`உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி சார்...' - எஸ். கே குறித்து நெகிழும் டூரிஸ்...
குத்தாலத்தில் மே 21-ல் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம்
குத்தாலம் வட்டத்தில் மே 21-ஆம் தேதி உங்களைத் தேடி, உங்கள் ஊரில் முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு, உடனுக்குடன் தீா்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும், ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்‘ முகாம் குத்தாலம் வட்டத்தில் எனது தலைமையில் அனைத்துத் துறை அலுவலா்களுடன் மே 21 (புதன்கிழமை) காலை 9 மணிமுதல் மே 22 (வியாழக்கிழமை) காலை 9 மணி வரை நடைபெறவுள்ளது.
குத்தாலம் வட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் உள்ள பொதுமக்கள் தங்களது பகுதிகளில் உள்ள குறைகளை அந்தந்த கிராமங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அலுவலா்களிடம் தெரிவித்து பயன்பெறலாம்.