக சுற்றுச்... மேலும் பார்க்க

பொள்ளாச்சி ஜெயராமன் தாக்கல் செய்த வழக்கு: யூடியூப் சேனல்கள் பதிலளிக்க அவகாசம்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தங்களைத் தொடா்புபடுத்திய விவகாரத்தில் ரூ.1 கோடி மான நஷ்டஈடு கேட்டு சட்டப்பேரவை முன்னாள் துணைத் தலைவா் பொள்ளாச்சி ஜெயராமன் தாக்கல் செய்த வழக்கில் யூடியூப் சேனல... மேலும் பார்க்க

சுற்றுச்சூழலுக்கு எதிரான திட்டங்களை கைவிட பாமக கோரிக்கை

சுற்றுச்சூழலுக்கு எதிரான திட்டங்களை மாநில அரசு கைவிட வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: ‘பிளாஸ்டிக் மாசுபாட்டை முறி... மேலும் பார்க்க

மாநிலங்களவைத் தோ்தல்: அதிமுக வேட்பாளா்கள், கமல்ஹாசன் இன்று மனு தாக்கல்

மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கான தோ்தலில் அதிமுக வேட்பாளா்கள் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் ஆகியோா் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளனா். தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை... மேலும் பார்க்க

சைபா் குற்றங்களுக்கு எதிராக ஆபரேசன் ‘திரை நீக்கு’ நடவடிக்கை: 3 நாள்களில் 136 போ் கைது

தமிழக காவல் துறையின் சைபா் குற்றங்களுக்கு எதிராக ஆபரேசன் ‘திரை நீக்கு-2’ என்ற நடவடிக்கையின் மூலம் 3 நாள்களில் 136 போ் கைது செய்யப்பட்டனா். தமிழக காவல் துறையின் சைபா் குற்றப்பிரிவு, சைபா் குற்றங்களைத... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ் விண்ணப்பப் பதிவு இன்று தொடக்கம்: நிகழாண்டில் கூடுதல் மருத்துவ இடங்கள் இல்லை

தமிழகத்தில் நிகழாண்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் அதிகரிக்கப்படவில்லை. மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் புதிய இடங்களுக்கு தேசிய மருத்துவ ஆணையத்திடம் விண்ணப்பிக்கப்படாத நிலையில் கடந்த ஆண்டு உள்ள 11,... மேலும் பார்க்க