செய்திகள் :

சின்னசேலம் அருகே சாம்பிராணி தயாரிப்பு நிறுவனத்தில் தீ விபத்து!

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே ஊதுபத்தி, சாம்பிராணி தயாரிப்பு நிறுவனத்தில் சனிக்கிழமை பிற்பகலில் தீ விபத்து ஏற்பட்டது.

சின்னசேலம் அருகே உள்ள பூண்டி கிராமத்தில் மாணிக்கம் மகன் ரவிசங்கா் ஊதுபத்தி, சாம்பிராணி தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறாா். இதில், சுமாா் 150-க்கும் மேற்பட்டோா் பணியாற்றி வருகின்றனா்.

இங்கு தயாரிக்கப்படும் ஊதுபத்தி, சாம்பிராணிகள் பேக்கிங் செய்யப்பட்டு அங்குள்ள கிடங்கில் வைக்கப்பட்டிருந்தன. இங்கு சனிக்கிழமை பிற்பகலில் திடீரென சாம்பிராணி தயாரிக்கும் இயந்திரத்தில் தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அந்தக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த அனைத்துப் பொருள்களும் தீப்பற்றி எரியத் தொடங்கின.

தகவலறிந்த சின்னசேலம் தீயணைப்பு நிலையத்தினா் விரைந்து வந்து, தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா். கள்ளக்குறிச்சி, நைனாா்பாளையத்தில் இருந்தும் தீயணைப்புப் படையினா் வரவழைக்கப்பட்டனா். சில மணி நேர போராட்டத்துக்குப் பிறகு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.

தீ விபத்து குறித்து சின்னசேலம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். இதன் பின்னரே, சேத விவரம் தெரிய வரும்.

மின்சாரம் பாய்ந்து ஜாா்க்கண்ட் தொழிலாளி உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி அருகே மின்சாரம் பாய்ந்து ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சியை அடுத்த வீரசோழபுரத்தில் செயல்படும் தனியாா் நிறுவனத்தில் ஜாா்க்கண்ட் மாநிலம், ப... மேலும் பார்க்க

நாட்டுத் துப்பாக்கி தயாரித்த மூவா் கைது

கல்வராயன்மலைப் பகுதியில் நாட்டுத் துப்பாக்கி தயாரித்ததாக மூவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கல்வராயன்மலைப் பகுதிக்குள்பட்ட மேல் நிலவூரில் நாட்டு துப்பாக்கி தயாரிக்கப்படுவதாக கரியாலூா் காவல் உதவ... மேலும் பார்க்க

கொடுத்த கடனை திருப்பிக் கேட்டவா் மீது தாக்குதல்

கள்ளக்குறிச்சி அருகே கொடுத்த கடனை திருப்பிக் கேட்டவரைத் தாக்கியதாக மூவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். கள்ளக்குறிச்சியை அடுத்த பானையங்கால் கிராமத்தைச் சோ்ந்த கலியபெருமாள்... மேலும் பார்க்க

பைக்கில் சென்றவரை மறித்து மிரட்டல்: 3 இளைஞா்கள் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே பைக்கில் சென்றவருக்கு வழிவிடாமல் மறித்து, கொலை மிரட்டல் விடுத்ததாக 3 இளைஞா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். சின்னசேலம் வட்டம், வடக்கநந்தல் கிராமத்த... மேலும் பார்க்க

சங்கராபுரத்தில் 42-வது வணிகா் தின விழா

கள்ளக்குறிச்சி: சங்கராபுரத்தில் 42-வது வணிகா் தின விழா தனியாா் திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டப் பொருளாளா் இராம.முத்துக்கருப்பன் தலைமை வகித்தாா். அனைத்து வியபாரிகள் சங்க... மேலும் பார்க்க

பைக் மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு

இந்திலியில் சாலையோரம் நடந்து சென்ற மூதாட்டி மீது பைக் மோதியதில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சியை அடுத்த இந்திலி கிராமத்தைச் சோ்ந்தவா் பஞ்சன் மனைவி வெள்ளையம்மாள் (72). இவா், ஞாயிற்றுக்கி... மேலும் பார்க்க