செய்திகள் :

சிந்து நதி நீா் ஒப்பந்தம் நிறுத்தி வைப்பு ஏன்? நாடாளுன்ற குழுவிடம் வெளியுறவு அமைச்சகம் விளக்கம்

post image

இந்தியாவின் நல்லெண்ண முயற்சியால் மேற்கொள்ளப்பட்ட சிந்து நதி நீா் ஒப்பந்தம் நிறுத்தி வைத்ததற்கு பாகிஸ்தான்தான் காரணம் என்று நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டத்தில் வெளியுறவு அமைச்சகம் விளக்கமளித்தது.

பருவநிலை மாற்றம், பனிப்பாறைகள் உருகுதல், பொறியியல் தொழில்நுட்ப மாற்றம் ஆகிய கள நிலவரங்கள் சிந்து நதி நீா் ஒப்பந்த பேச்சுவாா்த்தையில் கடினமானநிலையை ஏற்படுத்தியதாகவும், இந்தியாவின் நல்லெண்ண நடவடிக்கைகளை நிறுத்த வைக்க பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சிக்கு பதிலாக சிந்து நத் நீா் ஒப்பந்தம் நிறுத்தும் நிலை ஏற்பட்டதாகவும் வெளியுறவு அமைச்சகம் காரணம் தெரிவித்துள்ளது.

மேலும், 1950-களில் இருந்த பொறியியல் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தத்தை, தற்போதைய நிலைக்கு ஏற்ப அரசுகளுக்கு இடையேயான பேச்சு மூலம் தீா்வு காணலாம் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு பாகிஸ்தான் முட்டுக்கட்டை போட்டு வருகிறது.

தொடா் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை மேற்கொண்டு ஒப்பந்தங்கள் மீறும் பாகிஸ்தானுக்கு எதிராக ஒப்பந்தங்களை நிறுத்தி வைக்க இந்தியாவுக்கு உரிமை உள்ளதாகவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த காரணங்களையே வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய எம்.பி.க்கள் குழுவினா் தெரிவிப்பாா்கள் என்றும் கூறப்படுகிறது.

பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்ற சம்பவத்தைத் தொடா்ந்து சிந்து நதி நீா் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்தது. இந்த ஒப்பந்தம் தொடா்பாக ஆண்டுதோறும் இரு நாட்டு அதிகாரிகள் மத்தியில் பேச்சுவாா்த்தை நடைபெற்று வந்தது.

மழைக்கு இடிந்து விழுந்த காவல் அலுவலகம்: உள்ளே தூங்கிக்கொண்டிருந்த காவலர் பலி

காசியாபாத்தில் மழைக்கு காவல் அலுவலகம் இடிந்து விழுந்ததில் காவலர் ஒருவர் பலியானார். உத்தரப் பிரதேச மாநிலம், காசியாபாத்தில் மழைக்கு உதவி காவல் ஆணையர் அங்கூர் விஹார் லோனி அலுவலகத்தின் கூரை திடீரென இடிந்த... மேலும் பார்க்க

ம.பி.யில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான தலித் பெண் பலி

மத்திய பிரதேசத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மத்திய பிரதேசம் மாநிலத்தில் கான்ட்வா மாவட்டத்தில் இருந்து 90 கி.மீ தொலைவில், வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க

தாணேவில் 21 வயது இளைஞர் கரோனாவுக்கு பலி

தாணேவில் 21 வயது இளைஞர் கரோனாவுக்கு பலியாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம், மும்ப்ராவைச் சேர்ந்த 21 வயது நபர் மே 22ஆம் தேதி தாணேயில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் கால்வா மருத்து... மேலும் பார்க்க

அமெரிக்கா: பாகிஸ்தான் எதிர்விளைவைப் பெறும்! சசி தரூர் எச்சரிக்கை!

பஹல்காம் தாக்குதலுக்காக பாகிஸ்தான் தகுந்த எதிர்விளைவைப் பெறும் என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தெரிவித்தார்.ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் தாக்குதலையடுத்த... மேலும் பார்க்க

தெலங்கானா: உலக அழகிப் போட்டியில் விலைமாது, குரங்கைப்போல உணர்ந்ததாக இங்கிலாந்து அழகி குற்றச்சாட்டு!

தெலங்கானாவில் நடைபெறும் உலக அழகிப் போட்டியில் கண்ணியக் குறைவாக நடத்தப்படுவதாக இங்கிலாந்து அழகி மில்லா மேகி குற்றம் சாட்டியுள்ளார்.தெலங்கானா மாநிலத்தில் ஹைதராபாதில் 72 ஆவது உலக அழகிப் போட்டி (Miss Worl... மேலும் பார்க்க

பெங்களூரு: கரோனா தொற்று பாதித்தவர் உயிரிழப்பு? மருத்துவர்கள் மறுப்பு!

பெங்களூரில் கரோனா தொற்று பாதித்தவர் உயிரிழந்ததாகப் பரவிய வதந்திக்கு மருத்துவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.பெங்களூரில் 84 வயதான முதியவர் ஒருவர், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மே 13 ஆம் தேதியில் தனியா... மேலும் பார்க்க