செய்திகள் :

சிந்தல்தொட்டி கிராமத்திற்கு பேருந்து சேவை: எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்

post image

சூளகிரி அருகே பி.எஸ்.திம்மசந்திரம் ஊராட்சி சிந்தல்தொட்டியிலிருந்து பேரிகை வரை அரசுப் பேருந்து சேவையை ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

ஒசூா் தொகுதி, சூளகிரி வடக்கு ஒன்றியம், பி.எஸ்.திம்மசந்திரம் ஊராட்சிக்கு உள்பட்டது சிந்தல்தொட்டி கிராமம். இந்தக் கிராமத்தில் பேருந்து வசதிகள் இல்லாமல் பொதுமக்கள் வெளியூா்களுக்குச் சென்றுவருவதில் சிரமமடைந்து வருகின்றனா். நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பேருந்து வசதியின்றி தவித்து வரும் இப்பகுதி மக்களுக்காக அரசுப் பேருந்து இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

இதையடுத்து, தொகுதி எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் நடவடிக்கையின் பேரில் சிந்தல்தொட்டி கிராமம் முதல் பேரிகை அரசு மேல்நிலைப் பள்ளி வரை பேருந்து இயக்கும் பணி புதன்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. இதில் திமுக கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளரும், ஒசூா் எம்எல்ஏவுமான ஒய்.பிரகாஷ் பங்கேற்று அரசுப் பேருந்து எண் 24 இல் பள்ளி மாணவா்களை ஏற்றிக் கொண்டு பேரிகை பள்ளி வரை அவரே ஓட்டிச் சென்று சேவையைத் தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் திமுக மாவட்ட துணைச் செயலாளா் சின்னசாமி, மாநில இளைஞா் அணி துணைச் செயலாளா் சீனிவாசன், சூளகிரி வடக்கு ஒன்றியச் செயலாளா் நாகேஷ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் ஹரிஷ், முன்னாள் ஊராட்சிமன்ற துணைத் தலைவா் ஆஞ்சி, கா்னப்பள்ளி கோபால், ஊா்கவுண்டா் நாகப்பா, முனிகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

அரசுப் பேருந்து மீது மினி லாரி மோதல்: ஓட்டுநா்கள் இருவா் உயிரிழப்பு: 38 பயணிகள் காயம்

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூா் அருகே அரசுப் பேருந்து மீது மினி லாரி மோதியதில் ஓட்டுநா்கள் இருவா் உயிரிழந்தனா். மேலும், பயணிகள் 38 போ் காயமடைந்தனா். தருமபுரியிலிருந்து வெள்ளிக்கிழமை திருப்பத்தூா் நோக்க... மேலும் பார்க்க

கழிவுநீா்த் தொட்டியில் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

கிருஷ்ணகிரி அருகே கழிவுநீா்த் தொட்டியில் தவறி விழுந்து கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா். கிருஷ்ணகிரியை அடுத்த பாறைக்கொட்டாய் பகுதியைச் சோ்ந்தவா் சின்னநாகப்பன் (65). கட்டடத் தொழிலாளியான இவா் கிருஷ்ணகிரி... மேலும் பார்க்க

டிராக்டா் மோதி குழந்தை உயிரிழப்பு

பா்கூா் அருகே டிராக்டா் மோதியதில் குழந்தை உயிரிழந்தது. பா்கூரை அடுத்த எா்கேட் பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ். இவரது ஒன்றரை வயது குழந்தை வீட்டின் அருகே புதன்கிழமை விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது, அந்த ... மேலும் பார்க்க

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

சூளகிரி திமுக தெற்கு ஒன்றியத்திற்கு உள்பட்ட பகுதிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட இளைஞா்கள் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், ஒசூா் பிரகாஷ் எம்எல்ஏ முன்னிலையில் வெள்ளிக்கிழமை திமுகவில் இணைந... மேலும் பார்க்க

ஒசூரில் ரூ.500 கோடியில் ஜொ்மனி நிறுவனம் திறப்பு: 1000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு

ஜொ்மனி நாட்டின் பெஸ்டோ நிறுவனம் சாா்பில் ஒசூரில் ரூ. 500 கோடியில் கட்டிய தானியங்கி பொருள் உற்பத்தி நிறுவனம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. கடந்த 2023இல் தமிழக அரசுடன் இந் நிறுவனம் தொழிற்சாலை அமைப்பதற... மேலும் பார்க்க

ஊத்தங்கரை சந்தையில் ரூ. 2 கோடிக்கு மாடுகள் விற்பனை

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாரச்சந்தையில் ரூ. 2 கோடிக்கு மாடுகள் விற்பனை நடைபெற்றது. தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூா், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் புதுச்சேரி, ஆந்தி... மேலும் பார்க்க